உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 15 செ.மீ.,க்கு மேல் மழை பெய்தால் சிக்கல்தான்; சென்னை மேயர் அச்சம்

15 செ.மீ.,க்கு மேல் மழை பெய்தால் சிக்கல்தான்; சென்னை மேயர் அச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சென்னையில் 15 செ.மீ., வரை மழை பெய்தால், உடனே வடிந்து விடும். அதற்கு மேல் மழை பெய்தால் சிக்கல்தான்,'' என, மாநகராட்சி மேயர் பிரியா கூறினார். மழைக்கால பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ராயபுரம் பகுதிகளில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின், பிரியா அளித்த பேட்டி: வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து, தினமும் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jouoohnp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பகிங்ஹாம் கால்வாயில், 120 கி.மீ., நீளத்திற்கு துார்வாரும் பணி நடந்து வருகிறது. ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் துார்வாரும் பணி நடந்து வருகிறது. அடுத்த ஓரிரு நாட்களில் கனமழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளதால், முன்னேற்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. சென்னையில் அதிக மழைப்பொழிவு இருக்கும்போது, சாலைகளில் பள்ளம் ஏற்படுகிறது. தற்போது, 2,000 சாலைகள் சேதமடைந்துள்ளன. வார்டு வாரியாக நிதி ஒதுக்கி, சீரமைப்பு பணி நடந்து வருகிறது. சென்னையில், 2022ம் ஆண்டு முதல் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு முன், 10 முதல் 15 நாட்கள் மழைநீர் தேக்கம் இருக்கும். தற்போது, இரவில் மழைநீர் தேங்கினாலும், விடிவதற்குள் அகற்றப்பட்டு விடுகிறது. சென்னை ஒரு திட்டமிடப்படாத நகரம். இங்கு நிறைய கால்வாய்கள் உள்ளன. நீர்நிலைகளை பொதுமக்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இச்சூழலில், 15 செ.மீ., வரை மழை பெய்தால் உடனே மழைநீர் வெளியேறுவதற்கான சூழல் நிலவுகிறது. 'மிக்ஜாம்' புயல்போல் 40 செ.மீ., மழை பெய்தால் நீர் வெளியேறுவது சிக்கலாகிவிடும். அப்போது, மோட்டார் பம்புகள் வாயிலாக வெளியேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

vee srikanth
அக் 29, 2025 09:47

சென்னை ஒரு திட்டமிடப்படாத நகரம். இங்கு நிறைய கால்வாய்கள் உள்ளன. நீர்நிலைகளை பொதுமக்கள் ஆக்கிரமித்து உள்ளனர் - இன்னும் அரிதாரம் பூசிக்கொண்டும் / தலை கேசத்திருக்கும் முக்கித்துவம் கொடுத்து, இதில் எல்லாம் கோட்டை விட்டார்கள் - என்ன கொடுமை


Arul Narayanan
அக் 27, 2025 14:09

மிக்ஜாம் புயலின் போது 40 செமீ மழை பெய்ததாக மேயர் புளுகு. 2023 டிசம்பர் 5ம் தேதி காலை வரையிலான 24 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 24 செமீ மழை பெய்துள்ளது. நான்கு நாட்களில் 58 செமீ மழை பெய்துள்ளது. 2015ல் ஒரே நாளில் 50 செமீ மழை பெய்தபோது இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியாக இருந்திருப்பாரோ?


Edwin Jebaraj T, Tenkasi
அக் 27, 2025 08:24

மேயர் பத்திரிக்கையாளர்களை எதிர் கொள்வதில் மிகவும் கைதேர்ந்தவராக மாறி விட்டார்.


pakalavan
அக் 27, 2025 07:37

இங்க கருத்துபோடும் பசங்கள் எல்லாம் குஐராத்துல உத்திரபிரதேசத்தில டெல்லில மழை வந்து தன்னி தேங்கியபோது கோமாவில் இருந்தானுங்களா? இல்ல 5 வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் சென்னைல மழை வந்தா 7 நாளானாலும் தேங்கிய நீரில் பயனம் செஞ்சத மறந்துட்டானுங்களா ?


vijay
அக் 27, 2025 15:54

4000 கோடி ரொவாய் காசு எங்கேப்பா? 92 , 93, 42 இப்படி ஆளுக்கு ஒரு சதவீதம் பணிகள் முடிஞ்சதுன்னு சொன்னப்பவே நினைச்சோம், இந்த வருட மழைக்கும் இப்படி ஜால்சாப்பு சொல்லி, பொய்கள் சொல்லுவீங்கன்னு சொன்னோம், இந்த நடக்குது பாருங்க. விளங்கிடும்.


theruvasagan
அக் 26, 2025 20:09

அரசு கஜானவை தூர் வாருகிற வேகத்தில் நூறில் ஒரு பங்கு கால்வாய்கள் தூர் வாருவதில் காட்டியிருந்தால் நம்பிக்கையோடு மழைகாலத்தை எதிர்கொள்ளலாமே.


theruvasagan
அக் 26, 2025 16:04

15 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்தால் அது ஒன்றிய அரசின் சதிவேலை. நாங்க ஒண்ணும் பண்ண முடியாது ஆக..ஆக.. இன்னும் நாலாயிரம் கோடி கொடுத்தால் மிச்சமிருக்கிற கொஞ்சநஞ்ச ரோடுகளையும் பள்ளம் தோண்டி தண்ணீர் ரோடுல தேங்காம அங்கங்க வெட்டின பள்ளங்களில் ரொப்பி வச்சுடுவோம். அதை வைச்சு ஜனங்களுக்கு தெருவுக்கு தெரு நீச்சல் குளம் உருவாக்கி தந்துடுவோம்.


Venugopal, S
அக் 26, 2025 14:07

தேர்தலுக்கு தேர்தல் எதையாவது வாங்கிகிட்டு ஒட்டு போட வேண்டியது..அப்றம் இங்கே வந்து கூப்பாடு போட வேண்டியது...இதென்ன கொடுமை...


sankar
அக் 26, 2025 13:23

நாலாயிரம்?


Modisha
அக் 26, 2025 12:36

புளுகாதே . 1.5 cm மழை பெய்தால் கூட சென்னையில் தண்ணி தேங்குது .


c.mohanraj raj
அக் 26, 2025 11:54

எப்படிப்பட்ட மாமேதைகள் எல்லாம் அலங்கரித்த இந்த பதவியை பாதுகாத்த இந்த பதவியை செயல்படுத்தி இந்த பதவியை இந்த தற்குறிகள் ஆட்சி செய்வதை பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை