உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பரவியது வனத்தீ: கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்கள்

பரவியது வனத்தீ: கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்கள்

கூடலுார்:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதியில் வறட்சியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், மசினகுடி கோட்டம், சிங்கார ஆச்சக்கரை அருகே மூங்கில் காட்டில் நேற்று, மாலை, 6:00 மணிக்கு திடீர் வனத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ விரைவாக பரவியது.தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இரவு, 8:15 மணி வரை தீப்பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. பல ஏக்கர் பரப்பில் மூங்கில் காடு சேதமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை