உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன் சொல்கிறார்!

துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன் சொல்கிறார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: '' என்னை கொல்ல வந்தவர்களைக் கூட மன்னிப்பேன். கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க மாட்டேன்,'' என தி.மு.க., பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசினார்.வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது: தேர்தல் எப்படி நடக்கும், எப்படி வியூகம் வகுப்பார்கள் என்பது எனக்கு தெரியும். யாரும் என்னை ஏமாற்ற முடியாது. ஒருமுறை நான் ஏமாந்துவிட்டேன். அது கோவிட் காலத்தில் நடந்தது. அப்போது என்னால் வேகமாக வரவும் போகவும் முடியவில்லை. இல்லை என்றால் கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன்.சில துரோகங்களை எனக்கு நடத்தினார்கள். ஆனால், துரோகிகளை களையெடுத்துவிட்டு தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் ஆற்றல் துரைமுருகனுக்கு உண்டு. நான் யாரையும் மன்னிப்பேன். கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க மாட்டேன். என்னையே கொல்ல வந்தால் கூட மன்னிப்பேன்.60- 70 ஆண்டுகள் கட்சியை வளர்த்தவன் நான். ஆகையால் இது எனது கட்சி, நம்முடைய கட்சி என்ற புத்தியோடு இருப்பவன் நான். அந்த கட்சிக்கு துரோகம் செய்பவர்களை விட வேறு கொடுமை இருக்க முடியாது. போன முறை நான் எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து இருந்தேன். விளைவு சில பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அந்த பாடத்தை திரும்பி பார்க்க மாட்டேன். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Ramalingam Shanmugam
நவ 16, 2024 10:27

நம்ம எப்புடி


Vmcsundar Sundar
நவ 16, 2024 00:46

துரைமுருகன் ஏன் உளறிக் கொண்டிருக்கிறார் தெரியுமா அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை ஆதலால் அவர் உளறிக் கொண்டிருக்கிறார் இப்போது வந்த உதயநிதி துணை முதலமைச்சர் பதவி வாங்கி உள்ளார் உங்களால் வாங்க முடிந்ததா அப்போது நீங்கள் என்ன டம்மி டம்மி


Vmcsundar Sundar
நவ 16, 2024 00:45

துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கவில்லை ஆதலால் தான் அந்த கோபத்தில் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் இப்போது வந்த உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற எம்எல்ஏ ஆனார், இப்போதுதுணை முதல்வர் பதவியை வாங்கி விட்டார் நீ அடுத்தது முதல்வர் தான் இவருக்கு டாட்டா பை சியோ கிழவனுக்கு பதில் அவ்வளவுதான் இன்னொன்று தெரியுமா நீங்கள் யாரை வைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை முன்னாள் அ இ அ தி மு க வைத்துத்தான் இன்று நீங்கள் அமைச்சரவையே நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் அது முதலில் உங்களுக்கு தெரிந்து கொள்ளுங்கள் ஏன் கலைஞர் இருக்கும்போது அஇஅதிமுக இருந்து திமுகவுக்கு வந்தவருக்கு எத்தனை பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்தீர்கள்எத்தனை பேர் அமைச்சர்கள் இருந்தார்கள் என்று எத்தனை பேருக்கு பதில் அஇஅதிமுக விழுந்து வந்த திமுகவில் சேர்ந்த இன்று அமைச்சர் பதவி வாங்கி உள்ளார்கள்அமைச்சர் பதவி கொடுத்துள்ளீர்கள் ஏன் துரைமுருகனால் பதவி வாங்கவில்லை உங்களுக்கு வாய்ஸ் போய்விட்டது பழைய பஞ்சாங்கத்தை பாடிக் கொண்டிருந்தால் தெருவில் போக வேண்டியதுதான்


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 15, 2024 22:12

சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை எத்தனை முறை கட்சியை விட்டு நீக்கி எத்தனை முறை மன்னிப்பு கடிதம் வாங்கி எத்தனை முறை மீண்டும் கட்சியில் சேர்த்திருக்கிறீர்கள்.


Anantharaman Srinivasan
நவ 15, 2024 21:13

60- 70 ஆண்டுகள் கட்சியை வளர்த்து என்ன பிரயோசனம்.? நேற்று முளைத்த சின்னபயல் junior most in the party தட்டிக்கொண்டு போய்விட்டானே துணைமுதல்வர் பதவியை மு க பேரன் என்ற ஒரே காரணத்தால். இல்லாவிட்டால் வட்டசெயலாளர் கூட ஆகியிருக்க முடியாது.


வைகுண்டேஸ்வரன்
நவ 15, 2024 20:17

இவருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருந்தால் இங்க எல்லாரும் அப்படியே திமுக வில் இணைந்திருப்பார்கள் போல எழுதுகிறார்கள். துரை முருகனை கலாய்க்கிறாங்களாமா.. ???‍


Satish NMoorthy
நவ 15, 2024 18:43

Hello Mr Durai Murugan, did you say that to Mr Stalin when he promoted his son Udayanidhi for the post of Dy CM. What you have sowed in the past, now you are reaping


Ramesh Sargam
நவ 15, 2024 18:30

துணை முதல்வர் பதவி கிடைக்காத துக்கத்தில் இப்படி பேசுகிறார். அப்ப துரோகிகள் யாரு?


பாலா
நவ 15, 2024 18:25

கட்டுமரத்தின் மரக்கட்டை சாப்பாட்டு அறை அமைச்சாராவையை மன்னிக்க மாட்டேன் என்று சொல்லாமல் சொல்லுகின்றான் மணல் மாபியா


sridhar
நவ 15, 2024 18:15

உன்னை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடத்தை பிடித்த உனக்கு என்ன பயம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை