உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விளம்பர விழாவால் எந்த பயனும் இல்லை: அண்ணாமலை விமர்சனம்

விளம்பர விழாவால் எந்த பயனும் இல்லை: அண்ணாமலை விமர்சனம்

கோவை : பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை: கோவையில் வரும் 15ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., முப்பெரும் விழா நடக்கிறது.முதலில் ஜூன் 14ல் நடத்த முடிவு செய்தனர்; பண மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட தேதி என்பதால், நாற்பெரும் விழாவாக கொண்டாட வேண்டுமோ என்ற பயத்தில், விழாவை ஒரு நாள் தள்ளி வைத்திருக்கின்றனர்; வாழ்த்துகள்.மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியும், நுாதன முறையில் கட்டண உயர்வை கொண்டு வந்தும், கோவை பகுதி குறு, சிறு தொழிற்சாலைகளை தி.மு.க.,வினர் முடக்கினர்.பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அழித்ததுடன், ஒரு துறை விடாது அத்தனை தொழில் துறைகளிலும் கமிஷன், கலெக் ஷன் என அதிகாரத்தை முழுமையாக துஷ்பிரயோகம் செய்தனர்.'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை முழுமையாக பயன்படுத்தாமல், கோவை மாநகரில் சரியான சாலைகள் கூட அமைக்காமல், மூன்று ஆண்டுகளை கழித்துவிட்டு, இப்போது முப்பெரும் விழா ஒரு கேடா என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது.சிறுவாணி நதியும், நொய்யல் நதியும், கவுசிகா நதியும் பாழ்பட்டு கிடக்கின்றன. தி.மு.க.,வுக்கு அவை குறித்து எந்தக் கவலையும் இல்லை. கோவைக்கு உடனடி தேவை, சாலை வசதியும், தண்ணீர் பஞ்சத்துக்கான தீர்வும் தான். மாநகரம் முழுக்க குவிந்து கிடக்கும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணி முறையாக நடைபெறுவதில்லை.உண்மையிலேயே தி.மு.க.,வுக்கு கோவை மக்கள் மீது அக்கறை இருக்குமேயானால், 60 ஆண்டு கனவு திட்டமான 'அவினாசி - அத்திக்கடவு' திட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். நீர் நிலைகளை சீரமைத்து, தண்ணீர் பஞ்சத்தை தடுத்திருக்க வேண்டும். சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்திருக்க வேண்டும். தென்னை விவசாயிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து வீண் விளம்பரத்துக்கு விழா எடுப்பதால், மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

MADHAVAN
ஜூன் 15, 2024 18:25

பன்னீர்செல்வம், தமிழகத்துக்கு வரவேண்டிய நலத்திட்டம் மக்களுக்க்கான திட்டங்கள் தூவும் கடந்த பத்துவருடங்களில் வரவில்லை, 23 லட்சம்கோடி குஜராத்துக்கு கடன் கொடுத்த பிஜேபி, தமிழகத்துக்கு கொடுத்தது 70 ஆயிரம்கோடி கடன் மட்டுமே, சும்மா இங்கேவந்து உனது சொந்த கருத்தை போடக்கூடாது, மாதம் இருமுறை சூரத்கு வியாபாரம் நிமித்தம் செய்யும் எங்களுக்கு தெரியும், குஜராத்தில் சிற்றார்கள் வேலைக்கு இருப்பது அதிகம்


Bala
ஜூன் 17, 2024 12:46

இவ்வளவு நாட்கள் தமிழகத்துக்கு ஒரு ருபாய் கூட தரலன்னு அவ்ளோ உருட்டு உருட்டுனீங்க. திராவிடம்னாலே பொய் பித்தலாட்டம்னு இப்ப எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுட்டாய்ங்க


panneer selvam
ஜூன் 14, 2024 18:36

Annamalai ji , Celebrations at government expense is a traditional activity of DMK as per Dravidian Model . As long as people are living under illusion and do not demand development , why Stalin ji has to think about it ?


venugopal s
ஜூன் 14, 2024 17:53

நீங்கள் நடத்திய பாத யாத்திரை, வேல் யாத்திரை ,ரோட் ஷோ இவை எல்லாம் மட்டும் மக்களுக்கு ரொம்பவே பயனுள்ளதா?


MADHAVAN
ஜூன் 14, 2024 13:28

நீ நடைபாதைன்னு ஒரு நாடகம் போட்டியே யாராச்சும் உன்னை சட்டை செஞ்சாங்களா ? உன் வேலைய பாரு,


Bala
ஜூன் 15, 2024 14:20

விடியல்தான் அவர் வேலையை ஒழுங்காக செய்யாமல் விழா அது இதுன்னு விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார்.


MADHAVAN
ஜூன் 14, 2024 13:25

சக்தி அவர்களே , தமிழகம் உருப்படாதுனு எழுதுவது அபத்தமானது, இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக இருப்பது உங்களுக்கு தெரியாதா ? நீங்களா மற்ற மாநிலங்களுக்கு சென்று பாருங்கள் உங்களுக்கு புரியும், தேனெடுப்பவன் புறங்கையை நக்குவான் என்பது பழமொழி, மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்யும்போது பல வழிகளில் ஊழல் நடக்கும்தான், ஏன் நீங்கள் மற்றவர்களை ஒரு இடத்தில கூட ஏமாற்றாமல் வாழ்க்கை நடத்துகிறீர்களா ? தமிழகத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மக்களின் வாழ்க்கைத்தரம் மிகச்சிறப்பாக உள்ளது, நீங்கள் குஜராத்துக்கு சென்று பாருங்கள் அங்கு இன்னும் சரியான கல்வி வசதி இல்லாமல் சிறார்கள் வேலைக்கு செல்வது மிக மிக அதிகம், சூரத்துக்கு சென்று பாருங்கள், பதின்வயது சிறார்கள் வேலைக்கு செல்வது புரியும்,


panneer selvam
ஜூன் 14, 2024 18:27

I think you are not been in Gujarat , majority of the children who are working as child labours are from Bihar, Orissa, Bengal and in rural areas tribal people . A simple fact, last month , GST revenue , Tamilnadu is far behind Gujarat occupying even behind UP . . Try to admit Tamilnadu is slipping on growth path


Azar Mufeen
ஜூன் 14, 2024 13:04

புகார் கொடுத்து ஒரு வருடத்திறகு மேல் ஆகியும் ...


கனோஜ் ஆங்ரே
ஜூன் 14, 2024 11:41

இது முப்பெரும் விழா...ன்னு அவங்க சொன்ன காரணம் இல்ல சாமி... நரகாசுரனை தோற்கடித்த நாள் அன்று எப்படி தீபாவளி கொண்டாடப்படுகிறதோ... அதுபோல, உங்களை உன் தொகுதியிலேயே கதற கதற தோற்கடிச்சதால... அத்துடன், ஓட ஓட விரட்டி அடிப்பேன்னு நீங்க சொல்லி... அவங்க உங்கள ஓட ஓட விட்ட இடத்துல வெற்றிவிழாவ கொண்டாடுறாங்க... இது தெரியாம “விளம்பர விழா”...ன்னு சொல்ற... இது அவங்க கட்சி நடத்துற விழா...? நீ வேன்ல போயிட்டு... நடைபயணம்..னு போனதுக்கு எவ்வளவு விளம்பரம், ச்சே.. இன்னா ஆட்டம், ஆர்ப்பாட்டம்... அதைவிடவா இது....? எரியுதா, அண்ணாமலை எரியட்டும். இது சும்மா ட்ரையல்தான்... மெயின் பிக்சர் இனிமேல்தான் இருக்கு...?


Bala
ஜூன் 17, 2024 12:53

இரு கண்ணா ஒத்த ஆளா ஒட்டுமொத்த திராவிடத்தையே கதற வச்சுருக்காரே அண்ணாமலை. இதுக்கே ஒட்டுமொத்த திராவிடமும் கோவை வந்து கூட்டம்போட்டு பொலம்பினா எப்படி? இன்னும் 2026 க்கு அப்புறம் இருக்கு கண்ணா, கொஞ்சம் பாலன்ஸ் வைய்ங்க


Jai
ஜூன் 14, 2024 11:38

திம்கா சிறுபான்மையினருக்கும் சென்னைக்கும்தான் கஜானாவை திறப்பார்கள். கொங்கு பகுதிக்கு எந்த திட்டமும் வராது. கோவைக்கு மேற்கு ரிங் ரோடு, மேல்மட்ட சாலை, அவினாசி அத்திகடவு திட்டம், பொள்ளாச்சி ரோடு எடப்பாடி அவரால் நடந்தது. அண்ணாமலை தற்போது வெற்றி பெற்று இருந்தால் திருச்சி ரோடு வேலை வேகம் எடுத்திருக்கும். திமுக கொங்கு மண்டலத்தில் எதுவும் செய்யாமல், தற்போது மாநாடு நாடகம் மட்டும் நடத்துகின்றனர். அதற்கு காரணம், காசு பணம் கொடுக்காமல் மலை வாங்கிய 4.5 லட்சம் ஓட்டுகள்தான். கோவை மக்கள் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு பணம் பற்றி கவலைபடாமல் அரசியல் மாற்றத்தை காட்டியுள்ளனர். அண்ணாமலை அவர்கள் வளர்ச்சி இந்த திம்கா நாடகமேடையை கோவையில் போடுவதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.


S. Narayanan
ஜூன் 14, 2024 11:21

இந்த முப்பெரும் நப்பெரும் விழாவுக்கு செலவாகும் நிதியை சென்னை மற்றும் தமிழ் நாடு முழுவதும் உள்ள போக்குவரத்துக்கு லாயக்கு இல்லாத சாலைகளை செப்பனிட்டு சரி செய்தால் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதை விடுத்து ஒரு சிலரை திருப்பிதீ படுத்த இப்படி மக்களின் வரியை விரயமாக்கலாமா.


Rajinikanth
ஜூன் 14, 2024 11:01

பொது வெளியில் உட்கட்சி விவகாரத்தைப் பற்றி பேசினார் என்று பொது வெளியில் வைத்தே அவரைக் கண்டிப்பதா? அமித் ஷ செய்தது தவறு.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை