உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் தடையில்லாத தமிழகம்: அரசு பெருமிதம்

மின் தடையில்லாத தமிழகம்: அரசு பெருமிதம்

சென்னை: மின்துறையின் முனைப்பான திட்டங்களால், மின் தடையில்லாத மாநிலமாகத் திகழ்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 32,595 மெகாவாட்டாக இருந்த மொத்த மின் நிறுவு திறன், தற்போது 36,671 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. 17,785 கி.மீ உயர் அழுத்த மின் பாதைகள், 34,705 கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 10,779 மெகாவாட் நிறுவு திறனுடன் 54 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மின்துறையின் முனைப்பான திட்டங்களால், மின்தடை இல்லாத மாநிலமாக திகழ்கிறது தமிழகம். தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், மின்கட்டமைப்பு ஏப்.30ல் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 454.32 மில்லியன் யூனிட் மின்சாரத்தையும், மே 2ல் 20.830 மெகாவாட் உச்ச மின் தேவையையும் எவ்வித தடங்கலுமின்றி வழங்கி சாதனை படைத்துள்ளது திராவிட மாடல் அரசு. மூன்று ஆண்டுகளாக மின் தடையே இல்லை எனும் வரலாறு படைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் செய்துள்ள சீர்திருத்தங்களால் புதியதாக துணை மின் நிலையங்களை நிறுவி, மின் மாற்றிகளை அமைத்து, மின்விநியோக அமைப்புகள் சீராகச் செயல்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இந்த அரசை பாராட்டுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சி

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: 20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி, ரூ.519.73 கோடியில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், 22,931 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இந்த செய்திகளே சாட்சி. நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது! பயணத்தைத் தொடர்வோம்! தமிழகத்தை உயர்த்துவோம்!. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Karthikeyan
ஜூன் 06, 2024 21:45

மனசாட்சி இல்லாத...ஈவிரக்கமில்லாமல்...எப்படித்தான் இந்த விடியா அரசு புழுகு மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறதோ.... மின்வெட்டினால்தான் பத்தாண்டு காலம் வீட்டிலிருந்ததை விடியா ஆட்சியாளர் மறந்துவிட்டனர்... ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள்...


Nizar
ஜூன் 01, 2024 22:40

மின்தடை தமிழகம்.10 மணிக்கு போன கரன்ட் இன்னும் வரல


Venkat
ஜூன் 01, 2024 07:00

மத்திய அரசின் ,உதய் மின் திட்டத்தில் ,எடப்பாடி அரசு, இணைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு குறைந்தது. ஸ்டிக்கர்


R Kay
ஜூன் 01, 2024 01:40

அடுத்த மாநிலங்களின் தயவால் சமாளிக்கிறோம். குன்றிய அரசு குன்றியத்தில் மின் உற்பத்தி அதிகரிக்க, புதிய மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்குமா? அல்லது, யூனிட்டுகளை வெளியிலிருந்து வாங்கினால்தான் கமிஷன் கிடைக்கும் என இருக்குமா?


Kasimani Baskaran
மே 31, 2024 18:51

உங்கள் ஊரில் 3 phase மின்சாரம் எத்தனை மணி நேரம் இருக்கிறது என்று இதற்க்கு கீழே பதிவிடவும்.


Karthik
மே 31, 2024 18:02

அட பாவிங்களா ஆண்ட புளுகு நேத்து கூட கரண்ட் cut


தமிழ்நாட்டுபற்றாளன்
மே 31, 2024 19:08

elecy பில் கட்டினியா பாரு


angbu ganesh
மே 31, 2024 17:33

நேத்து கூட மூன்று மணி நேரம் மின்சாரம் இல்லை சென்னை சைதாபேட்டைல புளுகரத்துக்கும் ஒரு அளவு வேணாம், பிராடு பசங்க


M S RAGHUNATHAN
மே 31, 2024 17:15

பொய். கடந்த வாரங்களில் அறிவிக்கப்படாத மின் தடை இரவு நேரங்களில் இருக்கிறது. சென்னை கௌரிவாக்கம்.


Ram
மே 31, 2024 17:09

என்னடா கதவுடறீங்க , சென்னையில் எத்தனை தடவை பவர் ப்ளுக்ச்சுவேஷன் ஆயிருக்கு , அதனால எத்தனை மின்சாதன பொருட்கள் பழுதாயிருக்கு .... கூசாம கதவுடறீங்க


Ethiraj
மே 31, 2024 17:01

36000 mega watt is our installed capacity What about additional megawatt power we are buying from central pool and private producers. Are we self sufficient . The answer may be Big No


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை