உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகள்: அமலாக்கத்துறை முடக்கம்

நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகள்: அமலாக்கத்துறை முடக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.மதுரையை தலைமையிடமாக கொண்டது நியோமேக்ஸ் நிதி நிறுவனம். பல்வேறு நகரங்களில் அலுவலகங்களை தொடங்கி மக்களிடம் முதலீடுகளை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள், முகவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8gryry0j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02023ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், வழக்கு பதியப்பட்டது. மதுரை ஐகோர்ட் கிளையில் நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மீதான வழக்கு நிலுகையில் உள்ளது. இந்த விசாரணையின் போது குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனத்தின் சொத்துகளை இதுவரை முடக்காதது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இந் நிலையில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; நியோமேக்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் அதுதொடர்பான வழக்கில், 2002ம் ஆண்டு PMLA விதிகள் படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் உள்ள ரூ.12.1.80 கோடி(அதன் தற்போதைய மதிப்பு ரூ.600 கோடி) மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகம் ஏப்.9ம் தேதி தற்காலிகமாக முடக்கி உள்ளது.இவ்வாறு அமலாக்கத்துறை பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mr Krish Tamilnadu
ஏப் 19, 2025 23:56

அரசும், நீதி துறையும் இதை போன்ற முதலீட்டாளர் பாதிப்புகளும் தெளிவான தீர்வு இதுவரை தந்ததே இல்லை. இந்த நியோமேக்ஸ் முதலீட்டாளர் பாதிப்புக்காவது முன் உதாரணமாக தெளிவான நிரந்தர தீர்வை தர வேண்டும். இதை போன்ற பாதிப்புகளில் தீர்வை தடுக்கும் முரணான மூன்று விசயங்கள். 1 நிறுவனம் தான் என்ற அகங்காரத்தோடு செயல்படுவது. ஒரு திருட்டில் திருடனே டொமோ செய்து காட்டுவது போல், நிறுவனத்திற்கு மட்டுமே சரியான தகவல் தெரியும். முதலீடு, முதலீட்டாளர்கள் பற்றி சரியான தகவல்களை அவர்கள் தான் தர வேண்டும். 2 அரசை பொறுத்தவரை, நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சட்ட ரீதியாக தவறு என தெரிய வரும் பட்சத்தில், நம்பி ஏமாந்தவர்களுக்கு தீர்வு தருவதை மறந்து விடுகிறது. 3 முதலீட்டாளர்கள் லாபத்துடன் கூடிய அசல் பணம் வேண்டும் என இதன் பிறகும் எதிர்பார்ப்பார்கள். சட்ட ரீதியான தவறை பிறகு பார்ப்போம் என அரசும், அசல் மட்டுமாவது வந்தால் போதும் என முதலீட்டாளர்களும், நாங்கள் ஏமாற்ற ஆசை பட வில்லை என நிறுவனமும், நாங்கள் அனைத்து தகவல்களையும் சரியாக தருகிறோம் என தந்தால் தான் தீர்வை நோக்கி செல்லும். இதிலும் பெரிய பாதிப்பை, புதிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் சந்தித்து கொண்டு இருப்பார்கள். புதியவர்கள் பலனை அனுபவிப்பதற்கு முன்பே நிறுவனத்தின் இந்த நிலை மிகப்பெரிய பாதிப்பு ஆளாக்கும். அதே போல் சிறிய முதலீடுகளும் அவர்களின் மிகப்பெரிய சேமிப்பை அளித்து இருப்பார்கள். நெடுநாள் வாடிக்கையாளர்கள் பலனை அனுபவித்து சுழற்சி முறையில் முதலீடு செய்தவர்களாக இருப்பார்கள். மிகவும் பாதிக்கப்பட்ட வர்களில் இருந்து புதிய சிறிய முதலீடுகளை திருப்ப ஒப்படைத்தலை ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் நிறுவனம் தவறு இழைத்தாலும் அரசும், நீதித்துறையும் இருக்கிறது என்ற நம்பிக்கை வரும்.


xyzabc
ஏப் 19, 2025 01:17

இந்த விஷயத்தில் திராவிட மந்திரிகளையும் check செய்தால் நல்லது. திருடர்கள் நிறைந்த இடம் அறிவாலயம்.


m.arunachalam
ஏப் 18, 2025 22:16

PACL, NEOMAX , சஹாரா மற்றும் கலைமகள் சபா இவை அனைத்திலும் வளர்ச்சியை பொறுக்காமல் அழிக்கப்பட்டதாக ஒரு கருத்தும் உள்ளது . Neomax நல்ல விதத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தது அனைவரும் அறிந்த விஷயம் .


Thetamilan
ஏப் 18, 2025 20:31

இதேபோல் நாடு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இந்துக்களிடம் இந்து மதவாத கொள்ளையர்களிடம் நாட்டு மக்கள் இழந்தது இன்றைய மதிப்பில் கோடிக்கணக்கான கோடிகள். இது போக கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசு நாட்டு மக்களை ஏமாற்றி ஓட்டுக்களை பெறுகிறார்கள் பெற்றுவிடலாம் என்று கனவும் காண்கிறார்கள்


vivek
ஏப் 19, 2025 00:09

200 ரூபாய் கைக்கூலிகள் கதறல்


Thetamilan
ஏப் 18, 2025 20:27

மக்கள் இழந்தது லட்சம் கோடி . வெறும் 600 கோடி கண்துடைப்பு நாடகம்


prakash a
ஏப் 18, 2025 20:22

Nice to hear..like this do for other company like Aarudhra, Ifs , Art, providence trading corporation...because Eow alone not solution , case will take many year.


Srinivasan Krishnamoorthy
ஏப் 18, 2025 20:06

well done. Please prosecute as much as possible. Courts may still support corrupt, but ED should be unfaced to eliminate corruption from the root, as long as DMK, Indi alliance does not come to power, one day they will be behind bars. that is for sure


Iyer
ஏப் 18, 2025 19:12

சபாஷ் பணமுடக்கம் செஞ்சாச்சு ஆனால் CONVICTION RATE ல் ED ன் PERFORMANCE கொஞ்சம் மட்டு தான். இன்னும் முயற்சி செய்யுங்கள்


GMM
ஏப் 18, 2025 18:27

தற்காலிக முடக்கம் எவ்வளவு நாட்களுக்கு?நிரந்தரமாக ஏன் முடக்க முடிய வில்லை.? இயக்குனர், பங்குதாரருக்கு மோசடி எது என்று தெரியும். மோசடியாளர்களை நீதிமன்றம் உரிய நேரத்தில் ஏன் தண்டிக்கவில்லை. ? மோசடியாளர் வழக்கு எப்படி விவாதத்திற்கு மன்றத்தில் ஏற்று கொள்ளபடுகிறது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை