உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரிகையாளர்களுக்கு இன்று மருத்துவ முகாம்

பத்திரிகையாளர்களுக்கு இன்று மருத்துவ முகாம்

சென்னை: தமிழக அரசின் செய்தித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, அப்பல்லோ மருத்துவமனை இணைந்து, பத்திரிகையாளர்கள், செய்தி சேனல்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு, இன்று சிறப்பு மருத்துவ முகாமை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், காலை 8:45 மணி முதல் மாலை 4:30 மணி வரை, சிறப்பு முகாம் நடக்க உள்ளது. அமைச்சர்கள் சாமிநாதன், சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர், முகாமை துவக்கி வைக்க உள்ளனர். ரத்த அழுத்தம், சிறுநீரகம், எக்கோ, இ.சி.ஜி., முழு ரத்தப் பரிசோதனை, காசநோய் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, கண், பல், எலும்பியல், இதய மருத்துவம் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 08, 2025 07:47

பத்திரிகையாளர்கள், செய்தி சேனல்களில் பணிபுரியும் அலுவலர்கள் இவர்களைத்தவிர, அந்த பத்திரிகை அலுவலகத்தில் பலவிதமான பணிகளை செய்பவர்கள் உள்ளனர். உதாரணமாக செய்திகளை கம்போஸ் செய்பவர்கள், தவறுகளை திருத்துபவர்கள், engineering department -இல் பணிபுரிபவர்கள், accounts, marketing department, advertisement, circulation department, finally hundreds of staff who work in the printing press என்று பல நூறு அலுவலர்கள் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிகிறாரார்கள். அவர்கள் எல்லோரையும் விட்டு விட்டு, journalists அதாவது editorial and reporting department ஊழியர்களை மட்டும் சிறப்பாக கவனிப்பது முற்றிலும் சரியல்ல. அது மிகவும் அநீதியான செயல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை