உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ளத்தில் சேதமான அரசு ஆவணங்கள்: மீட்க முடியாமல் அலுவலர்கள் தவிப்பு

வெள்ளத்தில் சேதமான அரசு ஆவணங்கள்: மீட்க முடியாமல் அலுவலர்கள் தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெள்ளம் புகுந்ததால் சுரங்கத் துறை, முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட அலுவலக ஆவணங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 16 நாட்கள் ஆகியும் மீட்க முடியாமல் அலுவலர்கள், ஆசிரியர்கள் தவிப்பில் உள்ளனர்.திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், சுரங்கத் துறை அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. டிச.17, 18ல் தாமிரபரணியில் பெருக்கெடுத்த வெள்ளம் கரையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை மூழ்கடித்தது.கலெக்டர் அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்களில் பாதுகாக்கப்பட்டு வந்த அரசு ஆவணங்கள் நீரில் மூழ்கின. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெள்ளம் புகுந்ததில் அனைத்து கம்ப்யூட்டர்கள், அங்கு பணியாற்றும் 25க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சர்வீஸ் ரெக்கார்டுகள், அனைத்து அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் பணி பதிவேடுகள் நீரில் மூழ்கின.முதன்மை கல்வி அலுவலகத்தில் எந்த புள்ளி விபரங்கள், ஆவணங்களும் இல்லாமல் தற்போது அலுவலகம் மாவட்ட எஸ்.பி.அலுவலகம் அருகில் உள்ள தனியார் பள்ளியின் கம்ப்யூட்டர் அறைக்கு மாற்றப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அதிகாரியின் ஜீப் உள்ளிட்ட வாகனங்களும் நீரில் மூழ்கினபுவியியல் சுரங்கத்துறையின் அலுவலகத்திலும் அனைத்து ஆவணங்கள், சுரங்கங்கள், கல்குவாரிகள் குறித்த பதிவேடுகளும் நீரில் மூழ்கி விட்டன. அவற்றை அலுவலர்கள் வெளியே காய வைத்துள்ளனர்.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அரசு நிவாரண நிதி போன்ற பணிகளில் தற்போது முனைப்பு காட்டுவதால் பதிவேடுகள், ஆவணங்கள் குறித்து இனிதான் மேல் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்புசாமி
ஜன 03, 2024 17:06

கட்டிங், கமிஷன் குடுக்கலேன்னா ஆவணங்கள் காணோம்,


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 03, 2024 11:06

இதற்குத்தான் அணைத்து அரசு ஆவணங்களையும் மின்னணு முறையில் சேமிக்க வேண்டும் என்பது. ஆனால், இந்த திராவிட திருட்டு கூட்டம் தங்கள் சுயநலனிற்காக வேண்டுமென்றே அதை செய்யாமல் இருக்கிறது. இப்போது தாங்கள் அடித்த கொள்ளையின் ஆவணங்களை மழைவெள்ளத்தை காட்டி தப்பிவிடலாம் அல்லவா?


அப்புசாமி
ஜன 03, 2024 10:59

தத்திகள்.. நனக்கு ரேசன் குடுக்ஜணும், சேவை தரணும்னா சர்வர் வேலை செய்தலைன்னு டார்ச்சர் குடுப்பாங்க. இந்த ஃபல்களை ஸ்கேன் செஞ்சு வெக்க முடியாதா? கணினி வாங்குறோம்னு ஆட்டை மட்டும்.போடத் தெரியும்.


spr
ஜன 03, 2024 08:01

இயற்கை கூட இவர்களுக்கு உதவுகிறதோ கணிணி மயமாக்கல் என்று சொல்லித் தப்பும் தவருமாகப் பதிந்து அதனைத் திருத்த அதிகாரிகள் காசு வாங்கும் நிலையிருந்தும் ஆவணங்கள் அழிந்து போவதால் எத்தனை வழக்குகள் சாட்சியமின்றி செத்துப் போகுமோ இதெல்லாம் மோடிக்குத் தெரியாதா? அரசின் அனைத்து ஆவணங்களும் குறிப்பிட்ட காலத்துக்குள் கணிணி மயமாக்கப்பட்ட வேண்டுமென்று சட்டமியராக கூடாதா


J.V. Iyer
ஜன 03, 2024 07:10

இதுபோன்ற பேரிடர்கள் ஏற்படும்போது ஆவணங்களை எப்படி பாதுகாப்பது என்ற வரைமுறை இருக்கவேண்டும். அதை கடைப்பிடித்து இருந்தால் இதை தவிர்த்து இருக்கலாம். காகிதத்தில் இல்லாமல் அந்த காலம் போல ஓலைச்சுவடிகளிலோ, செப்பேடுகளிலோ, அல்லது கல்வெட்டிலோ பொறித்திருந்தால் கவலை இல்லை. இந்த திராவிட அரசு ஆட்சியில் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? எதற்கும் துப்பு இல்லை.


Ramesh Sargam
ஜன 03, 2024 06:35

அரசு ஆவணங்கள் சரியாக இருந்தாலே மக்களுக்கு தேவையானவை கிடைக்காது. இதில் இனிமேல் மக்களுக்கு என்ன கிடைக்கும்? கணினி கண்டுபிடிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும், இன்னும் பேப்பரில் எழுதுவது சரியா? முறையாக கணினியில் விவரங்களை சேமித்து வைக்கமுடியாதா?


Kasimani Baskaran
ஜன 03, 2024 05:38

மின்னிலக்க முறையில் ஆவணங்கள் இருந்தும் எப்படி நனைந்தது? இன்னும் எவ்வளவு நாளுக்குத்தான் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு இருப்பார்கள்...


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி