உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏப்.,19ல் இலவச பஸ் சேவை: பொதுமக்கள் வலியுறுத்தல்

ஏப்.,19ல் இலவச பஸ் சேவை: பொதுமக்கள் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தேர்தல் நாளன்று வாக்காளர்கள் ஓட்டளிக்க வசதியாக, தேர்தல் கமிஷன் அரசோடு இணைந்து, நகர்ப்புறங்களில் பஸ்களை இலவசமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும், சராசரியாக, 70 முதல் 74 சதவீத ஓட்டுகள் தான் பதிவாகின்றன. தேர்தல் கமிஷன், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தாலும், ஊரகப் பகுதிகளை விட, நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது.இதற்கு முக்கிய காரணம், வாக்காளர்கள் தங்கள் பணி, குழந்தைகள் கல்வி உட்பட பல்வேறு காரணங்களுக்காக, ஒரு தொகுதியிலிருந்து மற்றொரு தொகுதிக்கு இடம் மாறுகின்றனர். அப்படி மாறுவோர், ஓட்டுரிமையை அந்த பகுதிக்கு மாற்றாமல் விட்டு விடுகின்றனர். அவர்கள் ஓட்டுப்பதிவு அன்று, ஏற்கனவே ஓட்டு உள்ள பகுதிக்கு சென்று ஓட்டளிக்க முன்வருவதில்லை. இது, ஓட்டுப்பதிவு குறைய முக்கிய காரணம். எனவே, ஓட்டுப்பதிவு அன்று மட்டும், பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு, நகரப் பேருந்துகளில் இலவசமாக செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், மக்கள் தாங்கள் வசித்த பகுதிக்கு சென்று ஓட்டளிக்க முன்வருவர் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஓட்டுப்பதிவு அன்று முன்னர் அரசியல் கட்சியினர், பொதுமக்களை வாகனங்களில் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இது, மறைமுகமாக வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுப்பதாக உள்ளது எனக்கூறி, வாகனங்களில் வாக்காளர்களை அழைத்து வர, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.வாக்காளர்கள் ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாததால், ஓட்டளிப்பது குறைவாக உள்ளது. எனவே, பொதுமக்கள் ஓட்டுப்போட, ஓட்டுச் சாவடிக்கு செல்வதற்கு வசதியாக, அரசு அன்று ஒரு நாள் மட்டும், டவுன் பஸ்களில் மக்கள் இலவசமாக சென்று வர அனுமதிக்கலாம். இதுகுறித்து, தேர்தல் கமிஷனர், மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்து அறிவிக்க வேண்டும். இது, ஓட்டுப்போட செல்லும் மக்களுக்கு உதவியாக இருக்கும். இதற்காகும் செலவை, தேர்தல் கமிஷனும், மாநில அரசும் பகிர்ந்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்து, 100 சதவீதம் ஓட்டளிப்பதை உறுதி செய்ய வேண்டும். இது, ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்க உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

karunamoorthi Karuna
ஏப் 06, 2024 08:29

சிலர் ஓட்டு போட பணம் கொடுக்கும் கட்சி அலுவலகத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் போவார்கள் எவ்வளவு நேரம் ஆனாலும் காத்து கொண்டு இருப்பார்கள்


Mani . V
ஏப் 06, 2024 04:17

தங்களுடைய ஜனநாயகக் கடமையை செய்யக்கூட இலவசங்களைக் எதிர்பார்க்கும் முட்டாள்கள் கூட்டம் இருப்பதால்தான், அரசியல்வியாதிகள் ஸாரி அரசியல்வாதிகள் கோடி, கோடியாய் கொள்ளையடிக்கிறார்கள்


VENKATEAN V. Madurai
ஏப் 06, 2024 03:48

ஐபிஎல் மேட்ச் நடக்குது இலவச பஸ் ஓட/ சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இலவச பஸ் விட வேண்டும் பல மக்கள் ஓட்டு சொந்த ஊரில் இருப்பதால்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ