உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பூரில் வங்கதேசத்தினர் 12 பேர் கைது!

திருப்பூரில் வங்கதேசத்தினர் 12 பேர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர்,12 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பலர் போலியான ஆவணங்கள் வைத்துக் கொண்டு பணிபுரிவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்களில் ஏராளமான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் தங்கி வேலை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நல்லூர் பகுதியில் வட மாநிலத்தினர் தங்கி இருக்கும் இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு தங்கி உள்ளவர்களின் ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதித்தனர்.அப்போது சட்டவிரோதமாக வங்கதேசத்தினர் 12 பேர் தங்கியிருப்பதை கண்டறிந்தனர். அவர்களை கைது செய்து மாநகர போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 28 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

David DS
ஜன 28, 2025 19:51

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வங்க தேசத்தவர் ஆயிரம் பேருக்கு மேல் ஆதார், வங்கிக்கணக்குடன் வாழ்கிறார்கள். இவர்களில் சிலர் அரசு வழங்கும் இலவச வீட்டு மனை வாங்கி வீடு கட்டி குடியேறி விட்டார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 28, 2025 18:45

கைது செஞ்சு ?? சோறு போடப்போறீங்களா ?? ஏன் நாடு கடத்த முடியாதா ??


தமிழ்வேள்
ஜன 28, 2025 17:02

இவர்களை நாடுகடத்த வேண்டும் ....இவர்களது நாடு ,இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், 1970 களில் வியட்நாமில் செய்தது போல , ஓட்டை படகில் நடுக்கடலுக்கு அழைத்து சென்று , கவிழ்த்துவிடலாம் ....பிரச்சினை நிரந்தரமாக ஓய்ந்துவிடும் .


என்றும் இந்தியன்
ஜன 28, 2025 16:47

How Many Bangladeshi people in India? More recently, Kiren Rijiju, Minister of State for Home Affairs in the NDA government has put the figure at around 2,0000,000 Bangladesh population. 174,000,000


shankar
ஜன 28, 2025 16:44

இந்துக்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது என்று வலியுறுத்தியும் தொடர்ந்து எல்லை மீறிய வங்க தேச அரசுக்கு வேறு வகையில் பாடம் எடுப்பது தான் சரி. nice.


nagendhiran
ஜன 28, 2025 14:58

காசுக்கு கூவும் ஜென்மங்கள் இங்குதான் அதிகம்?


ram
ஜன 28, 2025 14:31

மீனம்பாக்கம், ஜமீன் பல்லாவரம் பழவந்தாங்கல் நங்கநல்லூர் மடிப்பாக்கம் கீழ்கட்டளை இங்கும் நிறைய பங்களேடேஷ் ஆட்கள் கல்கத்தாவில் இருந்து வந்துருக்கோம் என்று சொல்லி தங்கி இருக்கிறார்கள்.


Oru Indiyan
ஜன 28, 2025 14:26

தமிழ்நாடு ஒரு மினி பங்களாதேஷ் ஆக உருவாக போகிறது.


Venkatraman Ravishankar
ஜன 28, 2025 13:57

NRC CAA னு சட்டம் வரக்கூடாதுன்னு சொன்னவங்க எல்லாரும் தெரிஞ்சுக்கவேண்டிய விஷயம் சட்டம் இயற்றுபவர்கள் யார் என் பாக்காமல் சட்டம் சரியானதான்னு பார்த்திருந்தா, இந்தமாதிரி கள்ள குடியேற்றத்தை தடுத்திருக்கலாம்


Indhuindian
ஜன 28, 2025 13:55

Follow Trump model. Pick up everyone of them and pack them off to their native land. If Bangaldesh refuses to accept, just impose economic sanctions and snap all the diplomatic ties


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை