வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருட்டு நகைன்னு வாங்குனவனுக்கு தெரியுமா? அந்த கிரிமினல் ஞானசேகரனுக்கு அஞ்சடுக்கு பாதுகாப்பு குடுங்க. பிரியாணி சப்ளை தடையில்லாமல் நடக்கணுமே.
சென்னை:பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனிடம், திருட்டு நகைகளை வாங்கிய ஆலந்துார் நகை வியாபாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் என்பவர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில், பள்ளிக்கரணை பகுதியில் ஏழு இடங்களில் நகைகள் திருடிய வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. ஞானசேகரனை மூன்று நாட்கள் கஸ்டடி எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரித்தனர். அப்போது, ஏழு வீடுகளில், 200 சவரன் நகைகளை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார்.திருடிய நகைகளை, ஆலந்துார் நகை வியாபாரி குணால் என்பவரிடம் விற்று பணம் பெற்றதும் தெரிந்தது. இந்நிலையில் நேற்று, குணாலை கைது செய்து சிறையிலடைத்த போலீசார், அவரிடம் இருந்து, 120 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
திருட்டு நகைன்னு வாங்குனவனுக்கு தெரியுமா? அந்த கிரிமினல் ஞானசேகரனுக்கு அஞ்சடுக்கு பாதுகாப்பு குடுங்க. பிரியாணி சப்ளை தடையில்லாமல் நடக்கணுமே.