உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கானா பாடகியின் குசும்பு: சபரிமலை ஐயப்பனை வம்புக்கு இழுத்து பாடல்: சமூகதளங்களில் குவியும் கண்டனம்

கானா பாடகியின் குசும்பு: சபரிமலை ஐயப்பனை வம்புக்கு இழுத்து பாடல்: சமூகதளங்களில் குவியும் கண்டனம்

கோவை: 'ஐ யம் சாரி ஐயப்பா... நான் உள்ளே வந்தால் என்னப்பா...' என்று கோடிக்கணக்கான மக்கள் வணங்கும் சபரிமலை ஐயப்பனைப் பற்றி கானா பாட்டை பாடிய பாடகி இசைவாணி மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் மற்றும் ஹிந்துக்களின் கடவுள் நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கானா பாடகியின் குசும்பு:

தமிழ் சினிமாவில் சாதிய அடிப்படையிலும் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு விரோதமும் பேசி வருபவர் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித். இவரது நீலம் பண்பாட்டு மையத்தில் ‛கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' என்ற இசைக்குழு உள்ளது. இதில் கானா பாடகர்களும் பாடல்களை பாடி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bfsa82w8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில் முன்பு பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற கானா பாடகியான இசைவாணி என்பவர் 2019ல் நடந்த இசை நிகழ்ச்சியில், 'ஐ யம் சாரி ஐயப்பா... நான் உள்ளே வந்தால் என்னப்பா...' எனத் துவங்கும் பாடலை பாடியிருந்தார். இந்த பாடலை இப்போது சிலர் டிரென்ட் செய்ததால், சர்ச்சையாகி வருகிறது.அதாவது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதில்லை. இதை விமர்சித்து தான் அவர் பாடலை பாடி உள்ளார்.இப்படி செய்வதன் மூலம் ஹிந்துக்களின் நம்பிக்கையையும் அவர் இழிவுபடுத்தி உள்ளார், ஐயப்ப விரதம் உட்பட பல விஷயங்களை அவதூறு செய்கிறார்.ஒரு கிறுஸ்துவ பெண்ணான இசைவாணி, சிலுவை அணிந்தபடி ஒரு ஹிந்து கடவுள் பற்றி பாடியது சரியா. தனது மதத்தை விமர்சித்து அப்படி பாடுவாரா. ஹிந்து மதம் பற்றி மட்டும் என்ன வேண்டுமானாலும் பேசலாம், பாடலாம் என்று நினைத்து, மாற்று மதத்தினரை புண்படுத்துகிறார்.

போலீசில் புகார்:

இதுதொடர்பாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. புகாரில், இசைவாணி கழுத்தில் சிலுவை அணிந்துள்ளார். இயேசுவை புகழ்ந்து அவர் பாடல் பாடியுள்ளதோடு, மேடையில் ஐயப்பனை இழிவுப்படுத்தி பாடியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேபோல் பா ரஞ்சித் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

கஸ்துாரிக்கு ஒரு சட்டம்; இசைவாணிக்கு ஒரு சட்டமா:

தெலுங்கர்கள் பற்றி நடிகை கஸ்துாரி ஏதோ கூறி விட்டார் என்று விரட்டி விரட்டி கைது செய்த தமிழக போலீஸ், இசைவாணி விவகாரத்தில் மட்டும் வாய் மூடி மவுனமாக இருப்பது ஏன்? ஒரு கண்ணுக்கு வெண்ணெய், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பா.இது பற்றி சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 255 )

நிக்கோல்தாம்சன்
டிச 15, 2024 06:36

நீ சார்ந்த மதம் உனது உறவினரை காக்க முடிந்ததா இசைவாணி ? 2023 இல் ஒருவன் , 2024 இல் ஒருவன் என்று மண்ணுக்கு இரையானது தான் மிச்சம் , இயற்கையை மிஞ்சி ஏதேனும் மதம் இருக்கிறதா ன்று கேள்வி கேட்க்கும் தருணம் , வாயால் உன்பாயென்றால் தவறை உணர்ந்து மனிதமாய் மாறு , இல்லையா எப்போதும் போலவே தொடரு


God yes Godyes
டிச 04, 2024 15:24

கடவுள் படைப்பில் ஆண் பெண் இருவரும் அடங்குவர்.இந்து சனாதனத்தில் ஆலய வழிபாடு இரு பாலருக்கும் உரியது.ஆம்பள. மட்டும் தான் ஆட்டிகினு ஆலயத்துக்குள் போகணுமா.ஆனாக்கா ஆலயத்தை நிர்வகிப்பது மட்டும் ஆம்பளைங்க.நிர்வாக பொறுப்பு பெண்களிடம் தருவதில்லை.. இதுவும் பக்தி சாக்கில் மலையாளத்தானுவ செய்யும் குசும்பு.மலையாளத்தானுங்க சோதா தனம். .உழைச்சு சாப்பிடாம தமிழகத்திலிருந்து ஆலயத்தில் நுழையும் வரை சரணம் அய்யப்பான்னு கருப்பு துணியுடன் தலையில் மூட்டை சுமந்து அதில் என்ன கொண்டு போய் கொட்றானுவன்னு எவனுக்கும் சொல்லமாட்டானுவ. மூட்டை எடுத்து போறவனுவ மூஞ்ச பாத்தாக்கா திராவிட களை சொட்டும். .


sankar
டிச 05, 2024 16:40

இது என்ன ஒரு கமல் மாதிரி ஒரு புரியாத கதை


karutthu kandhasamy
டிச 21, 2024 17:48

God yes கோடிஎஸ் உன் மதத்தில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம் ஆனால் இந்து மதத்தில் அப்படிகிடையாது ஆனால் நீ இந்து மாதத்தில் உள்ளவர்களை உன் பக்கம் காசு கொடுத்து இழுக்கிறாய். ஆனால் குருவாயூரில் இப்படி பண்ண முடியுமா ? ஆனானப்பட்ட கே ஜே யேசுதாஸ் இதுவரை குருவாயூர் சந்நிதியில் நுழைய முடியவில்லை உன் குசும்பு எல்லாம் உன்னுடைய சர்ச்சில் வைத்துக்கொள். GOD YES GODYES என்பவன் அய்யப்ப பக்கதர்களை தரக்குறைவாக பேசறான் நீ மட்டும் ஜெயலலிதா இது இசைவாணி ஆட்சியில் இப்படி பேசி இருந்தால் அவங்க உன்னை இந்நேரம் சுளுக்கு எடுத்திருப்பார்கள் இது இசைவாணி ப ரஞ்சித் என்பவனுக்கும் பொருந்தும்


VINODH RATHNAA
டிச 03, 2024 09:37

....


VINODH RATHNAA
டிச 03, 2024 09:31

இந்த பாட்டு பெண் உரிமைகளுக்காக பாடப்பட்டது. தவறு ஏதும் இல்லை


Baskaran
டிச 02, 2024 17:40

உன் சேவை போதும் இனி காண பாடவேண்டும் தமிழகத்தில் .... சுய தெளிவு உள்ளவர் இந்த வசைவாணி


Baskaran
டிச 02, 2024 20:55

சுய தெளிவு இல்லாதவர்


Ramesh Sargam
டிச 01, 2024 20:55

ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்நேரம் இவருக்கு சரியான பாடம் புகட்டி இருக்கலாம். நம்மிடம் ஒற்றுமை இல்லை.


Palanisamy T
டிச 09, 2024 19:55

ஒற்றுமை நிச்சயமாக ஏற்படும். இன்றும் நம்மிடையே சாதிவெறி தீண்டாமை இவைகளால் நம்மிடையே ஏற்பட்டுள்ள கசப்பான உயர்வு தாழ்வு எண்ணங்கள் மனப்பான்மைகள் இதன் விளைவால் ஏற்படும் பிரிவினைகள் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகலவேண்டும். உயர்சாதி தாழ்ந்த சாதியென்ற ஒரு இனமோ அல்லது ஒரு குறிப்பிட்ட மக்கள் என்ற அடையாளம் இல்லாதபோது இதற்க்கு நாம் ஏன் இவ்வளவு முக்கியத்துவம், இன்றும் அதற்க்கு உயிர்க் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம். மேலும் சாதிக்கும் நம் சமூக வாழ்விற்கும் எந்த தொடர்புமில்லை. ஆனால் சாதியுணர்விற்கும் நம் சமய வாழ்விற்க்கும் அறிந்துக் கொள்ளமுடியாத புரிந்துக் கொள்ளமுடியாத ஒரு உண்மை மறைந்துள்ளது. அறநெறி வாழ்க்கை வாழ்ந்து, ஆண்டவன் சிந்தனையோடு இருப்பவன் என்றும் உயர்ந்தவன். உயிர்க் கொள்ளாமை புலாலுண்ணாமை இவை யெல்லாம் அந்த உயர்மக்களின் வாழ்வுநெறிகள் நாமெல்லாம் அப்படி வாழவில்லை வாழவும் முடியாது. அவர்களை நம் முன்னோர்கள் உயர் சாதிக்காரர்களாக போற்றினார்கள். மறைமலை அடிகளார் தன்னூலில் இதைச் சொல்லியுள்ளார் .இதுவே காலத்தால் திசைமாறிப் போய் விட்டது. இன்று சாதி யென்ற உயர்ந்த சொல்லுக்கு உலகமே தவறான முத்திரையும் குத்திவிட்டது. நம் மக்களின் நாளைய வளர்ச்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும் ஆற்றல் கொண்டது இந்த சாதிவெறி மற்றும் தீண்டாமை. கெடுமதி நிறைந்த மதமாற்றக் கும்பல்கள் இந்த வேண்டாத விபரீத நெறிகளை பயன்படுத்தி தங்களின் விபரீத நோக்கங்களை நம்மிடம் நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். மற்றபடி அவர்களின் மதங்களில் விற்பனைக்கு இன்றும் நல்ல பொருள்கள் இருப்பதாக தெரியவில்லை


ganapathy v
நவ 28, 2024 14:06

வெக்கங் கெட்ட......


VeeJay
நவ 28, 2024 04:15

Good for the singer. She got free publicity. Wish her good luck. All these drama are to divert some big topics away from the publics attention.


Bala
நவ 27, 2024 16:45

2026 தேர்தலுக்கு பிறகு தாடி கீடின்னு பேத்தி பேரன்னு இந்து மதத்தையோ அல்லது இந்து கடவுளையோ இழிவா பொதுவெளில பேசிட்டு வெளியே திரியாதீங்க. அடக்கி வாசிங்க இல்லைனா தூக்கி போட்டு மிதிச்சிருவானுவோ.


Sekar Shunmugaraj
நவ 27, 2024 14:04

இந்த பாடல் வந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. என்ன அரசியலோ இப்போ செய்தி வருகிறது.


Raa
நவ 28, 2024 16:35

அப்படீன்னு எந்த கல்வெட்டில் பார்த்தீர்கள்?


karthikeyan
டிச 01, 2024 17:31

ரா... அதுதான் உண்மை. இந்த பாடல் வந்து நன்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.


சமீபத்திய செய்தி