உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலைகளில் மரம் வெட்ட அனுமதி தர இணையதளம் துவக்கியது வனத்துறை

மலைகளில் மரம் வெட்ட அனுமதி தர இணையதளம் துவக்கியது வனத்துறை

சென்னை : மலைப்பகுதிகளில் தனியார் நிலங்களில் மரங்களை வெட்டவும், எடுத்து செல்லவும், 'ஆன்லைன்' முறையில் அனுமதி வழங்க, 'மலைத்தளம்' என்ற புதிய இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தனியார் நிலங்களில், தேக்கு, சந்தனம், செம்மரம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களை வளர்க்க தடை இல்லை என்றாலும், வளர்ந்த பின் வெட்ட, விற்பனை செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதன்படி, தனியார் நிலங்களில், இந்திய வனச்சட்டத்தின்படி பட்டியலிடப்பட்ட மரங்களை வளர்ப்போர், அவற்றை வெட்ட, வேறு இடங்களுக்கு எடுத்து செல்ல, மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கான ஆன்லைன் வசதி, சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதில், சமவெளி பகுதிகளுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே, பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும். மலைப்பகுதிகளில் தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் மரங்களுக்கு, ஏற்கனவே உள்ள ஆன்லைன் வசதி பொருந்தாது. இந்நிலையில், மலைப்பகுதிகளில் தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் அதிமுக்கியமான மரங்களை வெட்டுவதற்கும், எடுத்து செல்வதற்கும் ஆன்லைன் முறையில் அனுமதி வழங்குவதற்காக, 'மலைத்தளம்' என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டது. வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:நீலகிரி மாவட்டம், குன்னுார், ஊட்டி நகராட்சிகள், கோத்தகிரி ஊராட்சி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி, சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஆகியவற்றுக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் மரங்களுக்கு, இந்த வசதி பொருந்தும். இப்பகுதிகளில், பட்டியலிடப்பட்ட மரங்களை வளர்ப்போர், ஆரம்ப நிலையில் இருந்தே வனத்துறைக்கு தகவல் தர வேண்டும். அதிகாரிகள், அதை கண்காணிக்க வேண்டும்.மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு, இங்கு மரங்கள் வெட்டுவதற்கான விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவு எடுக்கும். இது தொடர்பான அனைத்து பணிகளும், 'மலைத்தளம்' இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அசோகன்
மார் 12, 2025 17:33

இன்னும் ஒரு வருஷம் தான் இருக்கு அதுக்குள்ள வேலையை முடிக்கணும்....... உலக தலைவர் ஸ்டாலின் கொள்ளை கூட்டத்திற்கு உத்தரவு


Sivak
மார் 12, 2025 12:24

திருட்டு பசங்க மலையை மொட்டை அடிச்சிடுவாங்க இப்போ ...


KRISHNAN R
மார் 12, 2025 10:23

சுந்தரா டிராவல்ஸ்.....


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 12, 2025 08:35

வனத்துறைக்கும் கட்டிங் கிடைக்கும் .... எதிலெல்லாம் காசு பார்க்க முடியுமோ அதிலெல்லாம் காசு பார்த்து விடுங்கள் ....


அம்பி ஐயர்
மார் 12, 2025 08:12

ஆமாம்..... மலைகளில் ஏகப்பட்ட மரங்கள் வளர்ந்து அந்த மலையை வெட்டி எடுக்க தடையாக இருக்கு.... அதுனால முதலில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்திட்டா அப்புறமா ஈஸியா மலையை மொத்தமா வெட்டி காலி பண்ணிடலாம்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை