உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் 39பேர் பலி குறித்து பொறுப்பு டி.ஜி.பி., விளக்கம்

கரூர் 39பேர் பலி குறித்து பொறுப்பு டி.ஜி.பி., விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன் விளக்கம் அளித்தார்.

டி.ஜி.பி., கூறியதாவது:

த.வெ.க.,வினார் கரூர் பரப்புரைக்கு முதலில் அனுமதி கேட்ட இரு இடங்களும் மிகவும் குறுகலானது. அதனால் அதைவிட பெரிய இடத்தில் காவல்துறை அனுமதி கொடுத்தது.பரப்புரைக்கு விஜய் வர தாமதமானதால் அதிகமானோர் கூடிவிட்டனர்.தொண்டர்கள் 10,000பேர் கூடுவார்கள் என த.வெ.க.,வினர் அனுமதி கேட்டனர். ஆனால் 27,000பேர் கூடிவிட்டனர். விஜய் பரப்புரையில் காவல்துறையினர் 500பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.நாமக்கலிலும் இதே அளவு கூட்டம் கூடியது. போலீஸ் பாதுகாப்பு கொடுத்தோம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு ஒருநபர் விசாரணை கமிஷனுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவி்த்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Padmasridharan
செப் 30, 2025 18:38

விழாக்காலத்துல ரோட்டோரம் கடையில விக்கறத ஓசியில கேட்டு சாப்பிட்டுக்கிட்டே கடலை போடறவங்க பல காவலர்களும். மக்கள பாதுகாப்பங்கன்னு கொடுத்த வேலய அதிகாரம் செலுத்தி எந்த மாதிரி வேலைய பன்றாங்கன்னு அவங்கவங்களுக்கே தெரியும் சாமி. ஆயிரம் பொது மக்களுக்கு 25 காவலர்கள், இதென்ன கணக்கு ?


பெரிய குத்தூசி
செப் 28, 2025 08:45

பொழுது போக்குக்கு படம் பார்க்கிறோம், படத்தில் நடிக்கும் கூத்தாடிகளுக்கு சொந்த வாழ்கையையே நெறிப்படுத்தி வாழ தெரியாது. விஜய் யை தலைவனாக்கி உன்னோட வாழக்கையை முன்னேற்றுவான் என நினைப்பதே முட்டாள்தனம். நடிகனை நடிகனாக பார்ககாமல் உன்னை ஆள அதிகாரம் கொடுக்கும் அளவுக்கு தமிழனின் முட்டாள்தனம் வெறிகொண்டு ஆடிக்கொண்டிருந்தது. ஏற்கனவே நடிகனை ஆளவிட்ட உக்கரைன் கூத்தாடி ஐலன்ஸ்கி என்ற நடிகனால் உக்கரைன் சுடுகாடு ஆகிவிட்டது. அதேபோல் தமிழகத்தையும் நடிகனிடமும் நடிகையிடமும், திராவிட பிரிவினைவாதிகளிடமும் கொடுத்து தமிழ் மக்களை சுயபுத்தி இல்லாமல் முட்டாளாக்கியாகிவிட்டது. இங்கு மிதிபட்டு செத்தவர்கள் அனைவருமே சொந்த பெற்றோரை கவனிக்க மறந்தவர்கள், வீட்டுக்கு பொறுப்பான பிள்ளையாக, நாட்டுக்கு நல்ல குடிமகனாக இருக்க தகுதியற்றவர்கள். இவர்களால் பெற்றோர்களுக்கும் நாட்டுக்கும் ஒரு பிரயோசனமும் இல்லை. ஒருமாசம் கழித்து கூத்தாடி விஜய் திரும்பவும் ஊர்வலம் வருவான். அப்பவும் புத்தியில்லாமல் போய் மணிக்கணக்காய் நிற்பவன் இந்த மூலையில்லாத சோம்பேறி இளைஞர்கள். இவர்கள் பூமிக்கு பாரம் மட்டுமே ஆகவே இந்த இழப்புகளுக்கு வருந்த தேவையில்லை.


Palanisamy Sekar
செப் 28, 2025 08:34

இவர் பொறுப்பிற்கு வந்த வழியை பற்றி நாமறிவோம். அப்படிப்பட்ட விசுவாசியான பொறுப்பற்ற இந்த அதிகாரியின் பேச்சு அசரவைக்கின்றது. விஜய்யின் கூட்டத்திற்கு இதுவரை எவ்வளவு பேர் கூடினார்கள் என்றுகூடவா தெரியாமல் ஒரு போலீஸ் அதிகாரி இருப்பார்? சற்றேனும் மனசாட்சியோடு பேசுங்கள் டிஜிபி அவர்களே. நீங்கள் ஒன்றும் அரசியவாதி அல்ல. உங்களின் பொறுப்புகூட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீங்கள் ஆட்சியாளர்களை முட்டுக்கொடுத்து பதவியை தக்கவைக்க நினைக்காதீர்கள். மக்கள் சக்தியின் முன்னர் நீங்கள் எல்லா, தூசி. இறந்தவர்களின் ஆன்மா ஒருபோதும் உங்களையெல்லாம் மன்னிக்கவே மன்னிக்காது. விளக்கெண்ணெய் விளக்கம்.


Murugesan
செப் 28, 2025 08:22

சமாதிக்கு இரவில் விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகளே, இந்த திராவிட கொலைகளை உடனடியாக விசாரிக்க தைரியம் இருக்கா, உளவுத்துறை என்ன இலவுக்கு தமிழகத்தில் உள்ளனர் திட்டமிட்ட கொலைதான்


Balaa
செப் 28, 2025 07:56

இந்தம்மா விசாரித்த தூத்துக்குடி சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுத்தீர்களா. அல்லது அமைதியாக நடந்த போராட்டத்தை தூண்டி விட்ட சர்ச் மீது நடவடிக்கை எடுத்தீர்களா. வேடதாரிகள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 28, 2025 07:37

பொறுப்பு டிஜிபி >>>>


Ravi
செப் 28, 2025 07:37

திராவிட மாதிரி அரசின் புரட்டுகளுக்கு துணை போய் இத்தனை சேர்த்து வைத்த பெயரை கெடுத்து கொள்ளலாமா. கடைசிவரை நல்ல அதிகாரியாகவே இருந்து விடுங்களே


T.sthivinayagam
செப் 28, 2025 07:26

மிகவும் மிகைப்படுத்தி மக்களிடம் ஆர்வத்தை தூண்டி இறப்புக்கு காரணமாக தந்தி டீவி மற்றும் மற்ற ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்


Thiru, Coimbatore
செப் 28, 2025 07:19

நிச்சயமா சிபிஐ விசாரிக்க வேண்டும் இல்லையென்றால் சரியான உண்மை வெளியே வராது... இந்த துயர சம்பவத்தில் அரசியல் செய்யாமல் இருக்கனும்...


ManiK
செப் 28, 2025 07:16

திமுக அரசின் ஆஸ்கார் நடிப்பு. சாராய பாலாஜியை திருப்பி உள்ள தள்ளி விசாரிச்சா உண்மை தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை