உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் சரக்கு வாகனம் மோதி பைக்கில் சென்ற பெண் இன்ஸ்பெக்டர் பலி

கோவையில் சரக்கு வாகனம் மோதி பைக்கில் சென்ற பெண் இன்ஸ்பெக்டர் பலி

கோவை: சிங்காநல்லூர் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பானுமதி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பானுமதி, 52. இன்று அதிகாலை 5 மணியளவில் சிங்காநல்லூர் அருகே உள்ள காமராஜர் சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vzwcfz3d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, அவ்வழியாக அரிசி மூட்டை ஏற்றி வந்த சரக்கு வாகனம், இன்ஸ்பெக்டர் பானுமதியின் பைக் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லப்பட்டார். அங்கு தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nallavan
செப் 26, 2025 17:43

கடந்த 5 - 6 மாதங்களாகவே கோவை சிங்கநல்லூரின் இந்த பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அரசு, பலமுறை இந்த 4 கிலோ மீட்டர் சாலையை தோண்டி , தோண்டி மறுபடி தோண்டி மிகவும் மோசமாக உள்ளது. தினசரி அதிகமான விபத்துக்கள் நடைபெறுகிறது. அந்த அம்மையாரின் ஆன்மா சாந்தி அடையட்டும். இனிமேலாவது அப்பகுதி மக்களுக்கு விடியல் பிறக்கட்டும்.


David DS
செப் 26, 2025 16:14

நம்புற மாதிரி இல்லை


Rathna
செப் 26, 2025 11:22

இறைவன் நற்கதியை வழங்கட்டும். சதி வேலைய என்று சோதிக்க வேண்டும்.


Vasan
செப் 26, 2025 11:15

தீர விசாரணை செய்யுங்கள் இது திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட விபத்தா என்று.


Ramesh Sargam
செப் 26, 2025 11:03

மிகவும் வருத்தமளிக்கும் செய்தி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை