கடலில் 3 மணி நேரம் தியானம்
பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகியதற்கு, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரனே காரணம் என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், சந்திர கிரகண நாளான நேற்று முன்தினம் இரவு, கன்னியாகுமரிக்கு நாகேந்திரன் சென்றார். சந்திரன் மறைய துவங்கிய நேரத்தில் வந்த அவர், இரவு 10:30 மணிக்கு கடற்கரைக்கு சென்றார். அங்கு, கடலில் இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி தியானம் செய்தார். நேற்று அதிகாலை 1.30 மணி வரை மூன்று மணி நேரம், கடலிலேயே அவர் நின்றார். இது குறித்து நாகேந்திரன் கூறுகையில், ''கிரகண காலங்களில் கடலில் நீராடுவது நல்லது; நினைத்தது நடக்கும் என்பர். அந்த வகையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் நிச்சயம் பா.ஜ., வெற்றி பெறும்,'' என்றார்.