உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசு யாருக்காக நடத்தப்படுகிறது?: அண்ணாமலை கேள்வி

தி.மு.க., அரசு யாருக்காக நடத்தப்படுகிறது?: அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உண்மையில் இந்த திமுக அரசு யாருக்காக நடத்தப்படுகிறது? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு முறையின்படி, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளர்கள், பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p3wsn487&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முறையான கல்வித் தகுதியும், தகுதித் தேர்வில் வெற்றியும் பெற்று, பல ஆண்டுகளாகக் காத்திருந்தும், தங்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்காமல் வஞ்சித்து வரும் தமிழக அரசை வலியுறுத்தி, கடந்த ஆறு நாட்களாக சென்னையில் போராட்டம் நடத்திய பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்கள் நேற்றைய தினம் திமுக அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.போலி சமூக நீதி பேசி, ஆண்டாண்டு காலமாக மக்களை ஏமாற்றி வரும் திமுக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு நடைமுறையை அமல்படுத்துவதில் எதற்காகத் தயங்குகிறது என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றுத் திறனாளர்களுக்கான ரூ.1000 உதவித் தொகையை உயர்த்துவதாக அறிவித்தது முதல், பல மாவட்டங்களில் உதவித் தொகை வழங்கப்படவே இல்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவந்திருக்கிறது. உண்மையில் இந்த திமுக அரசு யாருக்காக நடத்தப்படுகிறது? உடனடியாக, பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். பணம் வசூலிக்கலாம் என்பதற்காக மாற்றுத் திறனாளர்கள் பணி நியமனங்களைக் காலதாமதப்படுத்தும் எண்ணம் இருந்தால், துறையற்ற அமைச்சர்களின் இன்றைய நிலையை நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

S.F. Nadar
பிப் 23, 2024 12:14

மொக்கை கேள்வி


rameshkumar natarajan
பிப் 23, 2024 09:42

For whome BJP government is working?


gayathri
பிப் 23, 2024 10:40

கார்பொரேட் கம்பனிக்கு


Sriram V
பிப் 23, 2024 04:15

G square


Ramesh Sargam
பிப் 23, 2024 00:14

ஊழல்வாதிகள் தலைவரையும், அவர் குடும்பத்தினரையும், அவருடன் உள்ள அல்லக்கைகளையும் காப்பாற்ற திமுக அரசு நடத்தப்படுகிறது.


Siva Subramaniam
பிப் 22, 2024 20:55

திமுகவும் ஒருகாலத்தில் ஒன்றும் இல்லாமல் தான் இருந்தார்கள். எல்லாக்கட்சிகளுக்கும் ஆரம்பம் போல முடிவும் உண்டு. மிகவும் மட்டரகமான பிரதமரையும் அண்ணாமலையும் விமர்ச்சிக்கிற கேவலமானவர்கள் இங்கேதான் உள்ளனர்.


Oviya Vijay
பிப் 22, 2024 22:12

அவர்கள் நடந்து கொள்வதற்க்கேற்ப அவர்களுக்கு மரியாதை கிடைக்கும்


ramesh
பிப் 22, 2024 19:59

அதானிகாக தானே பிஜேபி ஆட்சி செய்கிறது .இப்படி இருக்கும் பொது அண்ணாமலைக்கு மாநில அரசை இப்படி கேட்க வெட்கமாக இல்லையா


g.s,rajan
பிப் 22, 2024 19:57

இது கூடவா தெரியாது ,சாதாரண மரமண்டைக்கு கூடத் தெரியும் கட்டுமரக் கும்பலின் சொத்துக்களைக் காப்பாற்ற திமுகவின் ஆட்சி கோலாகலமாக நடைபெறுகிறது ....


MADHAVAN
பிப் 22, 2024 19:20

அம்பானிக்கு அதானிக்கு நீங்க எப்படி ஆட்சி பன்றிங்களோ அப்படிதான்


MADHAVAN
பிப் 22, 2024 19:20

சாத்தியமா அம்பானி மற்றும் அதனிக்கு இல்ல


திகழ்ஓவியன்
பிப் 22, 2024 19:20

சீக்கிரம் ED க்கு BHARATH ரத்னா AWAARD கொடுங்கள் , அப்ப தான் யாரையாவது மிரட்டி கூட்டணிக்கு கொண்டு வருவார்கள் ... 27 க்குள் நடக்கணும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ