உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிரிகளால் தாங்கிக்கொள்ள முடியாத 4 ஆண்டு சாதனை: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

எதிரிகளால் தாங்கிக்கொள்ள முடியாத 4 ஆண்டு சாதனை: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

திருச்சி: ''தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனைகளை, அரசியல் எதிரிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,'' என்று திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். திருச்சி பஞ்சப்பூரில், 408.36 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், 128.94 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கனரக சரக்கு வாகனங்கள் முனையம் ஆகியவற்றை, முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார். பின் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:திராவிட மாடல் ஆட்சியில், திருச்சி மாவட்டத்துக்கு கடந்த 4 ஆண்டுகளில், 26,066 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. பல முத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, நான் கொடுத்த ஏழு முக்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளேன். சரிவில் இருந்த தமிழக பொருளாதார வளர்ச்சியை, நான்கே ஆண்டுகளில், 9.69 சதவீதமாக்கி, இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றி உள்ளோம். வேளாண் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறோம். தமிழகத்தில், தி.மு.க., அரசு செயல்படுத்தி உள்ள திட்டங்களை நினைத்துப் பார்க்கையில், எனக்கே, 'அடேங்கப்பா இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோமா?' என்ற வியப்பு ஏற்படுகிறது. தி.மு.க., ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைத் தான், அரசியல் எதிரிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இனிவரும் காலங்களில், தற்போதைய சாதனைகளை விஞ்சும் வகையில் நாம் செயல்பட வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sethusubramaniam
மே 11, 2025 08:15

காட்டு வழி தனியே போற பயந்தான்கொள்ளி , பயத்தை மறைக்க , தனியே பாட்டுபாடிக்கிட்டே போவானாம். அந்த மாதிரி இவரோட உளறல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது .


angbu ganesh
மே 10, 2025 16:19

காமராஜர் என்னை கேள்விப்பட்டவரைக்கும் மிகவும் நல்லவர் அவருக்கு எதிரின்னா உங்கப்பன் மட்டும்தான் அப்போ உங்கப்பன் நீயெல்லாம் எப்படி பட்டவனுங்கன்னு எல்லாருக்குமே தெரியும் எங்க உதய சூர்யன் சின்னத்தில் நீக்காமல் வேறு சின்னத்தில நில்லு டெபாசிட் கூட வாங்க மாட்ட


யாழினி
மே 10, 2025 15:24

ஆமாம் ஆமாம் இன்னும் ஓர் ஆண்டு எப்படி தாங்கி கொள்ள போகிறனோ ?


பெரிய ராசு
மே 10, 2025 12:10

தப்புங்க திருவாளர் விக்சன் துரை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத 4 ஆண்டு வேதனை இதுதான் சரி


Matt P
மே 10, 2025 11:54

டாஸ்மாக்கில் அடிச்ச கொள்ளையை எதிரி அதிமுகவால் தாங்கி கொள்ளமுடியாமல் இருக்கலாம். நம்ம கோட்டை விட்டு விட்டோமே என்று நினைக்கிறார்களோ என்று இவருக்கு சந்தேக்கம். அதிமுக திமுக இரண்டு கொள்ளையர்களையம் பார்த்தாச்சு. அரசியலில் யாருமே யோக்கியம் இல்லை என்று நினத்தாலும் புதிதாக ஒரு கட்சிக்கு வாக்களியுங்கள். வாக்களிக்கும்போது பொன்முடியையும் செந்திலயும் விஞ்சானி கருணாநிதியையும் அதிமுகவில் சிறைக்கு சென்றவர்களையும் கண்முன் கொண்டு வாருங்கள். கக்கன் காமராஜர் ஜீவா போன்ற அரசியல்வாதிகள் தொண்டாற்றிய மண்ணை நினைத்து வாக்களியுங்கள்.


Balaa
மே 10, 2025 11:33

அடேங்கப்பா , வெட்கமே இல்லாமல் எப்படி புளுகு முடிகிறது. திராவிட ஆட்சி.


Matt P
மே 10, 2025 11:56

திராவிட ஆட்சி இல்லை. திராவிட மாடல் . அது தான் சோளக்காட்டு பொம்மை.


Kjp
மே 10, 2025 10:42

பிஜேபி அதிமுக கூட்டணி வைத்ததைப் பொறுக்க முடியாமல் எரிச்சலில் அள்ளி விடுகிறார்.டாஸ்மாக்கினால் கொலை பாலியல் வன்முறை கொள்ளை ஜாபர் சாதிக் அண்ணா பல்கலை யார் அந்த சார் இன்னும் பல நிறைவேற்றாத வாக்குறுதிகளைப் பற்றித்தான் மக்களுக்கு வேதனையாக தெரிகிறது.. அரிசி விலை என்ன என்று முதல்வருக்கு தெரியுமா.எடப்பாடி ஆட்சியில் என்ன விலை உங்கள் மாடல் ஆட்சியில் என்ன விலை ஒப்பீட்டு பாருங்கள்.விலைவாசி தாறுமாறாக ஏறிக் கொண்டு இருக்கிறது.இவர் தனக்கு தானே பாராட்டு பத்திரம் வாசித்து கொண்டு இருக்கிறார்.


c.k.sundar rao
மே 10, 2025 10:10

Joke of the month and the day.


vbs manian
மே 10, 2025 09:41

மக்கள் இன்னும் விழித்து கொள்ளவில்லை. அதுவரை காட்டில் மழை.


angbu ganesh
மே 10, 2025 09:39

bordarula என்ன நடக்குது இவர் இங்க பிலிம் காட்டிட்டு இருக்கார், எங்களுக்கு வேதனை உங்க ஆட்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை