உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதீஷ்குமார் சென்றதால் தே.ஜ., கூட்டணிக்கு தான் பாதிப்பு: அரவிந்த் கெஜ்ரிவால்

நிதீஷ்குமார் சென்றதால் தே.ஜ., கூட்டணிக்கு தான் பாதிப்பு: அரவிந்த் கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் பா.ஜ., கூட்டணி பக்கம் சென்றதால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் பாதிப்பே தவிர, இண்டியா கூட்டணிக்கு பலன் தான் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டில்லி அரசு புதிய சோலார் கொள்கையை வெளியிட்டுள்ளது. இதுவரை 2016ன் கொள்கை நடைமுறையில் இருந்தது. இது நாட்டிலேயே முற்போக்கான திட்டம். டில்லியில் 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம், 400 யூனிட் வரை மின்சாரத்திற்கு பாதி கட்டணம், 400 யூனிட்களுக்கு மேல் முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிய சோலார் கொள்கையின்படி, வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்துபவர்கள், எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தினாலும், கட்டணம் வசூலிக்கப்படாது. இதன் மூலம், மாதத்திற்கு ரூ.700 முதல் 900 வரை சம்பாதிக்கலாம். பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் பா.ஜ., கூட்டணி பக்கம் சென்றிருக்க கூடாது என நினைக்கிறேன். அவர் செய்தது தவறானது; இது ஜனநாயகத்திற்கும் சரியல்ல. அவரின் பா.ஜ., பக்கம் சென்றதால் பீஹாரில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் பாதிப்பே தவிர, இண்டியா கூட்டணிக்கு பலன் தான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ராஜா
ஜன 30, 2024 06:24

அது சரி ஊழலுக்கு எதிராக கட்சி ஆரம்பித்தவருக்கு காங்கிரஸ் மற்றும் புள்ளி கூட்டணியில் என்ன வேலை? இந்த முறை இவருடைய சின்னம் இவருக்கு எதிராக சிறப்பாக வேலை செய்யும்.


Ramesh Sargam
ஜன 30, 2024 00:33

இந்த கெஜ்ரிவால் ஒரு முந்தைய IIT, Karagpur மாணவன் என்பதில் அதிக சந்தேகம் வலுக்கிறது. சுத்த ஜீரோ.


Anantharaman Srinivasan
ஜன 29, 2024 21:59

கேடு கெட்ட அரசியலில் யோக்கியனையே காணோம் யா.. எந்த கட்சியிலிருந்து யார் வந்தாலும் சேர்த்துப்போம் என்பது nothing else than Fraudulent activity..


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 29, 2024 19:36

நிதிஷ்குமாருக்கு வேண்டியவர்கள் யாருமே இல்லை ..... நிதிஷ்குமாருக்கு வேண்டாதவர்களும் யாருமே இல்லை ......


vadivelu
ஜன 29, 2024 19:34

அரசியல் தெரிந்தது அவ்வளவுதான்.பா ஜா கா விற்கு என்ன நஷ்டம், எதுவும் இல்லை, நிதிஷுக்கு இருந்த இருபது விழுக்காடு வாக்குகள் இந்தி கூட்டணிக்குத்தான் நஷ்டம்.


Duruvesan
ஜன 29, 2024 18:37

பாஸ் நீ காங்கிரஸ் சுக்கு கதவ மூடிட்டு ஏன் இந்த பீலா? சங்கி ஜெயிக்க மாட்டான் அது அவன் கவலை நீ ஜெயிப்பது எப்படின்னு பாரு, இலவசம் அள்ளி உடு, எலெக்ஷன் முடிஞ்சதும் உனக்கு திகர் தானாம், சிசோடியா approvar ஆயிட்டாராம்


Baskaran
ஜன 29, 2024 18:26

புள்ளி வைத்த இந்தியா கூட்டணிக்குதான் நஷ்டம். பிஜேபி க்கு பலமடங்கு பலம் அதிகரித்துள்ளது.


hariharan
ஜன 29, 2024 18:20

என்ன சொல்றீங்க?


அருண் குமார்
ஜன 29, 2024 18:04

எப்படி எல்லாம் உருட்ட வேண்டியதாக உள்ளது


Ramu
ஜன 29, 2024 17:44

உண்மைதான். நிதிஷ் அவர்களின் மீது இருந்த மதிப்பு குறைந்துவிட்டது. பீகார் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ