உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பணிகளுக்கு 1253 பேர் தேர்வு

அரசு பணிகளுக்கு 1253 பேர் தேர்வு

சென்னை:டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையம் சார்பில் கடந்த 15 நாட்களில், 1253 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., செயலர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இம்மாதம் முதல் 15ம் தேதி வரை, உரிமையியல் நீதிபதி பதவிக்கு, 237 பேர்; உதவி நிலவியலாளர்கள் 40; உதவிப் பொறியாளர்கள் 752; உதவிப் புள்ளியியல் ஆய்வாளர் 190 உள்பட, பல்வேறு துறைகளில் உள்ள காலி பணிஇடங்களை நிரப்ப, 1253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை