உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையை வைத்து மட்டுமே பெருமை பேசும் தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னையை வைத்து மட்டுமே பெருமை பேசும் தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' சென்னையை மட்டும் வைத்து, மருத்துவக் கட்டமைப்பில் முதலிடத்தில் இருக்கிறோம் என்று பெருமை பேசுவதோடு, தங்கள் வேலை முடிந்து விட்டது என்று தி.மு.க., அரசு நடந்து கொள்கிறது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்துவிட்டதாக வந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r9egwalz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சமீபகாலமாக, தமிழக சுகாதாரத் துறையில், இது போன்ற வருந்தத்தக்க சம்பவங்கள் அதிகமாகியிருக்கின்றன. சென்னை போன்ற சில பகுதிகளில் மட்டும் மருத்துவக் கட்டமைப்பு மற்றும் மக்கள் தொகைக்கேற்ப மருத்துவர்கள் எண்ணிக்கை விகிதம், உலக சுகாதார மையத்தின் பரிந்துரையின்படி இருக்கிறதே தவிர, தமிழகம் முழுவதும் பரவலாக இல்லை. அதிக மக்கள் தொகை இருக்கும் நகரங்களில் கூட, போதுமான எண்ணிக்கையில் அரசு மருத்துவர்கள் இல்லை. சென்னையை மட்டும் வைத்து, மருத்துவக் கட்டமைப்பில் முதலிடத்தில் இருக்கிறோம் என்று பெருமை பேசுவதோடு, தங்கள் வேலை முடிந்து விட்டது என்று நடந்து கொள்கிறது தி.மு.க., அரசு. தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து மக்களுக்கும் போதுமான கட்டமைப்பு இருக்கும்படி, மருத்துவ வசதிகளையும், மருத்துவர் எண்ணிக்கைகளையும் பரவலாக்க வேண்டும் என்றும், தொடர்ந்து பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் தமிழக சுகாதாரத் துறையைச் சீரமைக்க வேண்டும் என்றும் தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

venugopal s
டிச 11, 2024 21:37

தமிழகத்தில் சதுரங்கப்பட்டினம் போன்ற சிறிய ஊர்களில் ஆரம்ப சுகாதார நிலையமாவது உள்ளது, உங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் அது போன்ற சிறிய ஊர்களில் மருத்துவ வசதிகளே இல்லை என்பது தெரியுமா?


தத்வமசி
டிச 11, 2024 22:37

கேட்டதற்கு பதில் சொல்ல இயலவில்லை, அடுத்த மாநிலத்தை ஏன் பார்க்கிறீர்கள் ? இது தான் வளர்ந்த மாநிலம் என்று பீற்றிக் கொள்கிறார்கள்.


Duruvesan
டிச 11, 2024 20:30

வேற பெங்களூரு பத்தியா பேச முடியும்? Ips ஒப்பிசர் சென்னை தமிழ் நாட்டின் தலை நகர் சாரே


T.sthivinayagam
டிச 11, 2024 19:42

பின்னர் என்ன பாட்னா பற்றியா பேசமுடியும்


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 11, 2024 18:43

கிறித்தவ மிஷனரி பள்ளி ,திருநெல்வேலி மாவட்டம் புன்னக்காயலில் துவக்கப்பட்ட ஆண்டு -1567.அதே ஊரில் கிறித்தவ மருத்துவமனை துவக்கப்பட்ட ஆண்டு -1550.கிறித்தவ மிஷனரி பள்ளி மதுரையில் துவக்கப்பட்ட ஆண்டு -1595.எல்லாக்குறிச்சியில் துவக்கப்பட்ட ஆண்டு -1731.1813-1833 காலகட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கிறித்தவ ஆரம்ப பள்ளிகள் துவக்கப்பட்டன.1833-1857 காலகட்டங்களில்,உயர்நிலைப்பள்ளிகளும் கல்லூரிகளும் துவக்கப்பட்டன.சென்னை கிறித்தவ கல்லூரி துவக்கப்பட்ட ஆண்டு -1837.பெண்கல்விக்கு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிறித்தவ மிஷனரிகள் அதிக முக்கியத்துவத்தை அளித்தன.2000 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள 11089 கல்லூரிகளில் 250 கல்லூரிகள் கிறித்தவ கல்லூரிகள்.இந்திய மக்கள்தொகையில் 2.5 சதவீதம் மட்டுமே இருக்கும் கிறித்தவர்களின் பங்களிப்பு கல்வித்துறையிலும் மருத்துவத்துறையிலும் அதிகம்.85 சதவீத கிறித்தவ மருத்துவமனைகள் கிராமங்களிலேயே இயங்குகின்றன.உண்மை எந்த ஆரியன் பள்ளி திறந்து கல்வி போதித்தான் , 80 % பேர் தமிழ்நாட்டில் கிறிஸ்துவ பள்ளியில் தான் பயின்றவர்கள் மீதி அரசு பள்ளியில்


ஆரூர் ரங்
டிச 12, 2024 11:27

ஆங்கிலேயர்கள் பாரதத்தில் நுழைந்தபோது இங்கிலாந்திலேயே முக்கால்வாசி மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர்கள் இந்தியாவை முன்னேற்ற வந்தார்கள் என்பது மட்டமான கற்பனை. அவர்கள் வந்து சுரண்டும் முன்பு உலக ஜிடிபி யில் 25 சதவீதம் பாரதத்தின் பங்காக இருந்தது( தகவல் கூறியவர் திரு.சசிதரூர்) . ஆட்டையைப் போட்ட பின்பு விட்டுச்சென்றது பசியும் பட்டினியும்தான்.


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 11, 2024 18:38

சென்னையை மட்டும் வைத்து, மருத்துவக் கட்டமைப்பில் முதலிடத்தில் இருக்கிறோம் என்று பெருமை பேசுவதோடு:: படிச்ச அறிவாளி இப்படி AWARD கொடுப்பது மோடி யின் NITHIAYOG என்கிற அரசின் அமைப்பு , எனக்கு TEMP தலைவருக்கு தெரியல


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 11, 2024 18:36

ஓசி சோறு நீ எங்க லிஸ்டில் இல்லவே இல்லை உன்னை எல்லாம் நாங்க consider பண்ணுவது இல்லை யார் நீ இப்போ தலைவரா இல்லையே ராஜ தானே COORDINATOR அப்போ நீ எதை இருக்க , உனக்கெதிரா கருது போட்ட நீ என்ன போராளியாமே , இவளவு படிச்ச அறிவாளிக்கு ஊழல் என்றால் பேச வேண்டியது சட்டசபையில் சாரி உனக்கு அதற்கு கதி இல்லை தோற்று போனவன் , நீதிமன்றத்தில் அதை விட்டு தெருவில் இருந்து கூவி கொண்டு இருக்க உன் நிலை அவ்வளவு கேவலமா இருக்கு இதற்கு லண்டன் பொய் படிச்சி இருக்க


MADHAVAN
டிச 11, 2024 17:54

அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கு தமிழகத்தைப்பத்திப்பேச ? தமிழகத்துக்கு ஒரு எய்ம்ஸ் கட்ட வக்கில்லை, இங்கேவந்து ஆடு புழுக்கை போட்டமாதிரி


தமிழன்
டிச 12, 2024 14:55

தகுதி இல்லாதவர் தமிழகத்தை ஆளும்போது அண்ணன் அண்ணாமலைக்கு பேச ஆள தகுதி உள்ளது


அப்பாவி
டிச 11, 2024 16:06

அதானே... 2017/லேயே மதுரைல எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுன ஜீ ரெண்டே வருஷத்தில் போர்டு வெச்சு நட்டாவை உட்டு 99 சதவீதம் கம்ப்ளீட் ஆயிடுச்சுனு சொன்ன சாமர்த்தியம் யாருக்கு வரும்?


Gopal,Sendurai
டிச 11, 2024 16:31

இந்த பக்கோடாவ பாத்தா புள்ளிங்கோ மாதிரி தெரியுது


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 11, 2024 17:02

அதானே மருத்துவம் படிக்காதவன் எல்லாம் கேமாராவை தூக்கிட்டு பிரசவம் பார்த்தது அதுக்கு மந்திரி 10 நாள் கேட் போட்டு எல்லாம் முடிஞ்சது .... வேலை பாருங்கனது......


G Mahalingam
டிச 11, 2024 17:21

இந்தியும் தெரியாது.‌ஆங்கிலமும் தெரியாது. தமிழும் துண்டு சீட்டு. நில ஆர்ஜிதம் 99 சதவீதம் முடிந்து விட்டது என்று பாராளுமன்றத்தில் அமைச்சர் சொன்னார்.


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 11, 2024 18:48

அய்யா நான் இதே வேலையா இல்லை , இப்போ தான் வேலை முடிந்தது நான் ஒன்றும் 2 டிக்கெட் இல்லை மாதம் LAKS கணக்கில் TDS பிடிக்குக்ம் வேளையில் உள்ளேன் , MBC யில் படிக்கச் உதவிய திராவிடத்திற்கு ஆதரவு அம்புட்டுதேன்


பாமரன்
டிச 11, 2024 15:35

ஒரு துக்கடா மேட்டரை போட்டு ஆடு சாரை டெய்லி நாலுதபா காட்ட மலர் தவிப்பது... ஆடு சார் நம்மை ஒருத்தனும் மதிக்க மாட்டேன்றானுவளேன்னு தவிப்பதை விட... அட இந்த மாதிரி ஜூஜுபிக்கெல்லாம் ஆடு சார் வாய்க டீம்கா ஒயிக கருத்து போடணுமான்னு நம்ம பக்கோடாஸ் தவிப்பதை விட மோசமா இருக்கு... சோ சேட்..


hari
டிச 11, 2024 17:17

ஆடு கத்துனா ஓநாய்கு அல்லுவிடுது...... ஆ அந்த பயம் இருக்கட்டும்


Nallavanaga Viruppam
டிச 11, 2024 18:28

வருத்தமா இருந்தா வேற எங்கயாச்சும் போகலாமே... வாங்கின காசுக்கு என்ன கூவுறதுனு தெரியாம கூவிகிட்டு இருக்கிறது கொத்தடிமை கூட்டம்.


ஆரூர் ரங்
டிச 11, 2024 15:25

மருத்துவர்களைவிட மருந்தாளுநர், செவிலியர் போன்ற பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளன. மருத்துவக்கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை 70 சதவீதம் கூட உள்ளது. இதில் முன்னேற்றம் இல்லாதவரை பெருமையடித்துக் கொள்வது ஊரை ஏமாற்றும் வேலை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை