மேலும் செய்திகள்
பாம்பன் பாலம் அருகே விபத்து
31-Aug-2024
திண்டிவனம்: திண்டிவனம் அருகே மொபட்டில் சென்றவர்கள் மீது அரசு பஸ் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.திண்டிவனம் அடுத்த வேம்பூண்டியைச் சேர்ந்தவர் கெங்கப்பன், 70; இவர் நேற்று முன்தினம் இரவு உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தனது மைத்துனரான அதே பகுதியை சேர்ந்த சாம்பசிவம், 60; என்பவருடன் மொபட்டில் சென்றார். மொபட்டை சாம்பசிவம் ஓட்டினார்.திண்டிவனம் - செஞ்சி சாலையில் இருதயபுரம் அருகே இரவு 8:45 மணியளவில் வந்த போது, திண்டிவனத்திலிருந்து செஞ்சி நோக்கி சென்ற அரசு பஸ் மோதியது.விபத்தில்இருவரும் படுகாயமடைந்தனர். திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக்கு கொண்டு செல்லும் வழியில், கெங்கப்பன்உயிரிழந்தார்.ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
31-Aug-2024