உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரம்ஜான் சிந்தனைகள்-15

ரம்ஜான் சிந்தனைகள்-15

சுவனத்திற்கு செல்லும் பாதைநபிகள் நாயகத்திடம் வந்த ஒருவர், ''எனக்குச் சில உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைகளை நான் நிறைவேற்றுகிறேன். நல்லவிதமாகவும், சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்கிறேன். ஆனால் அவர்களோ என் உரிமைகளை நிறைவேற்றுவதில்லை. மோசமாக நடந்து கொள்கிறார்கள். என்ன செய்வதென்றே எனக்கு தெரியவில்லை'' என வருத்தமாக கூறினார். அதற்கு அவர், ''உங்களது நடவடிக்கையும், அவர்களது நடவடிக்கையும் உண்மையானால் அது அவர்களின் முகத்தில் கரி பூசுவது போன்றதாகும். இறைவன் அவர்களுக்கு எதிராக எப்போதும் உமக்கு உதவி செய்து கொண்டிருப்பான். இந்த பண்பை ஒருபோதும் கைவிட்டுவிடாதீர்கள். இது சுவனத்திற்கு செல்லும் பாதையாக அமையும்'' என்றார். இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:48 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்