உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடல் வழியாக வங்கதேச பயங்கரவாதிகள் ஊடுருவல்

கடல் வழியாக வங்கதேச பயங்கரவாதிகள் ஊடுருவல்

சென்னை : நம் நாட்டின் அசாம் மற்றும் மேற்கு வங்கம் வழியாக, மற்ற மாநிலங்களுக்குள் ஊடுருவி வந்த அண்டை நாட்டவரான வங்க தேசத்தினர், தற்போது கடல் வழியாகவும் ஊடுருவி, கிழக்கு கடலோர மாநிலங்களில் குடியேற ஆயத்தம் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகமுள்ள நகரங்களில், அவர்கள் சட்ட விரோதமாக குடியேறி வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, சென்னை புறநகர்கள் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட தொழில் அல்லது வணிக நகரங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையிட துவங்கியுள்ளனர்.வங்க தேசத்தில் கலவரம் ஏற்பட்டு, அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்ட பின், அங்கிருந்து ஏராளமானவர்கள் வெளியேறி வருகின்றனர். அவர்கள் கடல் வழியாகவும், அசாம் மற்றும் மேற்கு வங்கம் வழியாகவும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்குள் ஊடுருவி வருவதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. வங்க தேசத்தினர் ஊடுருவல் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுத இருப்பதாக, அசாம் முதல்வர் சமீபத்தில் கூறினார். தமிழகத்திற்குள் ஊடுருவியவர்கள், பெரும்பாலும் ஹோட்டல் மற்றும் ஜவுளி நிறுவனங்களில் எளிதாக வேலை கிடைத்து, ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்கள் உதவியுடன் இடம் பிடித்து தங்கி இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர், கருநீலம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி, 44 பேரை கைது செய்தனர்.மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என, பொய் தகவல் தந்து இடமும், வேலையும் பெற்றதாக அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டுள்ளனர். போலி ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றை ஏற்பாடு செய்து தர, தமிழகத்தில் ஏஜென்ட்கள் செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.இதற்கு முன், திருப்பூர் பல்லடம் சாலை வீரபாண்டி அருகே, பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வங்க தேசத்தினர் 11 பேர் சிக்கினர். அந்த இடங்களில், தற்போதும் வங்க தேசத்தினர் பதுங்கி உள்ளனரா என்பது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். 'மாநில போலீசாருடன் இணைந்து, கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வங்க தேசத்தினர் ஊடுருவ உதவி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பனியன் தயாரிப்பு உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது' என அதிகாரிகள் கூறினர்.- நமது நிருபர் -வங்கதேசத்தில் யூனுஸ் தலைமையிலான தற்காலிக அரசு எடுத்து வரும் பல நடவடிக்கைகள், இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.உலகில் பிரபலமான பயங்கரவாத அமைப்பு, அல் - குவைதா. இதனுடன் இணைந்த பயங்கரவாத அமைப்பு அன்சருல்லாஹ் பங்களா டீம். வங்கதேசத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த இயக்கத்தின் தலைவர் ஜாஷிமுதின் ரஹ்மானி. வங்கதேசத்தில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வந்த, ஏ.பி.டி., என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமைப்பு, இந்தியாவிலும் கிளை பரப்பி வளர்ந்துள்ளது. இதன் ஸ்லீப்பர் செல்கள், இந்தியாவில் பரவலாக தங்கி செயல்படுகின்றனர்.

கைகோர்ப்பு

ஜாஷிமுதின் ரஹ்மானி, வங்கதேச சிறையில் இருந்த போதே, அவரது அமைப்பினர் இந்தியாவுக்குள் சில அசம்பாவிதங்களை ஏற்படுத்தியதை ஓர் அதிகாரி கவலையுடன் விவரித்தார். யூனுஸ் அரசு அவரை விடுதலை செய்திருப்பது, இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் ஆதரவுடன் இந்தியாவுக்குள் செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளோடு, ரஹ்மானியின் அமைப்பினரும் கைகோர்த்து செயல்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால், ராணுவ உளவு பிரிவினர், மத்திய உளவுத்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளனர். இதையடுத்து உளவு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. மத்திய உளவுத்துறை அதிகாரி நமது நிருபரிடம் கூறியதாவது:ஜமா அத் - இ - இஸ்லாமி என்ற அமைப்புக்கு ஷேக் ஹசீனா அரசு தடை விதித்திருந்தது. யூனுஸ் அரசு அதை ரத்து செய்துள்ளது. இந்திய பிரிவினைக்கு முன்பாகவே, சையத் அபுல் அலா மவுதுாதியின் தலைமையில், 1942ல் நிறுவப்பட்டது இந்த அமைப்பு. இதுவரை நான்கு முறை தடை செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த, 1959, 1964ம் ஆண்டுகளில் பாகிஸ்தானிலும், 1972ல் சுதந்திர வங்கதேசத்திலும், புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின், ஜமா அத் மற்றும் அனைத்து மத கட்சிகளும் தடை செய்யப்பட்டன.தற்போது தடை நீக்கப்பட்டதன் வாயிலாக, இந்த அமைப்பானது மற்ற அரசியல் இயக்கங்களை போல, அரசியல் செயல்பாடுகளில் இறங்க வழி கிடைத்துள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தான், ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர் போராட்டத்தின் போது, ஷெர்பூரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையை தகர்த்து, 500க்கு மேற்பட்ட கைதிகளை விடுவித்தனர். காஜிபூரில் உள்ள மற்றொரு சிறையிலும் தாக்குதல் நடத்தி, 209 கைதிகள் தப்ப ஏற்பாடு செய்தனர். தப்பியவர்களில் பெரும்பாலானவர்கள் பயங்கரவாதிகள். அவர்களில் பலர் தமிழகத்தில் கால் பதித்திருக்கலாம் என்று நம்பகமாக தெரிகிறது.

வேறு அடையாளம்

அதேபோல, வங்கதேசத்தின் ஜமா அத் -- உல் --- முஜாஹிதீன் அமைப்பு, மேற்கு வங்கத்தில் ரகசியமாக செயல்படும் ஐ.எஸ்.-ஐ.எஸ்., கிளைக்கு பக்கபலமாக இயங்குகிறது. அதன் தீவிர உறுப்பினர் மேற்கு வங்கத்தின் லப்பூரை சேர்ந்த மஜ்னு எனப்படும் மோசி என்ற மொசிருதீன். இவர் பல ஆண்டுகளாக, திருப்பூரில் வேறு அடையாளத்துடன் வசிப்பதாக வங்கதேச உளவுத்துறை அனுப்பிய தகவலின்படி, கோல்கட்டாவிற்கு 2016ல் குடும்பத்துடன் செல்லும் வழியில், தமிழக போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.திருப்பூருக்கு அழைத்து வரப்பட்டு, அவருடைய வீட்டில் சோதனையிட்ட போது, ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த பின்னணியில் தான், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதிலும் இருந்து உழைப்பாளிகளை ஈர்க்கும் திருப்பூர் நகரம், புகலிடம் தேடி வரும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பான இடமாக தோற்றம் அளிக்கிறது. தமிழக காவல் துறை மனம் வைத்தால் மட்டுமே அந்த தோற்றத்தை மாற்ற முடியும். இவ்வாறு அதிகாரி கூறினார்.

வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

M Ramachandran
ஆக 31, 2024 23:40

ஒரு ஓட்டு பொருக்கி அம்மையார் கைங்கர்யம். இஙகுள்ள தத்திக்கு அது புரியல. முக்கால் வாசி சட்ட பிரச்சனிய்யகள் அந்த வந்தேரி கும்பல்களால் தான்


venugopal s
ஆக 31, 2024 23:14

இவ்வளவு திறமையான, தேசபக்தி உள்ள ராணுவத்தை வைத்துக் கொண்டு தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க முடியாத மத்திய பாஜக அரசு திறமையற்றது!


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 31, 2024 19:44

அவர்களது சொர்க்க பூமியாக தமிழ்நாடு திகழும் ..... உலக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற முயற்சிக்கும் பிரதமர் நேரமிருந்தால் சொந்த நாட்டு மக்களை காக்கலாம் .....


Rasheel
ஆக 31, 2024 19:12

இந்த காட்டுமிராண்டிகளுக்கு வேலை குடுக்கும் கோமாளிகளை கடுமையான தண்டனை மூலம் தண்டிக்க வேண்டும். இங்கே சட்ட விரோத செயல்கள், கொலை, செயின் பறிப்பு பாக்டரி தீ வைப்பு போன்ற செயல்களை செய்து விட்டு ரயிலை பிடித்து ஈஸியாக பார்டர் தாண்டி சென்று விடுவார்கள்.


Krishnaswame Krishnaswame
ஆக 31, 2024 15:04

என்ன செய்கிறது உள்துறை அமைச்சகம்??? மாநில அரசை விட மத்திய அரசின் செயல்பாடுகள் தான் வேகமாகவும், விவேகமாகவும் இருக்க வேண்டும். ஒருவனைக் கூட உள்ளே ஊடுருவ அனுமதிக்க கூடாது. இங்கே வந்து தங்கியிருப்பவனுங்களையும் உடனடியாக நாடு கடந்த வேண்டும். மாநில அரசுகளுக்கு இவனுங்க அதிகம் வருவது ஓட்டு அரசியலுக்கு சாதகம் என வாய் மூடி வேடிக்கை மட்டும் பார்க்கும்.


N.Purushothaman
ஆக 31, 2024 14:46

தமிழகத்தில் இப்போது நடப்பது சமூக நீதி ஆட்சி ...அதாவது சிறுபான்மையினர் எந்த நாட்டில் இருந்து எப்படி வந்தாலும் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு வேண்டிய அனைத்தும் செய்து கொடுக்கும் ஆட்சி ...


Lesly Loyans
ஆக 31, 2024 13:44

இவனுங்க எங்க போனாலும் அந்த நாட்டுக்கு விசுவாசமா இருக்கமாட்டானுங்க மதத்துக்கு தான் விசுவாசமான இருப்பானுங்க. தொப்பிள்கொடின்ற பேர்ல தமிழ்நாட்டுல நிறையபேர் இருக்கானுங்க.


Corporate Goons
ஆக 31, 2024 11:28

விரக்தியில் இருக்கும் கும்பல் கிளப்பிவிடும் புரளி , பரப்பும் வதந்தி. தமிழகத்தை மட்டும் குறிவைக்கிறார்கள் என்று தமிழர்களை மிரட்டும் உத்தி . சுயபுத்தி இல்லையெனில் சொல்புத்தியாவது இருக்கவேண்டும்


நிக்கோல்தாம்சன்
ஆக 31, 2024 13:32

எது விரக்தி , எஸ்வந்த்புர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒருநாள் வந்து நோட்டம் விடுங்க நண்பரே , தினம் வரும் ரயில்களில் கூட்டம் கூட்டமாக வந்து அந்த ரயில்வே ஸ்டேஷனில் போலீஸ் நிலையம் அருகேயே கூடாரம் அமைத்து தங்கியிருக்கிறார்கள் , கேட்டால் உத்தரபிரதேசம் , மேற்கு வங்கம் என்று கூறுவதும் , அவர்களை கேட்கையிலேயே உள்ளூர் வந்தேறிகள் வந்து என்ன என்ன என்று விசாரிப்பதும் , ஏதோ ஒரு கேட்டினை பிளான் பண்ணி செய்வது போல தோன்றுகிறது


Duruvesan
ஆக 31, 2024 14:19

உருது பேசும் பெயர் இல்லாத இப்போ தமிழன் ஆயிட்டார்


ஆரூர் ரங்
ஆக 31, 2024 10:42

கடல் வழியாக வந்தால் திமுக வரவேற்காதா என்ன? சிறுபான்மையினர் எந்த வழியில் வந்து என்ன செய்தாலும் திமுக அவர்களுக்கு கேடயமாக இருக்கும்.


Anand
ஆக 31, 2024 10:33

தமிழ்நாட்டில் சல்லடை போட்டு தேடவேண்டும். கள்ளக்குடியேறி என தெரிந்தாலே சுட்டுத்தள்ளவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை