உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காதல் மனைவி கொலை; கணவன் வெறிச்செயல்

காதல் மனைவி கொலை; கணவன் வெறிச்செயல்

பல்லடம் : கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன், 32. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் நிஷா, 24. இருவரும் காதல் திருமணம் செய்தனர். இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.இவர்கள் கரூரில் வசித்த நிலையில், நிஷா, அவ்வப்போது பல்லடத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். பல்லடத்தில் வேலை பார்த்து, அங்கேயே தங்க நிஷா விரும்பினார்.இதற்கு பாரதிதாசன் மறுத்தார். சில தினங்கள் முன் பல்லடம் வந்த நிஷா, கரூர் திரும்பவில்லை. பாரதிதாசன் அழைத்தும் அவர் வரவில்லை.நேற்று பல்லடம் வந்த பாரதிதாசன், நிஷாவை அழைக்க, வர மறுத்த அவர், தன் தாலியை கழற்றிவைத்தார். இதனால் ஆத்திரமடைந்த பாரதிதாசன், அரிவாளால் மனைவியை வெட்டிக் கொலை செய்தார். பல்லடம் போலீசார், பாரதிதாசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

K.Ramakrishnan
பிப் 12, 2024 19:26

காதலிப்பவர்களே... இது தான் காதல் படுத்தும்பாடு. காதல் மணம் செய்த பலரது வாழ்க்கை இப்படித்தான் விடை தெரியாத புதிராக உள்ளது. காதலிக்கும் முன்பு இது போன்ற நிகழ்வுகளை நினைத்துப் பாருங்கள்.. பெற்றோர்களை தவிக்க விட்டு காதல் எனும் மாயையில் விழுந்து உங்களையே மாய்த்துக்கொள்ளாதீர்கள்... வாழ்வதற்கே ஆண்டவன் படைத்தான். அதை காதலால் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.. இது தான் காதலில் வீழ்ந்தவர்களின் அவலக்குரலாக உள்ளது.


Tamila
பிப் 12, 2024 21:08

இவனை கொன்று விட வேண்டும் 3 குழந்தைகளும் பாவம் ????


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி