உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பா? தி.மு.க.,வை சாடும் பா.ஜ.,

 ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பா? தி.மு.க.,வை சாடும் பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஓட்டு வங்கிக்காக தி.மு.க., தலைவர்கள் முன்னெடுக்கும், பிளவுவாத அரசியலில், அரசு அதிகாரிகள் பங்குதாரர்களாக மாறிவிட்டனரா' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது அறிக்கை: ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான், தி.மு.க., அரசின் மத நல்லிணக்கமா? உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றவிடாமல் தடுத்துவிட்டு, அதே மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்திற்கு அனுமதி அளித்துள்ள தி.மு.க., அரசின் ஹிந்து மத வெறுப்பு, கண்டனத்திற்கு உரியது. ஹிந்துக்களின் நம்பிக்கைகள் என்பதையும் தாண்டி, தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளை, தி.மு.க., அரசு திட்டமிட்டு பறித்துள்ளதையே இச்சம்பவம் உணர்த்துகிறது. மத்திய பாதுகாப்பு படையினருடன், குறிப்பிட்ட சிலர் மட்டும், மலை மீது சென்று தீபம் ஏற்றினால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை வந்துவிடும் என மிகைப்படுத்தி, நீதிமன்ற உத்தரவையும் மீறி தடை உத்தரவு பிறப்பித்த தி.மு.க.,வின் ஏவல் துறை, நேற்று முன்தினம் இரவோடு இரவாக, திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள கல்லத்தி மரத்தில், சந்தனக்கூடு விழாவிற்கு கொடியேற்ற எப்படி பாதுகாப்பு அளித்தது? ஓட்டு வங்கிக்காக தி.மு.க., தலைவர்கள் முன்னெடுக்கும் பிளவுவாத அரசியலில், அரசு அதிகாரிகள் பங்குதாரர்களாக மாறிவிட்டனரா? முஸ்லிம் சகோதரர்களின் விழாக்களை கொண்டாடுவதில், ஹிந்துக்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. ஹிந்துக்கள் திருப்பரங்குன்றம் மலை மீது தீபமேற்றுவதில், முஸ்லிம்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், அமைதியாக நடக்க வேண்டிய அவரவர் மத விழாக்களில், தி.மு.க., எதற்கு உள்ளே புகுந்து குட்டையை குழப்புகிறது. சகோதரத்துவத்துடன் பழகி வரும் இரு சமூகத்தினரிடையே எப்படியாவது மதக் கலவரம் வர வேண்டும். அதை வைத்து, அடுத்த முறை அரியணை ஏற வேண்டும் என்ற தீய எண்ணமே காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Svs Yaadum oore
டிச 23, 2025 07:50

இரவோடு இரவாக, திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள கல்லத்தி மரத்தில், சந்தனக்கூடு விழாவிற்கு கொடியேற்ற எப்படி விடியல் அனுமதி?? .....அதற்கும் மேல் கோர்ட்டில் வக்கீல் திருப்பரங்குன்றம் மலை தர்காவிற்கு சொந்தம் என்று பேசறார் ...அதுக்கும் ஹிந்து அற நிலையத்துறை வக்கீல் பதில் பேச வில்லை ...அப்படி என்றால் என்ன அர்த்தம் ??....


Priyan Vadanad
டிச 23, 2025 07:03

அதெப்படி?


pmsamy
டிச 23, 2025 07:03

பாஜக தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை சரிவர கொடுப்பதில்லை அதைத்தான் கரெக்டா சொல்லிட்டிங்க


Thiru, Coimbatore
டிச 23, 2025 06:55

உண்மை தான்... எல்லாமே ஓட்டுக்காக தான்... ஜமாத்தில் சொன்னால் போதும் எவ்ளோ படித்தவர்களாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு எதைபற்றியும் யோசிக்காமல் தீமூகாவிற்கு ஓட்டு போடுவார்கள்.. ஆனால் இந்துக்கள் அப்படி இல்லையே.. சாதி வாரியாக பிரிந்து சிதறி கிடக்கிறார்கள்.. அவர்கள் எந்த காலத்திலும் ஒன்றுசேராமல் இருப்பதை தான் திராவிட அரசியல் சரியாக செய்து கொண்டு இருக்கிறது... இங்க எந்த இந்துவும் இஸ்லாமியர்களை வெறுப்பதில்லை. ஆனால் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் சொல்லாததும் கோவை வெடிகுண்டு பயங்கரவாதிகளை விடுதலை பண்ண முயற்சி எடுப்பது போன்றவை எல்லாம் சிறுபான்மையினரின் ஓட்டுகளை அள்ளதான் என்பது படித்த அறிவுள்ள அனைவரும் அறிவர்...


Mani . V
டிச 23, 2025 06:54

மன்னிக்கவும், இன்றல்ல கருணாநிதி காலத்தில் இருந்தே அந்தக் குடும்பத்துக்கு இந்துக்களைப் பிடிக்காது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை