உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாகம் தீரவில்லை., சுப்ரீம் கோர்ட்டை நாடுகிறார் கெஜ்ரிவால்

தாகம் தீரவில்லை., சுப்ரீம் கோர்ட்டை நாடுகிறார் கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடும் வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. அருகில் உள்ள மாநிலங்கள் உதவ மறுக்கின்றன. இதில் கோர்ட் தலையிட வேண்டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் எப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பம் வாட்டி வதைக்கிறது. தண்ணீர் மற்றும் மின்சாரம் பெரும் சவாலாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் மின் தேவை அதிகரித்துள்ளது. இருப்பினும் மற்ற மாநிலங்கள் போல் மின்தடை செய்யாமல் மின்சாரம் சீராக வழங்கி வருகிறோம். ஆனால் இந்த பிரச்னையை அரசியலாக்கின்றனர். மக்கள் நலன் கருதி அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். அருகில் உள்ள பா.ஜ., அரசு நடக்கும் ஹரியானா, உபி., அரசுகள் கூடுதல் தண்ணீர் வழங்க கேட்டு கொள்ள வேண்டும்.டில்லி மக்கள் பல பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு டேங்கர் மூலம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் வரும் ஒரு மாதத்திற்கு மட்டும் கூடுதல் தண்ணீர் வழங்க உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ஜ., போராட்டம்

டில்லியில் குடிநீர் பிரச்னையை கண்டித்து பா.ஜ.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

அப்புசாமி
ஜூன் 01, 2024 08:48

சுப்ரீம் கோர்ட் ஆளுங்க வீட்டில் தண்ணீர் வரலைன்னாதான் உடனே விசாரணைக்கு எடுத்துப்பாங்க. அதுமாதிரி ஏதாவது செய்த முடியுமா பாருங்க.


Azar Mufeen
ஜூன் 01, 2024 03:06

ஏன் துடைப்பைக்கட்டயில் வாங்கின அடி மறந்துவிட்டதா, இவர் என்ன செய்தாலும் அரசியல் நம்ம ஜி செய்தால் அது மக்கள் நலன்


Rajamani
மே 31, 2024 20:27

Now Kejriwal will ask for extension in Interim Bail to get water for Delhi. He is CM without portfolio. So concerned minister will take care. Kejriwal is the perfect example for survival without responsibilities.


Siva Subramaniam
மே 31, 2024 18:09

Shri.Kejri wall is trying his best to get Sympathy despite alleged as the record breaking corrupt CM. Politicians, ged for alleged graft, fool the voters by portraying them can buy anything including selves as FREEDOM fighters. Many say, the corrupt persons who wield political power, can buy anything.


Raj S
மே 31, 2024 18:07

எந்த விதத்துலயும் பக்கத்துல இருக்கறவங்களோட அல்லது அடுத்தவங்களோட நல்ல புரிதலோ, நட்போ இல்லாத ஒரு மனிதன் இவர்... தான் செஞ்ச ஊழலை மறைக்க எல்லா வேலையையும் செய்யறாரு...


Vivek
மே 31, 2024 16:41

டெல்லியில் தான் வற்றாத ஜீவநதி யமுனை நதி தண்ணீர் வருடம் பூரா செய்கிறதே அந்த தண்ணீரை குடிநீராக சுத்தப்படுத்தி தருவதில் என்ன சிரமம்.?


J.V. Iyer
மே 31, 2024 16:21

திகார் சிறையில் குடிக்க தண்ணீர் வருதா? அதைப்பற்றி கவலைப்படுங்கள் துடைப்பக்கட்டையே...


veeramani hariharan
மே 31, 2024 15:52

Simply fooling the people. What he does till going to Jail. Why there is no proper planning. Who asked to give freebies.


Bala Paddy
மே 31, 2024 15:20

இது போன்ற அவசர காலத்திற்கு திட்டம் போடுவது தான் அரசின் வேலை. கெஜ்ரி இவ்ளோ நாள் என்ன செய்து கொண்டு இருந்தார்? உச்ச நீதி மன்றம் மன்னர்கள் அல்ல உத்திரவு போட


BK
மே 31, 2024 14:47

He gives free water , free electricity. Now he don’t have . Sir , you please resign and handover to nearest state. They will take care .


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை