உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவிரியில் 60 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறப்பு

காவிரியில் 60 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறப்பு

சென்னை: கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணை பாதுகாப்பு கருதி காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 60 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.ஒகேனக்கலில் நேற்று 22 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 2வது நாளாக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

venugopal s
ஜூலை 18, 2024 17:06

வழக்கம் போல் சங்கிகள் தங்கள் அறிவுத்திறனை காட்ட ஆரம்பித்து விட்டனர். அணை கட்டுவது என்னவோ வீடு கட்டுவது போல் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கட்ட முடியாது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி கடலில் கலக்கும் இடம் வரை அணை கட்டுவதற்கு ஏற்ற நிலப்பரப்பு இல்லை என்பதை புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். அதிகபட்சம் சிறிய தடுப்பணை மட்டுமே கட்ட முடியும்.


ஆரூர் ரங்
ஜூலை 18, 2024 17:30

முன்னர் ஊருக்கு ஊர் இருந்த குளம் ஊரணி, கண்மாய் ,ஏரி என எல்லாத்தையும் ஆக்கிரமித்து பிளாட் போட்ட கழக ஆட்களால் காவிரி நீரும் மழை நீரும் கடலுக்கே போகிறது.


GURUJANARTHANAN
ஜூலை 19, 2024 11:57

ஓகே. சிறிய தடுப்பணைகள் நிறைய கட்டுங்கள். 5 கிமி க்கு ஒரு தடுப்பணை வீதம் கட்டிக்கொண்டு இருங்கள். நிலத்தடி நீர் மட்டம் உயரும். நல்ல குடிநீர் மக்களுக்கு கிடைக்கட்டும் . காவிரியை வைகையுடன் இணையுங்கள்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 23, 2024 13:20

பேனாவிற்கும், சமாதிக்கும் செய்யும் செலவினை சிறு ஆற்றின் அணையை கட்டமுடியும் என்பதனை கூட அறியாத அளவிற்கு நீங்க இப்படி இருப்பது எப்படி உடன்பிறப்பே


hari
ஜூலை 18, 2024 16:18

வெற்றி வெற்றி.... அண்ணாமலை. முயற்சியால்... இது நடந்திருக்கு.....


Rajarajan
ஜூலை 18, 2024 15:58

அப்படியே வர்ற எல்லா தண்ணியும் கடலுக்கு விட்டுட்டு, திரும்ப திரும்ப கையேந்தி அரசியல் செய்ங்க.


Muthukumar S
ஜூலை 18, 2024 15:32

Good


நிக்கோல்தாம்சன்
ஜூலை 18, 2024 15:03

அணையை கட்டியிருந்தா இந்த நீரை தேக்கி உபயோகிக்கலாம் , இப்போ வழக்கம்போல கடலுக்கு அனுப்பி விட்டு சமாதி கட்டி கள்ளச்சாராய சாவுக்கும் சம்மதிக்கும் அப்பாரு பெயரை வைத்து அழகு பார்க்கும் ஆட்சியாளர்களே , கொஞ்சம் அணைகளை கட்டி அதற்கும் உங்க அப்பாரு பெயரை வையுங்க , வரவேற்கிறேன்


ஆரூர் ரங்
ஜூலை 18, 2024 17:32

அணை கட்ட வாய்ப்பில்லை. ஆனால் மற்ற நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரினா ஆண்டு முழுவதும் தட்டுப்பாடின்றி நீர் கிடைக்கும். அதற்கு திமுக பதவி விலக வேண்டும்.


Veeramani R
ஜூலை 18, 2024 13:57

உபரி நீர் இரண்டு அல்லது மூன்று ஆண்டு ஒருமுறை மட்டுமே வரும். ஒரு வருடம் கழித்து விவசாயம் செய்ய முடியும்.


தமிழரசன்
ஜூலை 18, 2024 13:56

நல்ல செய்தி


vijay, kovai
ஜூலை 18, 2024 13:55

காவிரியில் தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகம் வாழ்க (உபிஸ் கொண்டாட்டம்)


kulandai kannan
ஜூலை 18, 2024 12:01

உபரி நீர் என்றால் அது பாசனத்திற்குப் பயன்படாதா?


Palaniappan
ஜூலை 18, 2024 15:57

ஒரே நேரத்தில் 100 இட்லி சாப்பிட முடியுமா?


Ms Mahadevan Mahadevan
ஜூலை 18, 2024 11:44

மழை நாட்களில் உபரி நீரை காவேரி இல் திறப்பது என்ற வழக்கம் சரி இல்லை. உரிய காலத்தில் இருக்கும் நீரில் இரு மாநிலங்களும் நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும். நீரை தராமல் கர்நாடகம் அடாவடி செய்வதை கை விடவேண்டும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை