உணவில் பல்லி 8 மாணவர்கள் மயக்கம்
வலங்கைமான்:திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, பூனாயிருப்பு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், 14 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். நேற்று காலை, மாணவ - மாணவியர் 8 பேர் காலை உணவாக ரவா கிச்சடி, சாம்பார் சாப்பிட்டனர். இதை சாப்பிட்ட இரண்டு பேர் வாந்தி எடுத்தனர். அவர்களுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. ஊழியர்கள், உணவை சோதித்து பார்த்ததில், சாம்பாரில் பல்லி கிடந்தது தெரியவந்தது. அனைவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று மாலை, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.