உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.50,000க்காக அடித்துக் கொலை மே.வங்கத்தில் தொடரும் வன்முறை

ரூ.50,000க்காக அடித்துக் கொலை மே.வங்கத்தில் தொடரும் வன்முறை

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் பொது இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருவது, கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடி ஒன்று பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நடந்த மறுதினமே, வாங்கிய கடனை திருப்பித் தராத நபர் ஒருவர் கட்டி வைத்து அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.ஹூக்ளி மாவட்டத்தின் தாரகேஸ்வரை அடுத்த நைடா மல்பஹார்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிஸ்வஜித் மன்னா என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 50,000 ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை அவர் திருப்பித் தராத நிலையில், இரு தினங்களுக்கு முன் அவர் மாயமாகியுள்ளார்.கடனை கொடுத்தவர், மன்னாவை கடத்திச் சென்று தன் நண்பர் வீட்டில் அடைத்து வைத்ததுடன், மயக்கமடையும் வரை இருவரும் சேர்ந்து அவரை கொடூரமாக தாக்கியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் நேற்று பலியானார்.கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கடந்த 28ம் தேதி துவங்கி, நான்கு நாட்களாக தொடர்ந்து இது போன்ற வன்முறை சம்பவங்கள் மேற்கு வங்கத்தில் அரங்கேறி வருவது, அந்த மாநில மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.இதற்கிடையே, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெண் உட்பட இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் உடனடியாக அறிக்கை கேட்டுள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தலிபான் ஆட்சி நடக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டில், குற்றங்களில் ஈடுபடுவோருக்கு பொது இடங்களில் தண்டனை கொடுக்கப்படும் சம்பவங்கள் நடப்பது வழக்கம்.தற்போது மேற்கு வங்கத்திலும் அது போன்ற சம்பவங்கள் நடப்பது, மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

நரேஷ் பானர்ஜி
ஜூலை 02, 2024 17:26

கடன் குடுத்த மர்ம நபர் பேர் போடலியே?


KRISHNAN R
ஜூலை 02, 2024 12:51

பொய் சொல்ல கூடாது. டிரினாமல் கராங்கோ ரொம்ப மக்களுக்கு சேவை செய்றாங்க பாருங்க பாருங்க


sridhar
ஜூலை 02, 2024 11:58

கனிமொழி என்ன சொல்றீங்க


rsudarsan lic
ஜூலை 02, 2024 11:55

ஒரே ஒரு முறை ஊர் பேர் இல்லாமல் குற்றத்தை ரிப்போர்ட் செய்யுங்க. பிறகு தெரியும் இது குஜராத் டெல்லி தமிழகம் எங்கு நடந்தது என்று மக்கள் ஊகிக்கட்டும். எந்த மாநிலத்தில் நடந்தாலும் ரிப்போர்ட் செய்யுங்கள். முக்கியமாக போலீஸ் மற்றும் நீதிமன்றம் என்ன செய்தது என்பதையும் அறிந்து வெளியிடுங்கள். இந்த செய்தியை தமிழ்நாட்டில் படித்து விட்டு சிரிப்பார்கள் . 500 ரூபாய்க்கு கந்து வட்டி கொடுமை நடைபெறும் மாநிலங்களில் இது


M Ramachandran
ஜூலை 02, 2024 10:01

மக்கள் யோசிக்காமல் செய்த பிழைக்கு 5 வருட தண்டனை. அடுத்த முறையாவது திருந்து வர்களா அல்லது பால்ய குருடி கதையாகா தமிழ்நாடு போல் பாழும் குழியில் விழுவார்களான தெரியாது


UTHAMAN
ஜூலை 02, 2024 09:18

இதெல்லாம் ஸ்டாலினுக்கு உரைக்காதே


Vijay
ஜூலை 02, 2024 08:51

ஆமை புகுந்த வீடும் "அவர்கள்" வாழும் நாடும் உறுபட்டதா சரித்திரம் இல்ல.


duruvasar
ஜூலை 02, 2024 08:06

இந்த புள்ளி கூட்டணி கும்பல்தான் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க பிறந்த கர்மவீரர்களாம். ஒன்றாம் நம்பர் நாடக கும்பல்.


Pandi Muni
ஜூலை 02, 2024 12:14

திருத்தி கொள்ளவும். திருட்டு கூட்டம்


வாய்மையே வெல்லும்
ஜூலை 02, 2024 07:49

சபீனா தீதி வாயே திறக்காது அந்த அம்மையார்


மேலும் செய்திகள்