உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஒன்றிய செயலர் வீட்டில் ஐ.டி., ரெய்டு

தி.மு.க., ஒன்றிய செயலர் வீட்டில் ஐ.டி., ரெய்டு

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலராக இருப்பவர் கிரி. அவரது வீடு, அணிக்கடவு ராமச்சந்திராபுரத்தில் உள்ளது.இங்கு, தேர்தலுக்கு பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த ரகசிய தகவலால், ஈரோடு மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழு, நேற்று இரவு, 7:00 மணிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.கிராமத்திற்கு செல்லும் வழித்தடங்களில் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதோடு, உடுமலை சட்டசபை தொகுதி பறக்கும் படை மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு அதிகாரிகள் வெளியில் காத்திருந்தனர். இரண்டு மணி நேரமாக, அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், இரவு, 9:00 மணிக்கு சென்றனர்.பணம் எதுவும் கைப்பற்றவில்லை; ஆவணங்கள் மட்டும் எடுத்துச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தி.மு.க., ஒன்றிய செயலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஏப் 02, 2024 04:07

காரில் அடுக்கடுக்காக பெட்டிகளுடன் சென்றவரை மேலோட்டமாக பார்த்துவிட்டு, உடன் சென்ற கார் களையும் திரும்பிக் கூட பார்க்காது தேர்தல் ஆணையக்குழு பணத்தை வீட்டில் வைத்துக்கொள்ளுமளவு அசட்டுத்தனம் ஒரு அரசியல்வாதியிடம் எதிர்பாப்பதுதான் உச்சகட்ட …… சொல்ல வார்த்தை இல்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை