உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 200 நாட்களில் நடந்தது...595 கொலைகள்: பட்டியல் போட்டு அ.தி.மு.க., கண்டனம்

தமிழகத்தில் 200 நாட்களில் நடந்தது...595 கொலைகள்: பட்டியல் போட்டு அ.தி.மு.க., கண்டனம்

சென்னை: 'தமிழகத்தில் 200 நாட்களில், 595 கொலைகள் நடந்துள்ளன. இந்த ஆட்சியில் தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது. கொலைகாரர்களிடம் இருந்து, மக்களை காப்பாற்ற, போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.முன்பெல்லாம், ஆதாய நோக்கம் அல்லது பழிக்குப் பழி போன்ற காரணங்களால் கொலை நடப்பது சகஜமாக இருந்தது. அந்த நிலை மாறி, அரசியல்வாதிகளை பட்டப்பகலில் கூலிப்படை அனுப்பி தீர்த்துக் கட்டும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z0ngt1k1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்சியினரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ள இந்த சூழல் பற்றி, தமிழக அரசை அ.தி.மு.க., எச்சரித்துள்ளது.

வெறியாட்டம்

இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:கடந்த மூன்று ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியில் நடக்கும் சமூக விரோத செயல்களை சுட்டிக்காட்டி வருகிறோம். ஆனால், தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்று மட்டுமே முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்கிறார். தமிழகத்தில் காவல் துறை சுதந்திரமாக செயல்படவில்லை. இதை திரும்பத் திரும்ப சுட்டிக் காட்டியும், காவல் துறைக்கு பொறுப்பான முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை.காவல்துறை சுயமாக செயல்பட அனுமதிக்கவில்லை. இது தினமும் நடக்கும் கொலைகள் வழியாக நிரூபணமாகிறது. எந்த ஆட்சி நடந்தாலும், ஒரு சில கொலைகள் நடப்பது இயல்பு. ஆனால், இந்த ஆட்சியில், கொலை செய்வதையே சிலர் தொழிலாக வைத்துள்ளதை காண்கிறோம். அவர்கள் தமிழகம் முழுதும் சுற்றி வந்து வெறியாட்டம் ஆடுகின்றனர். ஏராளமான கொலைகள் நடப்பதால், கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறுகின்றனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில், சிலர் தானாக முன்வந்து சரணடைந்தனர். அதில் ஒருவரை, சென்னை மாநகர் போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயகுமார்; சேலம் மாநகர் அ.தி.மு.க., பகுதி செயலர் சண்முகம்; மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் படுகொலை என, கட்சி பேதமின்றி, படுகொலைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

முதல் இடம்

ஜனவரி மாதத்தில் 80, பிப்ரவரி 64, மார்ச் 53, ஏப்ரல் 76, மே 130, ஜூன் 107, ஜூலை 17 வரை 88 என, தமிழகம் முழுதும் கடந்த 200 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன. சென்னை மாநகரம் 86 கொலைகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. மதுரை 40 கொலைகளுடன் இரண்டாமிடம்; துாத்துக்குடி மாவட்டம் 35 கொலைகள்; விருதுநகரில் 31 கொலைகள். இவற்றில் ஒரு சில கொலைகளை தவிர, ஏனைய குற்றங்களில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை; இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த ஆட்சியில் தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது. மக்கள் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் வாழ்வது, அபாயகரமான ஒன்றாகும்.அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும் என்ற இறுமாப்போடு இனியும் செயல்படாமல், சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடம் இருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து, போர்க்கால அடிப்படையில், அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தமிழன்
ஆக 04, 2024 22:02

அருண் ஐ பிஎஸ் பதவி விலக வேண்டும் என்று வெளிப்படையாக சொல்லுங்க


Saran
ஜூலை 20, 2024 21:41

Super record break but we always vote for DMK because they give more money than you EPS……


என்றும் இந்தியன்
ஜூலை 20, 2024 15:49

இதோ விபத்தும் ஒரு கொலை தானே In Tamil Nadu In 2022 : 17,884 persons died in 64,105 road accidents In 2023 : 18,074 persons died in 66,841 road accidents


Kalyanaraman
ஜூலை 20, 2024 14:42

என்ன ஈபிஎஸ் உங்க காமெடிக்கு அளவே இல்லையா?? ஒரு எதிர்கட்சி அரசியல் செய்வது இது தான் முதல் முறை.


Kasimani Baskaran
ஜூலை 20, 2024 07:39

முன்னரே சொல்லியிருந்தால் திமுக விரைவாக நடவடிக்கை எடுத்திருக்கும். இப்படி காலம் கடந்து எதிர்க்கட்சித்தலைவர் போல செயல்பட முனைவது கண்டனத்துகுரியது.


Senthoora
ஜூலை 20, 2024 07:05

இவர்கள் ஆட்சியில் நடக்காதா? கைநாடிமுன் நின்று அவரே அவரை கேட்டு பார்க்கணும்.


சுராகோ
ஜூலை 20, 2024 09:57

அதனால் இதையும் கண்டுக்காமல் செல்லவேண்டு அப்படித்தானே. எதிர்க்கட்சி தலைவராக அவர் கடமையை செயகிறார். எதிர்க்கட்சி வரிசையில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் DMK இறுதிருந்தால் இருந்திருந்தால் அவரும் அவரை சார்ந்த கட்சிகளும் நடுநிலைவாதிகளும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள் அல்லது பந்தே நடத்திகியிருப்பார்கள்.


Senthoora
ஜூலை 20, 2024 17:19

அப்போது இவர்கள், அண்ணாதிமுக செய்தபோது குதிக்கவில்லையே, இப்போவும் குதிக்கமாட்டர்கள்.


Anantharaman Srinivasan
ஜூலை 20, 2024 20:06

எந்த ஆட்சியில் நடந்தாலும் கொலை அநியாயம் தான். இரு திராவிட கட்சியும் மாறிமாறி தூற்றிக்கொள்வதில் சளைத்தவரில்லை.


ராமகிருஷ்ணன்
ஜூலை 20, 2024 06:15

ஆக ஆக விடியாத விடியல் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ