உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்; இ.பி.எஸ்., காட்டம்

தி.மு.க., ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்; இ.பி.எஸ்., காட்டம்

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். தி.மு.க., ஆட்சியில் கொலை என்பது சர்வ சாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவிற்கு நிர்வாகத் திறனற்ற தி.மு.க., அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு டாக்டர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் அரசுக்கு சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம். ஆசிரியர் ரமணி கொலை வழக்கில் கைதாகியுள்ளவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், முதல்வர் வெறும் விளம்பரங்களில் மட்டுமே செலுத்தும் கவனத்தை, தன்னுடைய முதல் பணியான சட்டம் ஒழுங்கைக் காப்பதில் இனியாவது செலுத்த வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ramesh
நவ 20, 2024 22:22

உங்கள் ஆட்சியில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை போலீசாரை வைத்து பறவைகளை சுடுவது போல சுட்டு கொன்றார்களே ,பிறகு அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது நானே டிவி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்ன அருமையான முதல்வர் அல்லவா தாங்கள்


அப்பாவி
நவ 20, 2024 20:58

யாரங்கே... அந்த கொடநாடு ஃபைல்களை தூசி தட்டுங்கப்பா..


Venkateswaran Rajaram
நவ 20, 2024 20:00

இரண்டு திருட்டு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ...தமிழகத்திற்கு என்று விமோச்சனம் கிடைக்குமோ


Barakat Ali
நவ 20, 2024 19:15

திமுகவின் வாழ்நாள் அடிமைகள் பதிலுக்கு அதிமுகவை குறை கூறுவது விந்தையிலும் விந்தை .... அதிமுக சரியில்லை என்பதால்தானே உங்களது எஜமானர்களுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் ????


BALU
நவ 20, 2024 16:47

தேர்தல் வர இருப்பதால் இந்துக்களை ஏமாற்றி வாக்குகளை கொள்ளையடிக்க மீண்டும் தனது நெற்றியில் திருநீற்றைப் பூசிய எடப்பாடி.


Sivasankaran R
நவ 20, 2024 16:41

தி மு க என்கிற திராவிடக் கட்சிக்கு கொலை கட்சி என EPS சொல்வது சரியா? இன்னும் ஸ்டாலின் அய்யா அவர்கள் அந்த முதலமைச்சர் சீட்டில் உட்கார்ந்து இருப்பது நீதி துறைக்கே அவமானம் எனது சரியா ?.....இப்படியும் அரசியல் செய்கிறார்கள் .....மானங்கெட்ட அரசியல்


வைகுண்டேஸ்வரன்
நவ 20, 2024 15:01

தூத்துக்குடி யில் இ பி எஸ் கீழ உள்ள போலீஸ், இ பி எஸ் க்கே தெரியாம பண்ணிய 13 அரசாங்க கொலைகள் மாதிரி சர்வ சாதாரணம் அல்ல.


raja
நவ 20, 2024 17:42

அட கொத்தடிமையே அதுக்குத்தான் இவனுக்கு ஒட்டு போட்டு உக்காத்தி வச்சு இருக்கோம்..இவனும் அவனை பொள் தான் என்றால் அவனே மேல் அல்லவா...


Barakat Ali
நவ 20, 2024 19:13

உ பி க்களின் அறிவே அறிவு ...... விடியல் தரமுடியாதவர்கள் ஏன் பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வரணும் ????


S Srinivasan
நவ 20, 2024 14:55

why people chose DMK, this is the situation in all districts, common man do not have security in any of the following, land dealing, govt hospital, govt department (if you are not giving bribe you will be killed), revenue dept not listening to peoples vow, no security to women and girl child everything thanks to who ever voted for both dmk and aiadmk


Gokul Krishnan
நவ 20, 2024 14:30

நான் அடிக்கிர மாதிரி அடிப்பேன் நீ அழுவது போல் அழு நமக்குள் அண்டர்ஸ்டாண்டிங் யாருக்கும் தெரிய கூடாது


Perumal Pillai
நவ 20, 2024 14:03

Same side goal. Being a member of DMK how can this person accuse the governance of his own party.


சமீபத்திய செய்தி