உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2ம் கட்ட மெட்ரோ திட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்யுங்க; ராமதாஸ் வலியுறுத்தல்

2ம் கட்ட மெட்ரோ திட்ட ஒப்பந்தத்தை உடனே ரத்து செய்யுங்க; ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: 'சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டத்தை டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி. தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரது அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் 118.9 கி.மீ. நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பாதைகளில் மெட்ரோ ரயில்களை இயக்கும் உரிமையை டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது. இது சமூகநீதிக்கும், தமிழக இளைஞர்களின் நலனுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.இந்த நடவடிக்கையால் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் போக்குவரத்தை இயக்கி, பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான பணியாளர்களை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பதிலாக டில்லி மெட்ரோ ரயில் நிறுவனமே தேர்வு செய்து நியமிக்கும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தின் போக்குவரத்தை இயக்கிப் பராமரிக்கும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமே செய்து வருகிறது. அதனால், அதற்கு தேவையான பணியாளர்கள் தமிழகத்தில் இருந்து மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்தப் பணியாளர்களுக்கு தமிழ் மொழியில் பேச, எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பணியாளர்கள் தேர்வில் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்ட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழக மக்களின் வேலைவாய்ப்பு உரிமையும், சமூகநீதியும் பாதுகாக்கப்படுகிறது.ஆனால், சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட போக்குவரத்தை இயக்கும் பொறுப்பு டில்லி மெட்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தேவையான பணியாளர்களை இந்தியா முழுவதிலும் இருந்து அந்த நிறுவனம் தேர்வு செய்யும். அதனால் தமிழகத்தைச்சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைக்காது. அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டு முறையில் பின்பற்றப் படாது. இது சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது ஆகும். இவை அனைத்துக்கும் மேலாக, தமிழ் தெரியாத பணியாளர்கள் பணியமர்த்தப்படும் போது, அவர்களால் சென்னை மாநகர மக்களுக்கு சரியாக சேவை செய்ய முடியாது. தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். இது தவிர்க்கப்பட வேண்டும்.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதன்மை பங்குதாரர் தமிழக அரசு தான். தமிழக அரசிடம் கலந்து பேசி இந்த முடிவை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்ததா? அல்லது தன்னிச்சையாக எடுத்ததா? என்பது தெரியவில்லை. இந்த சிக்கலில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழக நலனுக்கும், சமூகநீதிக்கும் எதிரான இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

RAMANATHAN MUTHIAH
ஏப் 04, 2025 06:48

இதுல மோடி எங்கே வந்தாரு... நீங்க பண்ற எல்லா தப்புக்குக்கும் அவரு ஊருகாயா


rama adhavan
ஏப் 03, 2025 20:10

இப்போது கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாதைகள் வட இந்திய நிறுவனங்களினால் தான் கட்டப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கட்டுமான நிறுவனம் ஒன்று அமைத்து கட்டலாமே? ஏன் முடியவில்லை? சமூக நீதி எங்கே வந்தது இங்கு?


Raajanna
ஏப் 03, 2025 16:12

எதார்த்தமான கண்டனம் தான். இனி தமிழர் நிலை கேள்விக்குறி போலும். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எல்லா துறையிலும் வட இந்திக்கார ஆதிக்கம் பெருகிவருகிறது. கொள்ளை லாபம் பார்க்கும் நோக்கில் குறைந்த கூலி என்ற சாக்கில் முதலாளிகள் இவர்களை இறக்குமதி செய்து தமிழகத்தை நாசம் செய்வது கண்கூடாக தெரிவதால் மருத்துவர் ஐயா பதிவு எதார்த்தமானதே.


Ray
ஏப் 03, 2025 15:35

இவரது அறிக்கையை மொழி பெயர்த்து டில்லிக்கு அனுப்பினால் போதுமானதாக இருக்கும் போல தெரிகிறது ஆனாலும் எதிராளிகள் என்ன கதறினாலும் மோடி செவி சாய்க்கப் போவதில்லை ஏற்கனவே கைமாறிவிட்டது. நிற்க இந்த மாதிரியான போக்கை காரணம் காட்டி பிஜேபி கூட்டணியிலிருந்து வெளியேர போவதாய் மருத்துவர் கர்ஜிப்பாரா?


Radhakrishnan Harichandran
ஏப் 03, 2025 16:56

The Government of Tamil Nadu GoTN holds a 50% equity share in Chennai Metro Rail Limited CMRL, along with the Government of India, which also holds 50%. மட்டும் படித்தால் அப்படித்தான், dmk வினருக்கு எதுனாலும் மோடிதான் காரணம்.


Ray
ஏப் 03, 2025 21:03

இப்போதே ரயில்வே டிக்கட் எடுப்பதில் மொழி பிரச்சினை என்கிறார்கள். இன்று இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப் படும்னு போர்டு போட்ட மாதிரி இங்கு ரயிலில் உள்ளூர் உணவு வழங்க ஏற்பாடு செய்யப் படும் என்று அழுகுணி சொல்லியுள்ளார். இந்த ஊர் உப்பைத்தின்று வாழ்வோரும் உள்ளூர்க்காரனுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட வேண்டுமென்கிறார்கள். வடநாட்டவன் இங்கு வந்து கொலை கொள்ளையடிக்க வேண்டுமென்கிறார்கள். லேட்டஸ்ட்டா வடக்கன்கள் நம்ம ஊர் பெண்களை கைய பிடிச்சு இழுக்கற சம்பவங்கள் ஆரம்பம் ஆகியுள்ளது.


krishnan
ஏப் 03, 2025 15:19

சென்னை சில்க் கம்பெனி கோவையில் கூடாது


Chidambarakrishnan K
ஏப் 03, 2025 15:13

முதல் கட்ட மெட்ரோ ரயில் பணியில்கூட வடக்கர்களே உள்ளனர். உத்திர பிரதேசம் மற்றும் பிஹாரில் கட்டுக்கடங்கா மக்கள் தொகை இருப்பதினால் குறைந்த சம்பளத்திற்கு தமிழ் நாட்டில் எளிதாக வேலைக்கு ஆட்கள் கிடைக்கிறார்கள்.


panneer selvam
ஏப் 03, 2025 15:06

Ramdoss ji , I understand your difficulty in thinking process due to advanced age . if every state follows your advice on metro management contract , then what will happen to unity in India . Do not have parochial outlook instead train up our youth so that they could work anywhere in the world . Time has come , you should take complete rest


Ray
ஏப் 03, 2025 16:31

UNITY IN INDIA? ????????????