உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என பா.ஜ., - அ.தி.மு.க., தப்புக்கணக்கு: மத்திய அரசின் கைப்பாவை தேர்தல் ஆணையம் என்று ஆவேசம்

தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என பா.ஜ., - அ.தி.மு.க., தப்புக்கணக்கு: மத்திய அரசின் கைப்பாவை தேர்தல் ஆணையம் என்று ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினர் பெயர்களை நீக்கி விட்டால், தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என, பா.ஜ., - அ.தி.மு.க., கட்சிகள் தப்புக்கணக்கு போடுகின்றன' எனக்கூறி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையத்தை தன் கைப்பாவையாக பயன்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக, அவர் தன் கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பறித்திருக்கிறது

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, அடுத்த வாரம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த உள்ளதாக, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பீஹார் மாநிலத்தில், 65 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் ஓட்டுரிமையை, இதே சிறப்பு தீவிர திருத்தம் வாயிலாக தேர்தல் கமிஷன் பறித்திருக்கிறது. தமிழகத்திலும் அதே குறுக்கு வழியை பின்பற்ற, தன் கைப்பாவையாக தேர்தல் கமிஷனை பயன்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டோரின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டால், பா.ஜ.,வும், அதன் கூட்டாளியான அ.தி.மு.க.,வும் வெற்றி பெற்று விடலாம் என, கணக்கு போடுகின்றன. அதாவது, நேரடியாக தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க வலிமை இல்லாதவர்கள், மக்களின் ஓட்டுரிமையை பறித்து விட்டு, வெற்றி பெறலாம் என போடுகிற கணக்கானது, தமிழகத்தைப் பொறுத்த வரை தப்புக்கணக்காகி விடும்.

வலிமையுண்டு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முறையை கைவிட வேண்டும். வாக்காளர் பட்டியலை சீர்படுத்த வேண்டும் என்றால், அதற்குரிய வழிமுறைகளை பின்பற்றி, கால அவகாசத்தை வழங்க வேண்டும் என, தேர்தல் கமிஷனிடம் தி.மு.க., நேரடியாக வலியுறுத்தி உள்ளது. அதையும் மீறி எடுக்கப்படும், ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்ட ரீதியாக எதிர் கொள்வதுடன், மக்களுடன் நின்று களத்தில் எதிர்கொள்ளும் வலிமை தி.மு.க.,விற்கு உண்டு.எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, பருவமழை காலத்திலும், அரசியல் களத்தில் ஏதேனும் அறுவடை செய்ய முடியுமா என்று தான் செயல்படுகிறாரே தவிர, ஆக்கப்பூர்வமாகவோ, மக்களுக்கு உறுதுணையாகவோ, எதையும் செய்யும் எண்ணம் இல்லாமல் இருக்கிறார். நெல் மூட்டைகள் கொள்முதல் குறித்து, எதிர்க்கட்சி தலைவரும், அவரது கட்சியினரும் சொன்னவை எல்லாம் புளுகு மூட்டைகள் என்பதை, அரசின் தொடர் செயல்பாடுகள் நிரூபித்து விட்டன. பொய்களையும், அவதுாறுகளையும் புறந்தள்ளி, நாம் தொடர்ந்து, மக்களுக்காக பணியாற்றிக் கொண்டே இருப்போம்.தேர்தலுக்கு முன் என்னென்ன பணிகளை, எப்படி செய்ய வேண்டும்; கட்சி தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர்கள் வரை, அனைவரையும் ஒருங்கிணைத்து எப்படி செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க, நாளை காலை மாமல்லபுரத்தில் பயிற்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது. 'என் ஓட்டுச்சாவடி -வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற இலக்குடன் கட்சி தொண்டர்கள் களப்பணியாற்றுவதற்காக, இந்த பயிற்சி கூட்டம் நடக்கிறது.அனைவரும் ஒருங்கிணைந்து, 'என் ஓட்டுச்சாவடி - வெற்றி ஓட்டுச்சாவடி' என்பதை முன்னெடுக்க வேண்டும். மாநில நிர்வாகியாக இருந்தாலும், அவரவர் ஓட்டுச்சாவடியில் வெற்றி பெற வேண்டும் என்பது இலக்காக இருக்க வேண்டும். 'என் ஓட்டுச்சாவடியில் தி.மு.க., கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன்' என ஒவ்வொரு தொண்டரும் உறுதியேற்று களப்பணியாற்றினால், எல்லா ஓட்டுச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, ஆட்சி அமைவது உறுதியாகி விடும். மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் காக்கின்ற தி.மு.க., ஆட்சியில், தமிழகம் தலைகுனியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

Madhavan
அக் 29, 2025 19:31

தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணியைத் துவங்கு முன்பே இதில் சதி உள்ளது என்று சொல்வதெல்லாம் சட்டத்திற்குப் புறம்பானது. தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லையெனில கடந்த தேர்தல் எதன் அடிப்படையில் நடந்தது? பிறகு அப்போதையை வாக்காளர் பட்டியல் சரி இல்லையா? அதனால்தான் ஆட்சிக்கு வர முடிந்ததா எனும் கேள்விகள் எழ வாய்ப்புள்ளதே.


Rajesh
அக் 27, 2025 23:58

நல்லா ஆவேச படுங்க அண்ணா


சுலைமான்
அக் 27, 2025 22:31

திமுக தேர்தலில் ஜெயித்தபோது தேர்தல் ஆணையம் நேர்மையாக இருந்துச்சா ஸ்டாலின் அவர்களே.....


ram ramesh
அக் 27, 2025 22:24

அடே இன்னுமா உங்களை மக்கள் நம்புகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?


பேசும் தமிழன்
அக் 27, 2025 20:12

இவர்களின் ஓட்டு வங்கியே பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாட்டில் இருந்து கள்ளத்தனமாக இங்கே வந்து குடியேறி இருக்கும் ஆட்கள் தான்..அதற்கு ஆபத்து வந்தால்.... பிறகு எப்படி வெற்றி பெறுவது.... அதனால் தான் இந்த பதற்றம்..... தமிழர்கள் வேறு ஓட்டு போட மாட்டார்கள்.... அவர்களுக்கும் தெளிவு வந்து விட்டது.


R SRINIVASAN
அக் 27, 2025 20:04

சரியாக சொன்னீர்கள். ராகுல் வெறுமனே சத்தம் போட்டு கொண்டிடுந்தாரே ஒழிய ஒரு அஃபிடவிட் கூட பைல் செய்யவில்லை


kannan sundaresan
அக் 27, 2025 18:02

கடந்த. நாலு வருடத்தில் உங்க அரசு மக்களுக்கு என்ன செய்தது? சொல்லுங்க. 2026ல் நீங்க ஆட்சிக்கு வரமுடியாது


தலைவன்
அக் 28, 2025 14:14

கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக ஒன்றிய அரசு என்ன செய்ததோ ?? அதையேதான் இவரும் கூட செய்து கொண்டு இருக்கிறார்.


என்றும் இந்தியன்
அக் 27, 2025 17:39

ஸ்டாலின் கண்ணாடி எதிரில் நின்று அதில் தெரியும் உருவத்தை பார்த்து திட்டுகின்றார் என்று இதனால் தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது???என்ன ரூ 200 உபிஸ் சரிதானே


A P
அக் 27, 2025 17:34

வழக்கம் போல பொய்களை அடுக்கிக் கொண்டே போகிறார் என்று மாண்பு மிகு முதலமைச்சரை யாரும் குறை சொல்லாதீர்கள் பாவம். அவருக்குத்தான் தமிழக ஆளுநரே தமிழகத்தை ஆளுகிறார் என்கிற சட்ட பூர்வமான உண்மை தெரியவில்லை என்றால், இவர்தான் தமிழகத்தின் முதலமைச்சர் என்று தெரியாமல் நாம் இவரைக் குறை சொல்லாமல் மரியாதை கொடுப்போம் .தேர்தலுக்கு கோடிகளை எடுத்து இறைக்காமல் இருந்தாலாவது, வருங்காலத்துக்கு செலவுக்கு வைத்துக் கொள்ளலாம். ஏதோ எனக்குத் தோன்றியத்தைச் சொன்னேன். எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொண்டு , ஊழல் இல்லாத எங்களின் நல்ல கட்சிக்கு ஓட்டுகளை போட்டு உங்களின் நல் வாழ்வை உறுதி படுத்திக்க கொள்ளுங்கள் என்று சில கட்சிகள் பிரச்சாரம் செய்கிறதுகள் என்று அன்று தெருவில் ஒரு சிலர் சொல்லிக்கொண்டு சென்றதை கேட்டேன்.


என்றும் இந்தியன்
அக் 27, 2025 17:31

வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினர் பெயர்களை நீக்கி விட்டால்-ஸ்டாலின்??இந்த அறிவுக்கு என்ன விலை முட்டாளின் மூளையில் சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா என்று பலப்பல பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன


முக்கிய வீடியோ