உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடு பெற்று ஆதாரை இணைக்காமல் போக்குகாட்டும் 18,000 பயனாளிகள்

வீடு பெற்று ஆதாரை இணைக்காமல் போக்குகாட்டும் 18,000 பயனாளிகள்

சென்னை: தமிழகத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நீர்நிலை, சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வீடு வழங்கப்படுகிறது.இதன்படி, சென்னையில் 1,30 லட்சம் வீடுகள் உள்ளன.முன்பு, குடும்ப அட்டை அடிப்படையில் வீடு வழங்கப்பட்டது. தற்போது, ஆதார் அட்டை அடிப்படையில், அதுவும் குடும்ப தலைவி பெயரில் மானிய நிதியை ஒரே தவணையாக செலுத்தினால், வீடு வழங்கப்படுகிறது. முன்பு 15, 20 ஆண்டுகள் தவணை அடிப்படையில் வீடுகள் வழங்கப்பட்டன.பராமரிப்பு தொகையாக ஒவ்வொரு வீட்டிற்கும், ‛லிப்ட்' இல்லாத குடியிருப்பில் மாதம், 250 ரூபாயும், ‛லிப்ட்' உள்ள குடியிருப்பில், 750 ரூபாயும் செலுத்த வேண்டும்.இந்த வகையில், 30 ஆண்டுகளாக தவணை மற்றும் பராமரிப்பு தொகை என, 210 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. முறைகேடாக வீடு வாங்குவதை தடுக்க, 2021ம் ஆண்டு முதல், குடும்ப அட்டை அடிப்படையில் வீடு பெற்ற பயனாளிகள், ஆதாரை இணைக்க வலியுறுத்தப்பட்டது.ஆனால், 85 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மீதமுள்ள வீடுகளில், வாரிய எஸ்டேட் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி, ஆதார் இணைக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து, வாரிய எஸ்டேட் அதிகாரிகள் கூறியதாவது:

ஆதாரை இணைக்க வலியுறுத்தி நோட்டீஸ் ஒட்டினால், அதை கிழித்து எறிந்து விட்டு, அதை ஒட்டிய ஊழியர்களை தாக்குகின்றனர்.போலீசில் புகார் அளித்தால், அவர்கள் கண்டுகொள்வதில்லை. குடும்ப அட்டை அடிப்படையில் முறைகேடாக, 5 முதல் 10 வீடு வாங்கி வாடகைக்கு விட்டவர்கள் தான், ஆதாரை இணைக்க முன்வரவில்லை.இவர்களின் வீடுகளை ரத்து செய்து, வீடு கேட்டு காத்திருக்கும் பயனாளிகளுக்கு வழங்க, வாரியம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இதேபோல் பலர், 20 முதல் 30 ஆண்டுகளாக தவணை, பராமரிப்பு தொகை செலுத்தவில்லை.'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நிலுவை தொகையை ரத்து செய்வோம்' எனக் கூறி, 25 ஆண்டுகளாக, அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வந்தனர்.நீர்நிலைகளில் இருந்து அகற்றும் போது, சில அதிகாரிகள் பராமரிப்பு தொகை செலுத்த வேண்டாம் என, தவறான வாக்குறுதி அளிக்கின்றனர்.இதனால், 210 கோடி ரூபாய் நிலுவை ஏற்பட்டது. இந்த நிதியை வசூலிக்க, 30 பேரை நியமித்துள்ளோம்.ஆனால் கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் தலையீடு இல்லாமல் இருந்தால் தான், நிலுவை தொகையை வசூலிக்க முடியும்.இந்த நிதி வசூலானால் தான், பழுதடைந்த குடியிருப்புகளை பராமரிக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

jayvee
ஜன 29, 2024 13:38

தமிழகத்தில் ஒவ்வொரு துறையும் தனியே ஒரு அரசாங்கம் போல செயல்படுவதை இது காட்டுகிறது..


Raghavan
ஜன 29, 2024 11:59

யார் பராமரிப்பு தொகை செலுத்தவில்லையோ அவர்களின் வீடுகளை பூட்டி சீல் வைத்துவிட்டு பின்பு பணம் கட்டியவுடன் ஆதார் அட்டையை கொண்டுவா என்று சொல்லிவிட்டு அதை இணைத்துவிட்டு வீட்டு சாவியை கொடுங்கள்.


MANI DELHI
ஜன 29, 2024 11:25

திமுக ஆட்சியில் இதை தான் எதிர்பார்க்கமுடியும். ஸ்டிக்கர் ஓட்டுதல், கணக்கில் செலுத்துவதற்கு பதில் ரொக்கம் கொடுத்து கமிஷன் அடிப்பது இதெல்லாம் சகஜம் அப்பா...


rama adhavan
ஜன 29, 2024 11:10

அரசின் நிலை என்ன?


V GOPALAN
ஜன 29, 2024 10:44

Tamilnadu is not like other state with decent and dignified poor community. DMK and ADMK trained them for liquor, Biriyani and rs.500 perday and sight seeing places. These political fellows are using these people ration card, Aadhar card take loan from bank and use it for illegal activity purpose. Poor people are satisfied with these freebies and never go to work. Example all middle aged working community will go to work very often and travel all temples across Tamilnadu from Purattasi to Thai Month. That is we are dependendibg on North Indian workers who are ready to any work just for Two or three chappaties, raw onion and mirchi. Our people require liquor while working time itself. That isctamilnadu


R.RAMACHANDRAN
ஜன 29, 2024 09:28

லஞ்சத்தின் பேரில் தகுதியில்லாதவர்களுக்கெல்லாம் இந்த நாட்டில் தகுதியானவர்களாக ஆக்கப்பட்டு அரசு நிதியத்தை சூறையாடச் செய்கின்றனர்.


GoK
ஜன 29, 2024 09:05

விசாரித்தால் தெரிய வரும் எந்த அரசியல்வாதிகள் குண்டர்கள் இதன் பின்னால் இருக்கிறார்கள் என்று


புதிய வீடியோ