உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டியலினத்தவர் இறுதி ஊர்வலத்துக்கு மறுப்பு: எஸ்.பி., நேரில் ஆஜராக ஆணையம் உத்தரவு

பட்டியலினத்தவர் இறுதி ஊர்வலத்துக்கு மறுப்பு: எஸ்.பி., நேரில் ஆஜராக ஆணையம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'திருவண்ணாமலை மாவட்டத்தில், பட்டியலினத்தவர் இறந்தால், அவர்கள் உடலை பொது பாதையில் எடுத்துச் செல்ல, பிற சமூகத்தினர் தடுப்பது தொடர்பாக, வரும் 29ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என, அந்த மாவட்ட எஸ்.பி., மற்றும் கலெக்டரின் உதவியாளருக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், மோத்தக்கல் கிராமத்தில், பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் இறந்தால், அவர்கள் உடலை, பொது பாதையில் எடுத்துச் செல்ல விடாமல், பிற சமூகத்தினர் தடுப்பதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது. தடுக்கக் கூடாது அதன் அடிப்படையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி தமிழ்வாணன், துணைத் தலைவர் இமயம், உறுப்பினர்கள் செல்வக்குமார், ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோர் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். நேற்று இந்த வழக்கை விசாரித்த ஆணையம் பிறப்பித்த உத்தரவு: பட்டியலினத்தை சேர்ந்தவர்களின் உடல்களை பொது பாதையில் எடுத்துச் செல்வதை யாரும் தடுக்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், திருவண்ணாமலை மாவட்டம், மோத்தக்கல் கிராமத்தில், பட்டியலினத்தவர்கள் உடலை, அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் பொது பாதையில் எடுத்துச் செல்ல விடாமல், பிற சமூகத்தினர் தடுத்து வருவது தெரிகிறது. இது ஜாதிய வன்கொடுமையாகும். இதற்கு காவல் துறையும், இதர அலுவலர்களும் ஆதரவாக இருப்பதும் தெரிய வருகிறது. இது, எஸ்.சி., - எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ், தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். விளக்கம் எனவே, இந்த ஜாதிய வன்கொடுமை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, வரும் 29ம் தேதி திருவண்ணாமலை கலெக்டரின் நேர்முக உதவி யாளரும், எஸ்.பி.,யும், ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Padmasridharan
செப் 19, 2025 06:26

காவல் துறை எல்லா இடத்திலும் குற்றங்களை வெளியில் வராமல் பணத்தை அதிகார பிச்சையெடுத்து மூடி வருகின்றனர். மக்களையும் பொது இடங்களில் வண்டியின் சாவியை பிடுங்கி வைப்பது போல் மொபைலை பிடுங்கி அவர்களை பணம் கொடுக்குமாறு பயமுறுத்துகின்றனர் எ கா. காவலர் சேகர், கார்த்தி, செல்வராஜ் & team சென்னை, திருவான்மியூர். இது அவரவர்களுக்கே தெரியும், குடும்ப நபர்களுக்கு சாபத்தை சேர்க்குமென்று. காக்கி உடையின் புனிதத்தை அவர்களே கெடுத்து வைத்திருக்கின்றனர். வயதையும் செய்யும் வேலையையும் பார்த்து பணம் எவ்வளவு தேறும், அதை எப்படி கேட்க வேண்டுமென்றும் சட்டங்கள் பெயரை சொல்லி எப்படி குற்றங்களை நீதித்துறைக்கு செல்லாமல் தடுத்து நிறுத்தி பஞ்சாயத்து என்கிற பெயரில் மறைக்கின்றனர். அடித்து, மிரட்டி வண்டியில் கூட்டி அறைக்கும் அழைத்து செல்வதுமுண்டு. இவர்களுக்கு Suspension / Transfer என்பது ஒரு முடிவல்ல. Suspend செய்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் அதே தவறை செய்கின்றனர் Transfer செய்தால் புதிய இடத்தில புது மக்களிடையே அதே தவறை செய்கின்றனர். Dismissal மட்டுமே இது போன்ற காவலர்களுக்கு சரியான பாடமாக அமையும்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 18, 2025 06:52

இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான், அதை இருப்பவனும் எண்ணி பார்க்க மறந்துட்டான்


சமூக நீதி
செப் 18, 2025 06:50

தோழமையுடன் சுட்டும் குருமா எங்கே? இரு நூறுக்கு மாரடிக்கும் ஓ ஃபீஸ் எங்கே? இதெல்ல சமூக நீதி? வீர பெல்லை கூப்பிட்டு மக்கள் வரிபணத்தில் ஒரு பாராட்டு விழா நடத்தி பட்டம் அளிக்க வேண்டும். தேர்தல் நேரம் வேறு. ம்ம் சீக்கிரம்...


Moorthy
செப் 18, 2025 06:33

கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டிய குற்றம் இறந்தவர்கள் உடலை ஊர்வலமாக எடுத்து செல்வதில் கூட சாதி பாகுபாடு என்பதை நாகரிக உலகில் ஏற்று கொள்ள முடியாதது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை