யாரும் வெளியேற மாட்டாங்க... சொல்கிறார் கார்த்தி எம்.பி.,
மானாமதுரை : தி.மு.க., கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறாது என சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி கூறினார்.வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர் மானாமதுரையில் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறாது. திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியலிலிருந்து கடவுளை, மத நம்பிக்கையை தள்ளி வைக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது நல்ல அறிவுரை. மதம், கடவுள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை அரசியலில் சேர்க்கக்கூடாது.காவிரி நதிநீர் பிரச்னை குறித்து 2 மாநிலங்களும் பேசி தீர்க்கலாம். காங்., தலைவர் கார்கே மற்றும் ராகுலுக்கு ஆர்.எஸ். எஸ்.,நோட்டீஸ் அனுப்பியது வாடிக்கை தான். ஒரே நாடு, ஒரே தேர்தல் நிறைவேறாது. இந்த சட்டம் வராது. இவ்வாறு கூறினார்.