போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை
தி.மு.க., அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில், 20 லட்சம் டன் நெல் வீணாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல் கொள்முதல் செய்யாமல், 20 நாட்கள் காலதாமதம் ஆனதால், மழையில் நெல் முளைத்து, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வேதனையை அறிந்து நடவடிக்கை எடுக்காமல், தி.மு.க., அரசு அலட்சியத்துடன் நடந்து கொள்வது கண்டனத்திற்குரியது. தி.மு.க., அரசு சாக்கு போக்கு கூறுவதை கைவிட்டு, போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். இதற்கு முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . -முருகன், மத்திய அமைச்சர், பா.ஜ.,