உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசின் கொள்கை முடிவை முடக்குவதை ஏற்க முடியாது

அரசின் கொள்கை முடிவை முடக்குவதை ஏற்க முடியாது

சென்னை: 'நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில், மத்திய அரசு எடுத்துள்ள முக்கிய கொள்கை முடிவுகளை, முடக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது' என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை, பொதுத் துறை நிறுவனங்களாக மாற்றுவதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது. ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை, பொதுத்துறை நிறுவனங்களாக மாற்ற, கடந்த 2021ம் ஆண்டு ஜூனில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக, ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து, அகில இந்திய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஹேமந்த் சந்தன்கவுடர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில், மத்திய அரசு முக்கிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. இதுபோன்ற அசாதாரண கொள்கை முடிவுகளை முடக்கும் வகையிலான, இந்த எதிர்ப்புகளை ஏற்க முடியாது. ஒரு வேளை போர் அறிவிக்கப்பட்டு, ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களில் இருப்பில் இருந்த ஆயுதங்கள்தீர்ந்து, மேலும் ஆயுதங்கள் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், அரசு அவசர முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதிக உற்பத்தி திறனுடன், சுமூகமாக செயல்படுவதை உறுதி செய்யவே, ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை, பொதுத் துறை நிறுவனங்களாக மாற்ற, நீண்ட விவாதங்களுக்கு பின், மத்திய அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

NAGARAJAN
அக் 29, 2025 13:51

மிகச்சரியான தீர்ப்பு. . அதேபோல் மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட கூடாது. .


V Venkatachalam, Chennai-87
அக் 29, 2025 12:10

உண்டி குலுக்கிகள் விஷயத்தில் மத்திய அரசு மிக மிக கவனமுடன் இருக்க வேண்டும். அவனுங்களை வேரோடு அப்புறப் படுத்தணும்.


SaiBaba
அக் 29, 2025 09:32

மேக்கொண்டு உச்ச நீதிமன்றம் என்று ஒன்று உள்ளது என்பதை யாரும் மறக்க வேண்டாம்.


VENKATASUBRAMANIAN
அக் 29, 2025 08:08

முதல் முறையாக நல்ல தீர்ப்பு நாட்டு நலனுக்காக


Iniyan
அக் 29, 2025 08:05

வழக்கு தொடுத்தவர்கள் நக்சலைட்கள். தொழிலாளர் கூட்டமைப்பு என்பது வெறும் முக மூடி.


GMM
அக் 29, 2025 07:37

ராணுவ அமைச்சக அறிவிப்பை எதிர்த்து, அகில இந்திய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் கூட்டமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன ? கொள்கை முடிவு சட்ட விரோதம் என்றால் மட்டும் தான் நீதிமன்றம் நாட முடியும். அந்நிய கைக்கூலிகள் நிறைந்த தமிழகம்.


Varadarajan Nagarajan
அக் 29, 2025 07:36

தனியார் நிறுவனங்களின் உற்பத்தி திறன், நிர்வாக வளர்ச்சி, புதிய புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை பொதுத்துறை நிறுவனங்களில் ஒருகாலமும் இருந்ததில்லை. பொருளாதார வளர்ச்சியில் நாம் புதிய சவால்களை எதிர்கொண்டு வேகமாக வளரவேண்டிய நிலையில் நாம் இருக்கும்போது பொதுத்துறை நிறுவனங்கள் அதற்க்கு ஈடுகொடுக்கமுடியவில்லை. தனியார் நிறுவனங்களில் முடிவெடுக்கும் வேகம் மற்றும் திறன் பொதுத்துறை நிறுவனங்களில் இல்லை என்பது அனைவரும் அருந்ததி. அரசு நிதியிலும் மான்யத்திலும் இயங்கிய பல பொதுத்துறை நிறுவனங்கள் முன்னேறவில்லை. ஆயுள் காப்பீட்டு நிறுவனம், பாரத மிகு மினுற்ற்பத்தி நிறுவனம் போன்றவை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டபிறகுதான் முன்னேற்றம் அடைந்துள்ளன. எனவே அரசின் முடிவு இந்த காலகட்டத்தில் மிக சரியானதே.


ஆரூர் ரங்
அக் 29, 2025 07:00

வணிகம் (ஆலைகள்) நடத்துவது அரசின் வேலையல்ல என காங்கிரஸ் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அப்போது அளித்த பேட்டியில் கூறியுள்ளார் . தனியார்மயமாக்கல் கொள்கையை அமல்படுத்தத் துவங்கியது நரசிம்ம ராவ் அரசு. இதே பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழிருந்த BEL, HAL நிறுவனங்கள் பொதுத்துறையாக மாற்றப்பட்ட பிறகு அடைந்துள்ள அபார வளர்ச்சியைப் பாருங்கள்.


nagendhiran
அக் 29, 2025 06:28

கொள்கை முடிவாக நீட், கிஸ்தி வேண்டாம் என்றால் விட்டுவிடுவீங்களா?


duruvasar
அக் 29, 2025 07:47

முடிவெடுத்தால் யாரும் ஒன்றும் செய்யமுடியாது.


Field Marshal
அக் 29, 2025 05:05

உண்டியல் கட்சிகள் தான் எந்த துறையையும் உருப்பட விடுவதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை