உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதிப்பெண் அடிப்படையில் போலீசார் பணி கண்காணிப்பு

மதிப்பெண் அடிப்படையில் போலீசார் பணி கண்காணிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இரு தினங்களுக்கு முன், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பொறுப்பேற்றார். அவர், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளார். அதற்காக சரகம் வாரியாக ஆய்வு கூட்டம் நடத்தி உத்தரவுகள் பிறப்பித்து வருகிறார்.ஆய்வு கூட்டத்திற்கு பின், அவர் கூறியதாவது:தமிழகத்தில் 978 டி.எஸ்.பி.,க்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் முறையாக வேலை செய்யவில்லை என்றால், சுழற்சி முறையில் பணியிட மாற்றம் செய்யப்படுவர். இனி, காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்களின் பணித்திறனுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்படுவர்.கொலை வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யுங்கள். அரசியல் ரீதியான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுங்கள். ஏன் கைது செய்தீர்கள் என கேள்வி வந்தால், அதற்கான பதிலை கூறுங்கள். அரசியல் அழுத்தங்களுக்கு பணிய வேண்டாம்.காவல் துறையினர் அடிப்படை பணிகளை செய்தாலே, குற்றங்கள் கட்டுக்குள் வந்து விடும். மக்கள் தரும் புகார்கள் மீது, எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்கள் முறையாக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதற்கிடையில், மண்டல ஐ.ஜி.,க்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பணியின் போது, எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்கள் கட்டாயம் கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும். கைத்துப்பாக்கியை எந்த நேரத்தில், எப்படி பயன்படுத்த வேண்டும் என, உயர் அதிகாரிகள் பயிற்சி அளிக்க வேண்டும்.எஸ்.ஐ.,க்கள், மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். அதேபோல, கான்ஸ்டபிள், தலைமை காவலர்கள் கைகளில், 'லத்தி' இருக்க வேண்டும். லத்தியுடன் தான் ரோந்து செல்ல வேண்டும். அப்போது தான், குற்றங்களை குறைக்க முடியும்; குற்றவாளிகளும் அச்சப்படுவர்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Naga
ஜூலை 13, 2024 21:41

ஜாதி, மதம் சார்ந்து செயல்படும் காவல்துறையினர் இருக்கும் வரை நீதியை எதிர்பார்ப்பது கானல்நீர் என்பது யாதார்த்தமாகிவிட்டது. இது ஓசூரில் வெளிப்படையாக நிகழ்கிறது.


Kanns
ஜூலை 13, 2024 19:29

Unless Police Criminals esp Those Not Prosecuting/ Punishing Increasing PowerMisusing Rulers & Officials esp police & judges & Vested False Complainant Gangsters women, unions/ gangs, SCs, advocates etc etc, Justice will Never be done to Supreme People & their Constitution-Laws


vijay
ஜூலை 13, 2024 13:48

KPA Key Performance Assessment அறிமுக படுத்திகிறார் போலும் .... அதிலும் மதிப்பெண் இடுவதில் முறை கேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு மாதிரியும் , வேண்டதவர்க்கு ஒரு மாதிரியும் அதிகாரிகள் மதிப்பெண் கொடுத்தால்.. எல்லாமே வீண் ஆகி போய் விடும் ..ஆகவே திறமையான நேர்மையான கண்காணிப்பு குழுவினை supervisory லெவலில் நியமிக்க வேண்டும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 13, 2024 12:54

மாமூலுக்கு மார்க்கா, மார்க்குக்கு மாமூலா?


Barakat Ali
ஜூலை 13, 2024 09:09

கொஞ்ச நாளைக்கு அதிகபட்சம் 2026 தேர்தல் வரை காவல்துறை படு ஸ்ட்ரிக்ட்டாக ஆகிவிடும் ...... பார்த்துப் பார்த்து சலித்த காட்சி இது ......


Naga
ஜூலை 13, 2024 08:02

வாட்ஸ்அப் எண்ணிற்கு நேரடியாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தால் அவர்களது போன் எண்ணை பிளாக் செய்யும் ஓசூர் அதிகாரிக்கு தகுந்த ஆலோசனை வழங்கலாம்.


Kalyanaraman
ஜூலை 13, 2024 07:46

ஆட்சிக்கு எதிராக பேசும் யூட்யூபர்களை கைது செய்வதும், மேலும் எத்தனை கேஸை போட்டு அவர்களை சிறையிலேயே வைத்திருக்கலாம் என்பதிலேயே ஒட்டுமொத்த காவல்துறையும் "ரொம்ப பிஸியாக" இருக்கிறது. இதில் குற்றவாளிகளை விட யூட்யூப் ரன்கள் தான் மிக முக்கியம். எவ்வளவு கேவலமாக ஆட்சி புரிந்தாலும், தேர்தல் நேரத்தில் காசு வாங்கிக்கொண்டு "வாக்காளர்கள் ஓட்டு போடப் போகிறார்கள். வெற்றி நிச்சயம் என்பதால் என்ன வேணாலும் செய்யலாம். வாழ்க ஜன-பணநாயகம்.


Kasimani Baskaran
ஜூலை 13, 2024 05:09

என்னதான் ஆனாலும் வேண்டப்பட்டவர்கள் வேண்டப்பட்டவர்கள்தான். அவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு நல்ல உதாரணம் இந்த செய்திதான். புரிந்தவன் பிஸ்தா.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை