உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலில் நிற்காத 24 தமிழக கட்சிகள்; பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு

தேர்தலில் நிற்காத 24 தமிழக கட்சிகள்; பதிவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு

சென்னை : தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கான நடைமுறைகளை, இந்திய தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது.புதிதாக துவக்கப்படும் கட்சிகள், இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்படுகின்றன. இந்த கட்சிகள் தேர்தல்களில் போட்டியிட்டு, குறிப்பிட்ட ஓட்டு சதவீதத்தை பெற்றால், அவற்றை அங்கீகரிக்கப்பட்டவையாக தேர்தல் ஆணையம் அறிவிக்கும். இந்த விதியை பூர்த்தி செய்ய முடியாத கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக மட்டுமே தேர்தல் ஆணையத்தால் கருதப்படும். தற்போது நாடு முழுதும், 2,800க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளன.அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி விலக்கு, அங்கீகாரம், பொது சின்னம், சின்னம் ஒதுக்குவதில் முன்னுரிமை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றை பெற, பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. இந்த விதிமுறைகளை பல கட்சிகள் பூர்த்தி செய்யாமல் இருக்கும் தகவல், தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. அந்த கட்சிகளை அடையாளம் காணும் பணியை, இந்திய தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. அதன்படி, தற்போது வரை நாடு முழுதும் 345 கட்சிகள் கண்டறியப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 24 கட்சிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த கட்சிகள், 2019 முதல் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. அத்துடன், இக்கட்சிகளுக்கு அலுவலகங்களும் இல்லை. இந்த கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள 24 கட்சிகளிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

suriyanarayanan
ஜூன் 28, 2025 14:15

தேர்தல் ஆணையம் அப்படியே தேர்தலில் நிற்க கல்வி தகுதி கொண்டு வர வேண்டும் பார்லிமென்ட், சட்டசபை, எந்த கூட்டமாக இருந்தாலும் ஒரு நாள் வர வில்லை என்றால் சம்பளம் பிடிக்க வேண்டும்


Chandrasekaran
ஜூன் 28, 2025 13:30

இவற்றின் அங்கீகாரம் நீக்குவது சரி. ஒருமித்த கொள்கை வெவ்வேறு தலைமை கட்சிகளையும் இணைக்க வேண்டும். செலவினம்குறைநப்பு அரசு நோக்கம் ஒரே நாடு ஒரே தேர்தல் என முழக்கம் வேறு. பெரிய கட்சிகள் பூத் ஏஜெண்ட் கவுண்டிங் ஏஜெண்ட் மூலம் படை திறட்ட சுயேச்சைகளை அவர்களே தேர்தலில் பங்கு பெற வைக்கிறார்கள். அதற்கு என்ன செய்வீர்கள். இறப்பினால் ஏற்படும் காலில்யிட இடைத் தேர்தல் தவிர்த்து இறந்தவர் கட்சிக்கு நியமன அதிகாரம்.வேறு காரணங்களுக்காக பதவி துறப்பதால் ஏற்படும் காலியிட இடைத்தேர்தல் செலவினை ராஜினாமா செய்பவர் ஏற்க வேண்டுமென்ற விதி வருமா. மமாற்றுக்கட்சி சசின்னத்தில் போட்டியிடுபவரின் கட்சி அங்கீகாரமும் நீக்க வேண்டும்.


lakshmikanthan S.B
ஜூன் 28, 2025 10:28

1980 ல் தமிழ் நாட்டில் துண்டு துக்கடா கட்சிகள் 40 மேல் இருந்தன அதை எம்ஜிஆர் தடை செய்ய முயன்றார்.ஆனால் கருணாநிதி தடையாக இருந்தார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை