வைகையில் நீர் திறக்க உத்தரவு
சென்னை:வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு, கிருதுமால் உப வடிநிலத்திற்கு, குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக நீர் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1.68 டி.எம்.சி., நீரில், நாளை முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் 0.45 டி.எம்.சி.,க்கு மிகாமல், நீரின் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.