உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய விவகாரத்தில் அரசு தோல்வி: அன்புமணி குற்றச்சாட்டு

கள்ளச்சாராய விவகாரத்தில் அரசு தோல்வி: அன்புமணி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய மரணங்கள் அரசின் தோல்வியை காட்டுகிறது என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.இது தொடர்பாக நிருபர்களிடம் அன்புமணி கூறியதாவது: கள்ளச்சாராய மரணங்கள் அரசின் தோல்வியை காட்டுகிறது. மக்களை ஓட்டு வங்கி அரசியலாக அரசு பார்க்கிறது. உயிரிழப்பு என்பது அரசின் தோல்வியை காட்டுகிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக கள்ளச்சாராயம் குடித்து, சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பிறகு அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு மாதம் ஆட்சி எங்களிடம் இருந்தால் போதும், தமிழகத்தை சுத்தம் செய்வோம். ராமதாஸ் போாரட்டம் காரணமாக பல கட்சிகள் பூரண மதுவிலக்கை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டன. போலீசாருக்கு தெரியாமல் சாராயம் காய்ச்ச முடியாது. கஞ்சா விற்க முடியாது. தமிழகம் கஞ்சா நாடாக மாறிவிட்டது. அமெரிக்காவில் கிடைக்கும் போதைப் பொருள் இங்கு விற்கிறது. இது குறித்து முதல்வரிடம் தெரிவித்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை.வருங்காலத்தில் இது போன்று நடக்கக்கூடாது என்றால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். சிபிசிஐடி விசாரணை வெறும் கண்துடைப்பு தான். சிபிசிஐடி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பார்கள். விசாரணை நேர்மையாக உண்மையாக இருக்காது. கண்துடைப்பாக 10, 15 பேரை கைது செய்வார்கள். டாஸ்மாக் கடையை படிப்படியாக குறையுங்கள். குடிநோயாளிகளை அரசு உருவாக்கி உள்ளது. என்ன நிலைக்கு தமிழகம் செல்கிறது. மதுவை திணிக்கிறார்கள். செந்தில்பாலாஜி இருந்தால் மது விற்பனை 70 ஆயிரம் கோடிக்கு சென்று இருக்கும்.கல்வராயன்மலை வாழ் மக்களுக்கு மத்திய அரசு திட்டங்கள் நிறைய உள்ளது. அதனை கொண்டு சேர்ப்பது கிடையாது. வாழ்வாதாரம், படிப்பு இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவர்களை ஓட்டு வங்கியாக வைத்துள்ளனர். இவர்கள் படித்து முன்னேற கூடாது என திமுக., நினைக்கிறது. வன்னியர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு திமுக செய்த துரோகம் இது. அவர்கள் படித்தால் அவர்களுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். பூரண மதுவிலக்கு தொடர்பாக பிரசாரம் செய்யும் போது, பெண்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். தற்போது குறைந்துள்ளது. இரண்டு பேரும் சேர்ந்து குடிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு அன்புமணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Syed ghouse basha
ஜூன் 21, 2024 18:26

உண்மை தான் அன்புமணி சொல்வது போல அரசு கள்ளசாரய விவகாரத்தில் தோல்வி அடைந்து விட்டது ஆனால் உண்மையில் கள்ள சாராய மரணம் வெள்ளைகாரன் ஆட்சியிலிருந்து நடக்குது இதை தடுக்க இவர் சுகாதார அமைச்சராக இருந்தபோது இந்திய அளவில் மதுவிலக்கு சட்டத்தை கடுமையாக போட்டிருக்கலாம்லே? அதைவிடுத்து இப்போ வந்து அரசியல் செய்வது சரியானது இல்லை மக்கள் முட்டாள்களும் இல்லை


duruvasar
ஜூன் 21, 2024 17:48

ஒட்டுமொத்தமாக திராவிட மாடல் ஆட்சியே ஒரு தோல்வி. இதில் ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் தோல்வி என குறிப்பிட்டு சொல்லவேண்டிய அவசியமில்லை.


GMM
ஜூன் 21, 2024 17:44

சில குழந்தைகள் பல் வளர்ந்த பின்பும் தாய் பால் விரும்பும். தாய் பால் மறக்க கொமடிக்காய் கசக்கும் தேய்த்து பெற்ற தாய் மறக்க செய்வதுண்டு. தமிழக பூரண மதுவிலக்கை ஒன்றும் பெரிய யுத்தம் அல்ல. எளிதில் அமுல்படுத்த, மறக்க செய்ய முடியும். கள்ள சாராயம் பெருகும், பண்டிசேரி செல்வர் என்று நிரந்தர திராவிட அறிக்கை முன்னாள் நீதிபதியிடம் பெற்று, மாற்றி விடுவர். நில அபகரிப்பு, மருத்துவ, டாஸ்மாக்.. வருவாயில் கட்சி நிலைத்தது. நீட் பெரும் இழப்பை கொடுத்து வருகிறது. மது விலக்கு திமுக, அண்ணா திமுக கொண்டு வராது. வாக்காளர்களை விலைக்கு வாங்கும் கட்சிகள். நிதி இன்றி திராவிடம் நீர்த்து போகும். கடன் பெறுதல், இலவச கொள்கை தவிர எந்த கொள்கையும் கிடையாது.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 21, 2024 17:41

இதுல மட்டுமா ? ஆளத் தெரியாதவர்களைத்தான் தமிழன் தேர்ந்தெடுப்பான் ......


கோவிந்தராஜ்
ஜூன் 21, 2024 17:39

என்னது ஒரு மாசம் ஆட்சி வேனுமா.ஒரு மாசம் எண்ண.5ந்து வருடம் கூட குடுக்க முடியும் ஆணா அதுக்கு உண்டாண . பணபலம் உண்டா இருந்தா சரி இல்லாடி கணவில் மட்டுமே ஆட்சி


nizamudin
ஜூன் 21, 2024 17:21

கள்ள சாராயமும் நல்ல சாராயமோ குடிப்பவர்கள் கட்சியில் உறுப்பின்னர் அட்டை கான்செல் செய்யுங்கள்/ எல்லா கட்சிகளிலும் மொடா குடிகாரர்கள் நிறைய பேரகள் உண்டு


Thiruvengadam Ponnurangam
ஜூன் 21, 2024 17:21

அய்யா, இதனை ஈனும் கொஞ்சம் அழுத்தமா சொன்னாதான் அவங்களுக்கு புரியும், மக்களுக்கும் புரியும்.. ஒட்டுக்கு பணமா மாதம் 1000 பணம் வாகினத்துக்கு பலன் இதுதான். அனுபவித்துத்தான் ஆகவேண்டும். மக்கள் திருந்தினாலொழிய வேறு வழியில்லை


Senthoora
ஜூன் 21, 2024 17:08

நீங்க சொல்வது தவறு, மற்றைய ஆட்சிக்காலத்தை விட கள்ளச்சாராயம் தமிழகத்தில் குறைத்திருக்கு, முற்றிலும் குறைபது கடினம், திருடனாய் பார்த்து திருடன் திருந்தனும்.


srinivasansundar
ஜூன் 21, 2024 17:07

நம் மக்கள் மறதி மன்னர்கள். அதனால் எல்லாவற்றையும் மறந்து திரும்ப அவர்களுக்கே வாக்கு அளிக்கும் குணம் கொண்டவர்கள். கவலையை விடு


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை