உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சனாதனம் குறித்து தன் தாயிடம் உதயநிதி கற்று கொள்ளலாம் அர்ஜுன் சம்பத் அறிவுரை

சனாதனம் குறித்து தன் தாயிடம் உதயநிதி கற்று கொள்ளலாம் அர்ஜுன் சம்பத் அறிவுரை

வேலுார்: 'துணை முதல்வர் உதயநிதிக்கு சனாதனம் குறித்து சந்தேகம் இருந்தால், தன் தாயிடம் கேட்டு விளக்கம் பெற்று கொள்ளலாம்' என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வேலுார், ஸ்ரீபுரம் நாராயணி பீடம் பொற்கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின், 'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஹிந்து எழுச்சிக்கு வித்திட்ட ஊர், வேலுார் நாராயணி பீடம், மக்கள் பணிகளை செய்து வருகிறது. இங்கு, துணை முதல்வர் உதயநிதி வந்தது வரவேற்கத்தக்கது. அவர், 'ஆன்மிகவாதிகள் அறிவியலுக்கு எதிரான கருத்துகளை பரப்புகின்றனர்' என்கிறார். ஆன்மிகமும், அறிவியலும் இணைந்தது தான் ஹிந்து தர்மம். ஏற்கனவே, 'டெங்கு, மலேரியா போல சனாதனத்தை ஒழிப்பேன்' என உதயநிதி பேசினார். சனாதனம் குறித்து, அவருக்கு சந்தேகம் இருந்தால், அவர், தன் தாயிடம் கேட்டு விளக்கம் பெற்று கற்றுக்கொள்ளலாம். கடவுள் மறுப்பு பேசிய அண்ணாதுரை, அவரது கடைசி காலத்தில், 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற திருமூலரின் திருமந்திரத்தை கூறினார். கருணாநிதி பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தார்; ராமானுஜர் குறித்து நாடகம் எழுதி வெளியிட்டார். எனவே, எங்கு சென்றாலும் இங்கு தான் வந்தாக வேண்டும். தமிழ் சினிமாவில் தாலி அணிதல், மொட்டை அடித்தல், காது குத்துதல், விபூதி பூசுதல், திருநாமம் தரித்தல், பூக்குழி இறங்குதல் போன்ற ஹிந்து தமிழர்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

pakalavan
நவ 06, 2025 19:36

உமது அன்னை உமக்கு சொல்லலையா்?


Sangi Mangi
நவ 06, 2025 17:02

சனாதனம் குறித்து உதயநிதி ஏன் உன் தாயிடம் கற்று கொள்ள வேண்டும் அர்ஜுன் சம்பத்?? நீ முதலில் உன் தாயிடம் கற்றுக்கொள்??? ஆவன்னா சம்பத்


Sundar R
நவ 06, 2025 18:35

அர்ஜுன் சம்பத் தமிழகத்திலுள்ள எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த ஐந்து லட்சம் பேர்களுக்கு மேலுள்ள அனைவருக்கும் தலைவர். அவர்களைப் பற்றி யோக்கியதை குறைவான, மரியாதை குறைவான கருத்துக்களை இனிமேல் பதிவிடுவதை தவிர்க்கவும்.


நிக்கோல்தாம்சன்
நவ 06, 2025 21:31

அவனா நீயி


A.Gomathinayagam
நவ 06, 2025 14:02

அறம் சார்ந்த வாழ்வு தமிழர்களுக்கே உரியது .அதை தான் அனைத்து மதங்களும் கூறுகின்றன யாரும் ஒழுக்க குறையோடு வாழுங்கள் என்று சொல்வதில்லை


ராஜா
நவ 06, 2025 12:33

நன்றாக கற்றவர்கள் இழிவு படுத்தி பேச மாட்டார்கள்.


Sundar R
நவ 06, 2025 12:12

சனாதனம் எப்படி ஹிந்து ஆனது? நான்கு வேதத்திலோ, பதிவு செய்யப்பட்ட நூற்றியெட்டு உபநிஷத்துக்களிலோ, ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலோ, வேறு எந்த கிரந்தங்களிலோ, தொல்காப்பியம் முதல் எந்த ஒரு சங்க இலக்கியங்களிலோ, ஐம்பெரும் காப்பியங்களிலோ, திருக்குறளிலோ நாம் ஹிந்துக்கள் என்றோ, நம்முடைய மதம் ஹிந்து என்றோ எங்காவது எழுதியுள்ளார்களா? பாரசீக நாட்டவர்கள் நாம் சிந்து நதியின் தீரத்தில் வசித்த காரணத்தால், நம்மை ஹிந்துக்கள் என்று முதல் முதலில் குறிப்பிட்டுள்ளதாக செவி வழியாக வந்த செய்திகள் கூறுகின்றன. அதுவும் எங்கும் எழுதப்பட்டதல்ல என்பது தான் நிதர்சனமான உண்மை. பெயரிடப்படாத சனாதன தர்மம் என்ற பெயரிலேயே ஆதிசங்கர பகவத்பாதாள் அவர்கள், மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய தர்மங்களை பாரதம் முழுவதும் பரப்பினார். ராமானுஜர் மற்றும் ராகவேந்திரர் ஆகியோரும் சனாதன தர்மத்தை பரப்பினார்கள். ஆனால், இவர்கள் யாரும், எந்த இடத்திலும் "ஹிந்து" என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை. ஆனால், 1850-களில் வாழ்ந்த ஸ்வாமி விவேகானந்தர் "ஹிந்து" என்ற வார்த்தையை பயன்படுத்தியே ஹிந்து மதத்தை பரப்பினார். ராமகிருஷ்ணா மிஷன் என்ற HINDU SCHOOLS & COLLEGES-களை நிறுவினார். அவை வெற்றிகரமாக இயங்கின. அந்த பள்ளிகளின் motto "DISCIPLINE FIRST, STUDIES NEXT". இந்த ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிகளைப் பார்த்து வட இந்தியாவில் ஏராளமான HINDU SCHOOLS உருவாகி வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. அதற்குக் காரணம், அங்கு ELEMENTARY CLASS படிக்கும் குழந்தைகளுக்கு "தூய்மையாக இருப்பது எப்படி? என்பது பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். மேலும், ஆன்மீகமும், ஒழுக்கமும், SPORTS-ம், லௌகீக அறிவும், CBSE பாடத்திட்டத்தில் வரும் பாடங்களையும் உயர்ந்த தரத்தில் பயிற்றுவிக்கிறார்கள். இந்த பள்ளிகளில் தினமும் காலையில் இறை வணக்கமும், தேசபக்தி பாடல்களும் உண்டு. அந்த காலத்தில் படித்த இந்த பள்ளி மாணவர்கள் மாநில அளவில் TOP 20 RANK-க்குள் இருப்பார்கள். தமிழகத்திலும் அதிக அளவில் HINDU SCHOOLS வரவேண்டும்.


Ramesh Sargam
நவ 06, 2025 10:11

சனாதனம் பற்றி முழுமையாக உதயநிதி அறிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அதை இழிவாக பேசுவதை நிறுத்தினாலே போதுமானது.


sundarsvpr
நவ 06, 2025 09:21

சனாதனம் யாரால் தோற்றுவிக்கப்பட்டதோ அவரால் மட்டும் அழிக்கமுடியும் பிறப்பு காப்பு அழிப்பு மூன்றும் நடைபெறும் திராவிட முன்னேற்ற கழகம் காஞ்சிபுரம் அண்ணாதுரையால் தோற்றுவிக்கப்பட்டது தற்போது ஸ்டாலினால் காக்கப்படுகிறது அழிக்கப்படப்போகிறது எப்போது? உதயநிதி ஸ்டாலினால் கூட இருக்கலாம்.


Ramesh Sargam
நவ 06, 2025 10:07

உங்கள் கருத்து மிக தவறு. - சனாதனம் என்பது "அழியாதது" அல்லது "நிலையானது" என்று பொருள்படும் ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும். எனவே, "சனாதனம்" என்ற வார்த்தையின் அர்த்தத்தின்படி அது அழியாது, ஏனெனில் அது முடிவில்லாதது, எப்போதும் இருப்பது என்று கருதப்படுகிறது. வரலாற்று ரீதியாகவும், இந்து மதம் போன்ற சில தர்மங்கள் பல நூற்றாண்டுகளாக நீடித்திருப்பதால், "சனாதனம்" அழிக்கப்படவில்லை என நம்பப்படுகிறது. "சனாதனம்" என்பதன் பொருள்: "சனாதனம்" என்ற சொல்லுக்கு "நிலையான" அல்லது "அழியாத" என்று பொருள். வரலாற்று உதாரணங்கள்: பல படையெடுப்புகள் மற்றும் ஆட்சிக் காலங்களில் கூட சனாதனம் நீடித்திருந்ததாக தினமலர் கூறுகிறது. மதங்களின் அடிப்படையாக: சனாதன தர்மம் என்பது இந்து சமயத்தின் தத்துவத்தை குறிக்கிறது, மேலும் இது ஒரு அழியாத தத்துவமாக கருதப்படுகிறது. வேறு மதங்களில் பயன்பாடு: சனாதன தர்மம் இந்து மதத்துடன் தொடர்புடையது என்றாலும், சில சமயங்களில் ஜெயினர்கள் மற்றும் பெளத்த மதத்தினாலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.


Priyan Vadanad
நவ 06, 2025 09:05

யாராவது சனாதனம்னா என்னன்னு சொல்லுங்களேன். திராவிடம் என்கிறதும் புரியவில்லை. சனாதனம் என்கிறதும் விளங்கவில்லை. வாய்கிழிய பேசுகிறவர்களுக்கும் சனாதனம்னா தெரியாது.


T.sthivinayagam
நவ 06, 2025 15:25

அது தான் சிலரால் சொல்லப்படும் சூஷ்மம் அது அவர்களுக்கு சொல்லபடுவது


புதிய வீடியோ