உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணா பல்கலை பாலியல் வழக்கு தீர்ப்பு; தலைவர்கள் கருத்து!

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு தீர்ப்பு; தலைவர்கள் கருத்து!

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று (மே 28) போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி அறிவித்தார். தண்டனை விவரம் ஜூன் 2ல் அறிவிக்கப்பட உள்ளது. இது குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தமிழக முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sbrzl4wq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முதல்வர் ஸ்டாலின்

சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி.போலீசாரிடம் நான் தொடர்ந்து கூறுவது: “குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்.குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும், பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர், இ.பி.எஸ்.,

நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலை பாலியல் வழக்கில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்? விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது? ஞானசேகரன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாக இருந்த ஸ்டாலின் அரசின் அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்?வழக்கு விசாரணையின் முதற்கட்டம் முடிவதற்குள்ளேயே, ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லை என்று எதற்காக ஸ்டாலின் அரசின் போலீசார் அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுக்க வேண்டும்? யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? பாதி நீதியால் தப்பித்துவிடலாம் என்று எண்ணினால், அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. காலம் மாறும்! காட்சிகள் மாறும்! விரைவில் அ.தி.மு.க., ஆட்சி அமையும்.

அண்ணாமலை வரவேற்பு

இது குறித்து தமிழக முன்னாள் பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நடத்திய தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், பாலியல் குற்றங்களும், கடுமையாகக் கையாளப்பட வேண்டும். இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, கோர்ட் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.பா.ம.க., செயல் தலைவர், அன்புமணிஅண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் தண்டிக்கப்பட்டதாலேயே அனைத்தும் முடிந்து விட்டதாக அர்த்தமல்ல. இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றஞ்சாட்டப்பட்டார். அதனால் தான் அவர் மட்டும் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவி மட்டுமல்லாமல் மேலும் பல மாணவிகள் ஞானசேகரனால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஞானசேகரனின் குற்றங்களில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளால் கருத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, ஞானசேகரன் தண்டிக்கப்பட்டதால் மட்டுமே முழுமையான நீதி கிடைத்து விடவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஞானசேகரனுக்கு ஆதரவாகவும், துணையாகவும் இருந்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஞானசேகரனுக்கு வரும் ஜூன் 2ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் போது, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கும் இழப்பீடு உள்ளிட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.தமிழக பா.ஜ., தலைவர், நயினார் நாகேந்திரன்தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் தி.மு.க.,வின் உடன்பிறப்பான ஞானசேகரன் குற்றவாளி என்பதை உறுதிபடுத்திய சென்னை மகளிர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்கிறேன். பெண்களின் மீது வன்முறை ஏவுபவர்கள் அரசியல் பின்புலமும் பணபலமும் கொண்டவர்களாக இருந்தாலும், சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ள இந்த தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை. பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து புகாரளிக்கவும் இதுபோன்ற தீர்ப்புகள் துணை நிற்கும். அரசியல் ரீதியாக எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே தனது முழுவிபரத்தை வெளியிட்டு பழி வாங்கினாலும் மனம் தளராது நீதிக்காக போராடி இன்று அதில் வெற்றி கண்டுள்ள அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எனது பாராட்டுகள்தே.மு.தி.க., பொதுச்செயலாளர், பிரேமலதாஅண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளதை தே.மு.தி.க., வரவேற்கிறது. குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் தவறு செய்ய நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இது பாடமாக அமைய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sesh
மே 29, 2025 05:28

வேறென்ன சொல்லுவார் வாழ்த்துக்கள் தான் சொல்லுவார் .


Anantharaman Srinivasan
மே 28, 2025 18:39

சொந்த கட்சி பிரமுகர் என்பதால் தப்பிபோக விடாமல், "யார் குற்றம் புரிந்தாலும் குற்றம் குற்றமே" யென தீர்ப்பு வாங்கி கொடுத்த திமுக தலைமை பாராட்டி விழா எடுத்து sticker ஒட்ட போவது யார்..?


spr
மே 28, 2025 17:49

குற்றவாளியென்று மட்டும்தானே சொல்லியிருக்கிறது நாளையே வருந்துகிறோம் என்று சொல்லமாட்டார்களா அதற்குள் என்ன அவசரம்? இன்னும் மேல்முறையீடு கீழ் முறையீடு என்று எத்தனை வழியிருக்கிறது இல்லை அவரை அமைச்சராக்கிவிட்டால் வழக்கே இல்லை. குற்றவாளியென்று அறிவிக்கும் போதே தண்டனையையும் அறிவிப்பதில் என்ன சிரமம்? அதற்கென்ன பஞ்சாங்கம் பார்க்க வேண்டுமா? சுட்டுக் தள்ளினாலொழிய வழக்கு முடியவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.


SUBRAMANIAN P
மே 28, 2025 14:33

அட நாறப்பயலுகளா இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா திரியுறீங்க.. இதெல்லாம் ஒரு நீதியா... மொத்த கும்பலையும் பிடிச்சி அல்லவா தண்டனை குடுத்துட்டு பேட்டி குடுக்கணும்..


மூர்க்கன்
மே 28, 2025 14:33

அந்த சார்.


முதல் தமிழன்
மே 28, 2025 13:30

யார் அந்த சார் என்று தெரிவிக்கவும்.


Ramesh Sargam
மே 28, 2025 13:04

முதல்வருக்கு இந்த செய்தியை படித்து காட்டவும். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மே 27 சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்ஸோ வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் பற்றிய விவரம் தினம் தினம் எல்லா நாளிதழ்களிலும் வருகிறது. இதற்கு முதல்வர் என்ன பதில் கூறப்போகிறார்?


Padmasridharan
மே 28, 2025 12:38

இந்த குற்றம் வெளியில் கொண்டுவந்த மாணவிக்கு வாழ்த்துகள். இவன் பிடிக்கப்பட்டான். வெளியில் கொண்டுவராமல் இருந்த மற்றவர்களுக்கும் இதன் பின்னர் இவற்றை நடத்திய சார்கள் யார் யார்


கோமாளி
மே 28, 2025 12:37

இன்னும் அந்த சார் கண்டுபிடிக்கப்படவில்லை


Ramesh Sargam
மே 28, 2025 12:32

பா.ம.க., செயல் தலைவர், அன்புமணி அவர்களின் கருத்து மிக மிக வரவேற்கப்படவேண்டிய கருத்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை