உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடக்குமுறைக்கு பா.ஜ., அஞ்சாது: அண்ணாமலை சவால்

அடக்குமுறைக்கு பா.ஜ., அஞ்சாது: அண்ணாமலை சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நிர்வாகத் தோல்விகள் தெரியக் கூடாது என்ற பதற்றத்தில் தி.மு.க., அரசு பா.ஜ.,வினரின் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துகிறது. இந்த அடக்குமுறைக்கு எல்லாம் பா.ஜ., அஞ்சாது' என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: கள்ளச்சாராயம் விற்பனையைத் தடுக்காமல், ஐம்பதுக்கும் அதிகமான உயிர்களைப் பலி வாங்கிய திமுக அரசைக் கண்டித்து, பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், கிருஷ்ணகிரி என பல மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட நூற்றுக்கணக்கான பா.ஜ., சகோதர சகோதரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tkgrfjw6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அடக்குமுறை

திமுக அரசின் நிர்வாகத் தோல்வியும், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் திமுகவினருக்கு உள்ள தொடர்பும், பொதுமக்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்ற பதட்டத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பா.ஜ., சகோதர சகோதரிகளை முடக்கப் பார்க்கிறது. இந்த அடக்குமுறைக்கு பா.ஜ., அஞ்சப் போவதில்லை. பிற மாவட்டங்களிலும், இன்று கள்ளச்சாராய மரணங்களுக்குக் காரணமான திமுக அரசைக் கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Saravana
ஜூன் 23, 2024 09:44

உடன்பிறப்புக்கள் இல்லாமல் பார்த்து கொள்ளவும்


Mohan
ஜூன் 23, 2024 07:10

போராட்டதிற்கு வறுவோர் சரக்கு குடிக்காமல் இருந்தால் நல்லது


S Sivakumar
ஜூன் 22, 2024 18:32

சென்ட்ரல் ரிசர்வ் போலீஸார் அல்லது ராணுவ படை தேவை இப்போது தேவை மக்களுக்கு இனி வரும் காலங்களில் தெரியும்


Senthoora
ஜூன் 22, 2024 17:52

ED , புலனாய்வு, வரி துறை, தேர்தல் ஆணையம் எல்லாமே பாஜாகாவிடம் இருக்கே, எதுக்கு பீல்டு அப்.


அப்புசாமி
ஜூன் 22, 2024 16:52

இதே டயலாக்கைத்தான் கெஜ்ரிவாலும் சொல்றாரு.


Palanisamy Sekar
ஜூன் 22, 2024 16:38

நிர்வாக தோல்வி என்பது ஒருபுறம் இந்த அரசுக்கு பாதிப்பு என்றாலும், சாராயம் மூலம் வந்த வருமானம் கடந்த சில தினங்களாக நின்றுவிட்டதுதான் அவர்களின் கோபமெல்லாம். சாராய சாவு நடந்த அதே இடத்தில இன்னமும் சாராய விற்பனை படுஜோராக சிறுவர்களை வைத்து செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். இன்ஸ்ட்டாகிராமில் புகைப்படத்தோடு வந்துள்ளது. ஊடகங்களுக்கு தெரிகின்றது, அங்கே அனுப்பிய இருபதாயிரம் போலீசுக்கு கண்ணில் படலயா என்ன? அல்லது அங்கே உள்ள முக்கிய புள்ளியின் கை ஓங்கியிருக்கான்னு சொல்லுங்க. சர்வாதிகாரியின் தடாலடி என்பதெல்லாம் பாஜகவிடம் செல்லுபடியாகாது.


kannan
ஜூன் 22, 2024 16:34

அஞ்சரது கிஞ்சரது அப்புறமா பார்க்கலம் முதலில் மத்திய அரசைக்கொண்டு ஏதாவது தமிழ்நாட்டுக்கு என்று சில நன்மைகளை எப்படி செய்யலாம் என்று யோசித்து எப்படி மக்களைக் கவர்ந்து ஓட்டு வாங்கலாம் என்று முயற்ச்சிக்கவும். எய்ம்ஸ் மருத்துவமனையை எப்படி சீக்கிரமாக கட்டி முடிக்கலாம்? டோல் கேட்டை ஒழிக்கலாம், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி, நீட்டுக்குப் உதவுதல், ஏதாவது உருப்படியாக செய்து ஓட்டுவாங்க முயலவும்.


ramesh
ஜூன் 22, 2024 17:01

உருப்படியாக ஏதாவது செய்து இருந்தால் தான் தமிழ் நாட்டில் ஒரு சீட்டாவது கிடைத்து இருக்குமே .தமிழ் நாட்டு தலைவரே படு தோல்வி


ramesh
ஜூன் 22, 2024 17:03

நீட்டு எழுதியவர்களுக்கு தான் தனியாக உதவி முழு மதிப்பெண் கொடுத்து மாட்டி கொண்டார்களே


Phoenix
ஜூன் 22, 2024 17:12

அப்ப கள்ளச்சாராய விற்பனையை கண்டுகொள்ளாமல் இருக்கனும் என்று எதிர் பார்க்கிறீர்களா


K V Ramadoss
ஜூன் 22, 2024 20:55

பிரச்சனையை எப்படி திசை மாற்றுவது என்று தலைவர்களிடமிருந்து நன்றாக கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.


Indian
ஜூன் 22, 2024 16:06

where is admk?


மேலும் செய்திகள்





புதிய வீடியோ