மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
3 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21
மதுரை:விருநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் தேரோட்டத்தில், ஜாதி ரீதியான டீ-ஷர்ட்கள் அணியாமல், ஜாதி கொடிகள் இடம் பெறாமல் இருப்பதை, அரசு தரப்பில் உறுதி செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த சந்தனகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் திருஆடிப்பூரத் திருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடக்கிறது. சில ஆண்டுகளாக தேர் பின்புறம், எம்பு தடி போடுவதற்கு உரிமை இருப்பதாக கூறி, ஒரு சமூகத்தினர் தங்கள் கொடி, மேளதாளத்துடன் ஜாதித் தலைவர்கள் படம் பொறித்த டீ-ஷர்ட் அணிந்து கோஷம் எழுப்புகின்றனர்.ஆண்டாளை தரிசிக்க விடாமல் பக்தர்களை தடுக்கின்றனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடை செய்ய வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது, 'ஜாதி ரீதியான டீ-ஷர்ட்கள் அணியாமல், கொடிகள் இடம்பெறாமல் இருப்பதை அரசு தரப்பில் உறுதி செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.
3 hour(s) ago | 5
6 hour(s) ago | 5
7 hour(s) ago | 21