உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிராமணர்களை இழிவாக பேசுபவர்களுக்கு எதிராக சிறப்பு பி.சி.ஆர்., சட்டம் வேண்டும்

பிராமணர்களை இழிவாக பேசுபவர்களுக்கு எதிராக சிறப்பு பி.சி.ஆர்., சட்டம் வேண்டும்

கோவை : பிராமணர்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் மீது, சிறப்பு பி.சி.ஆர்., சட்டம் இயற்றி நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து பிராமணர் சங்க கூட்டமைப்பு சார்பில், கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

அனைத்து பிராமணர்கள் சங்க கூட்டமைப்பு மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:

தி.க., - த.பெ.தி.க., - கம்யூ.,கட்சிகள் மற்றும் ஈ.வெ.ரா., கொள்கை கொண்ட அமைப்புகள் வன்மத்தோடு பிராமண சமுதாயத்தை, பார்ப்பான், நுாலிபான், கிராஸ்பெல்ட், மடிசார் மாமி, அவாள், இவாள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, பொதுதளங்களிலும், சமூகவலைதளங்களிலும், திரைப்படங்களிலும், அவதுாறு பரப்புகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d56w1j05&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிராமண சமூகத்தினரை இழிவுபடுத்துவதோடு, மத நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்துகின்றனர். காஞ்சி சங்கரமடத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகின்றனர். உச்சநீதிமன்றமா, உச்சிகுடுமி மன்றமா என்று நீதித்துறையை விமர்சிப்பதும், கோயில் குருக்கள் மீது வன்மத்தை வீசுவதும், வேதபாடசாலைகள், கோசாலைகள் மீது தாக்குதல் நடத்துவதும், பிராமணர்கள் நடத்தும் கல்விக்கூடங்கள், வணிக நிறுவனங்கள் மீது, அவதுாறு பரப்புவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. பிற சமூகத்தை இழிவுபடுத்தி பேசினால், உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள சட்டம் உள்ளது. ஆனால், சிறுபான்மை சமூகமான பிராமணர்களை தொடர்ந்து இழிவு படுத்தி பேசுபவர்களை தண்டிக்க, இதுவரை சட்டமில்லை. பிராமண சமூகத்திற்கு ஆதரவாக, சிறப்பு பி.சி.ஆர்., சட்டத்தை, தமிழக அரசு இயற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து பிராமணர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இன்று கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு, பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தொடர்ந்து, கோவை கலெக்டரிடம் கூட்டமைப்பு நிர்வாகிகள் மனு அளிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

Ravi Kulasekaran
அக் 11, 2024 18:24

கடவுளை வணங்குபவன் சங்கி வணங்காதவன் விதண்டாவாதம் செய்கிறவன் முக்கியமா கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என கோயில் வாசலில் பெரியார் சிலைக்கு எழுதி கொச்சை படுத்தும் திராவிட ஆட்சிக்கு எதிராக இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் கோயில் கொள்ளை அடிக்கும் கும்பல் இந்துக்களை ஏளனம் செய்து வருவதனை பொறுத்து கொள்ள முடியாது


Anu Sekhar
அக் 08, 2024 20:47

இந்தியாவில் பிராமணர்கள் எங்கே இருக்கிறார்கள்? இங்கே அமெரிக்காவில் டாக்டர்ஸ், என்ஜினீரெஸ், சயின்டிஸ், மேலும் எல்லா துறைகளிலும் முதன்மை பெற்று இருக்கிறார்கள். நம் நாடு நல்ல திறன் படைத்த வல்லுநர்களை இழந்து விட்டது. மேற்கு நாடுகள் இந்த வல்லுநர்களை கவுரவமாக ஊக்குவிக்கிறது. நம் இழப்பு அவர்கள் லாபம் .


Subash BV
அக் 08, 2024 13:05

NOT NECESSARY. THEY ARE ONE OF THE HINDU GROUPS. PRESENT LAW IS SUFFICIENT.


S.pillai.
அக் 08, 2024 11:05

சரித்திரம் அப்படி பட்டது


G SRIDHARAN
அக் 08, 2024 08:44

பிராமணர்களைத் தொடர்ந்து , திரைப்படங்களிலும், பொது மேடைகளிலும் கேலி செய்வது மிகவும் கேவலமான செய்கை. ஏற்கனவே அரசு வேலையில்லை. கல்வியில் ஒதுக்கீடு இல்லை. அவல ஜென்மமா பிராமணர்கள் ? எங்களுக்கும் வாழ அனைத்து உரிமைகளும் உள்ளது. ஆட்சியாளர்கள் அனைவரையும் சமமாக நடத்தி, பாரதம் உயர வழிசெய்ய வேண்டும்.


Ramaswamy
அக் 08, 2024 06:53

இந்த அரசு ஒன்று நல்ல புரிந்து கொள்ள வேண்டும். பிராமணர்களை அழிக்க நினைத்தால் நீங்கள் தான் அழிந்து போவீர்கள். ஒட்டு பிச்சை எடுப்பதற்க்காக போடும் வேஷம் மக்கள் அறிவார்கள். நாங்கள் எல்லா வகயைிலும் முன்னேறிவர்கள் ??


venkatasubramanian
அக் 07, 2024 23:00

ஜாதி யை குறிப்பிட்டு அது எந்த ஜாதியாக இருந்து விட்டு போகட்டும் தரக் குறைவான பேச்சுக்கள்/கருத்துக்கள் பேசுபவர்கள் எவனாக இருந்தாலும் பலவற்றைக்கு ...த்தான் இருப்பார்கள்


தமிழ்வேள்
அக் 07, 2024 20:56

வடபாரத மக்கள் போல பிராமணர்கள் மீண்டும் தங்கள் ஜாதி பின்னொட்டு போட துவங்க வேண்டும்..அய்யர் அய்யங்கார் ராவ் சர்மா போன்றவை பெருமைக்குரிய அடையாளங்கள்... ராமசாமி அண்ணாதுரை கருணாநிதி வகையறாக்களுக்கு எந்த சாதிபெயரையும் வைத்து கொள்ளும் யோக்கியதை இல்லாத காரணத்தால் ஒட்டு மொத்த தமிழகத்தையும் சாதி பின்னொட்டு அடையாளம் அற்ற மாநிலமாக மாற்றி விட்டார்கள்..எனவே மீண்டும் தமிழர்கள் சாதி சர்நேம் பயன்படுத்த துவங்க வேண்டும்


D.Ambujavalli
அக் 07, 2024 18:57

முதல்வர் வீட்டுக்குப் போய் 'அம்மா' பூஜைக்கு, பரிகாரத்துக்கு எல்லாம் பிராமணர்கள் வேண்டும் அவர்கள் கோயிலுக்கு பரிவாரத்துடன் போனால் பூரண கும்பத்துடன் குருக்கள்/ அர்ச்சகர் வரவேற்று மாலை, பரிவட்டம், பிரசாதம் வழங்க வேண்டும். ஆனால் வெளியே எல்லா வித 'பெயராலும் ' விமர்சிப்பார்கள் இந்த இரட்டை வேஷதாரிகள் எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போகட்டும் என்று பொறுத்துப்போவதால்தான் இவர்கள் அட்டூழியம் எல்லை மீறுகிறது


D.Ambujavalli
அக் 07, 2024 18:57

முதல்வர் வீட்டுக்குப் போய் 'அம்மா' பூஜைக்கு, பரிகாரத்துக்கு எல்லாம் பிராமணர்கள் வேண்டும் அவர்கள் கோயிலுக்கு பரிவாரத்துடன் போனால் பூரண கும்பத்துடன் குருக்கள்/ அர்ச்சகர் வரவேற்று மாலை, பரிவட்டம், பிரசாதம் வழங்க வேண்டும். ஆனால் வெளியே எல்லா வித 'பெயராலும் ' விமர்சிப்பார்கள் இந்த இரட்டை வேஷதாரிகள் எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போகட்டும் என்று பொறுத்துப்போவதால்தான் இவர்கள் அட்டூழியம் எல்லை மீறுகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை