உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெற்றோர் தான் பொறுப்பு: போதை பிரச்னைக்கு தீர்வு சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

பெற்றோர் தான் பொறுப்பு: போதை பிரச்னைக்கு தீர்வு சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி :தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. போதையில் சிறுவர்கள் வன்முறையில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தீர்வாக, ''பெற்றெடுத்த பிள்ளைகள் போதையின் பாதையில் செல்லாமல் இருக்க, அவர்களை பெற்றோர் தான் கண்காணிக்க வேண்டும்,'' என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், போதை பொருட்கள் கடத்தலை தடுப்பது, மத்திய அரசின் பொறுப்பு என்றும் விளக்கம் அளித்துள்ளார்.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை திருச்சியில் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்த, தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் பேசியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=juotz6it&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 போதை பொருள் ஒழிப்பு மற்றும் ஜாதி, மத மோதல் தடுப்பை வலியுறுத்தி வைகோ துவக்கியுள்ள நடைபயணம், மாபெரும் வெற்றி பெற வேண்டும்.

போதை மாத்திரைகள்

இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை பொருட்களை நிச்சயம் ஒழிக்க வேண்டும். அதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு ஓரளவிற்கு பலன் கிடைத்துள்ளது. போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள், அதன் பாதிப்புகளை உணர்ந்து, அந்த பழக்கத்தை கைவிட வேண்டும். அவர்களது குடும்பத்தினர், அவர்களை திருத்த வேண்டும்.போதை பொருட்களின் புழக்கம் என்பது மிகப் பெரிய 'நெட்வொர்க்' ஆக உள்ளது. இந்த நெட்வொர்க்கை அழிக்க, மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். நாட்டின் எல்லைக்குள் போதை பொருட்கள் வருவதையும், மாநிலம் விட்டு மாநிலம் கடத்தப்படுவதையும், மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். அதற்கு, அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைக்க வேண்டும்.கடந்த சில மாதங்களில், திருவள்ளூர், வேலுார், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகள் பிடிபட்டன. இதில் சம்பந்தப்பட்டவர்கள், மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இன்னும் சில வழக்குகளில், குற்றவாளிகள் நைஜீரியா, செனகல் போன்ற நாடு களைச் சேர்ந்தவர்கள்.

தவறில்லை

இப்படிப்பட்ட 'நெட்வொர்க்கை' ஒழிக்க அனைவரும் கை கோர்க்க வேண்டும். போதை பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க, மத்திய அரசு மற்றும் அண்டை மாநில காவல் துறையினருக்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. போதை ஒழிப்பு என்பது, சமூகத்தின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் படைப்புகளை உருவாக்க வேண்டும். போதையின் தீமைகளை சொல்வதில் தவறில்லை; அதை நியாயப்படுத்துவது, தலைமுறையையே சீரழித்து விடும். பெற்றோர் தங்கள் குழந்தை மேல் பாசம் காட்ட வேண்டும். அதற் காக, அவர்கள் பாதை மாறிப் போகும்போது வேடிக்கை பார்க்கக் கூடாது. 'யு டியூப், இன்ஸ்டா ரீல்ஸ்' வாயிலாக எளிதில் கிடைக்கும் பணம், பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, பெற்றோர் குழந்தைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும். அம்மா, அக்கா, தங்கை என, வீட்டில் இருக்கும் சொந்தங்கள், நம் வீட்டுப் பிள்ளைகள் வழிதவறி செல்லாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். ஆசிரியர்கள், சமூக வலைதள பிரபலங்கள், போதைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். போதைக்கு அடுத்து, நாட்டின் முக்கியமான பிரச்னை, ஜாதி மற்றும் மத மோதல்கள் தான். மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்பான பதவிகளில் இருப்போர் கூட, இரு பிரிவினருக்கு இடையே, மோதலை துாண்டும் விதமாக வெறுப்பு பேச்சு பேசுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

'டாஸ்மாக்' கடை: முதல்வர் மவுனம்

போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து நீண்ட நேரம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''போதை பொருட்கள் கடத்தலை, மத்திய அரசு தான் தடுக்க வேண்டும்; அவை இந்தியாவுக்குள் வரும் நுழைவாயிலை அடைக்க வேண்டும்,'' என மத்திய அரசை குற்றஞ்சாட்டினார். ஆனால், தமிழக அரசு நடத்தும் 'டாஸ்மாக்' மதுக் கடைகள் குறித்தோ, கடைகளின் எண்ணிக்கையையும், கடைகள் திறந்திருக்கும் நேரத்தையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்தோ, முதல்வர் எதுவும் பேசவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Palanisamy Sekar
ஜன 03, 2026 02:33

பெற்றோர்கள்தான் கண்காணிக்கணுமாமே .. அந்த பெற்றோர்களுக்குத்தானே ஊற்றி கொடுத்து பணத்தையெல்லாம் பிடுங்கி கொண்டீர்கள். அப்புறம் எப்படி அந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணிப்பது கண்டிப்பது? ஆட்சியா இது அலங்கோலத்தில் அசிங்கப்பட்டு நிற்கின்றது. மக்களிடையே இதுவரையில் இல்லாத அளவுக்கு திமுக எதிர்ப்பு அலையானது எங்கு பார்த்தாலும் காண முடிகின்றது. இந்த வாய்ப்பினை எதிர்கட்சிகள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் திமுகவுக்கு எதிரான பெருமான்மையான வாக்குகள் எல்லாம் சிதறிப்போய் மீண்டும் தீயசக்திக்கே வாய்ப்பாக அமைந்துவிடும். ஈகோவை விட்டுவிட்டு ஒன்றுபட்டு திமுகவை எதிர்த்தால் போதும் ஒட்டுமொத்த திமுகவின் கூட்டணி தீயசக்திகளை விரட்டிவிடலாம் பணத்தால் விலைக்கு வாங்கிடலாம் அப்பாவி ஜனங்களை என்கிற மமதையில் உள்ள திமுகவை விரட்ட ஒன்றுபட்டு செயல்பட சிந்திக்க வேண்டும்.


Palanisamy Sekar
ஜன 03, 2026 02:27

பெற்றோர்தான் கண்காணிக்க வேண்டுமாம். பொறுப்புள்ள முதல்வர் பேசுகின்ற பேச்சா இது? இதே வைகோ கழகத்துடன் இல்லை என்றால் இந்நேரம் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்டிருப்பார் வார்த்தைகளால். வாட்ச்மேன் வேளைக்கு கூட லாயக்கில்லாதவர் இந்த ஸ்டாலின் என்று தயக்கமே இல்லாமல் விமர்சித்தவருக்கு ஸ்டாலினின் இந்த பேச்சால் கொதித்திருப்பார். என்ன செய்ய பிள்ளை பாசத்தில் தான் ஒரு கிறிஸ்துவர் என்பதால் இந்துக்களின் நம்பிக்கையை பற்றி பேசி மத மோதலை தூண்டுகின்றார்களே. ஓட்டுக்காக மத மோதலை தூண்டுகின்ற இவர்களையெல்லாம் மத தலைவர்கள் அடையாளம் கன்டுகொண்டார்கள் இனி இந்த வாயால் சுடுகின்ற வடை விற்க முடியாது என்பதை ஸ்டாலின் விரைவில் புரிந்து கொள்வார்.


Palanisamy Sekar
ஜன 03, 2026 02:23

திமுக ஆட்சிக்கு வரணும்ன்னு நினைத்தாலே மாநிலத்தில் சாதி மோதலை தூண்டுவார்கள். ஆட்சில் இல்லை என்றால் ஆங்காங்கே சாதி மோதலை தூண்டுவது என்பது கடந்தகால கழகத்தின் வரலாறு. இப்போ இதுவரை எங்கும் சாதி மோதலே இல்லை. திமுக தோற்பது உறுதி என்று தெரிந்தால் போதும் இப்போது சில சாதிகளை தூண்டிவிடுவார்கள்.. இருக்கவே இருக்கின்றார் சாதித்தலைவர் திருமா. இன்னோர் இரண்டு சீட்டு கொடுக்கின்றோம் என்றால் அவர் தயார்தான் சாதிமோதல் தூண்ட. தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை பொறுக்க மாட்டாமல் மத மோதலை தூண்டிவிடுகின்றார் ஸ்டாலின் . அதற்கு ஜவகர் போன்ற ஒருவருட சிறை தண்டனை பெற்ற நிலையில் கைது செய்யாமல் இருக்க அவரைப்போன்ற சிலரை பகடைக்காயாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கின்றார் போலும் இன்னும் சில தினங்களில் ஸ்டாலின் சொல்வதை இந்த விஷயத்தில் நிறைவேற்ற போகிறார் என்று எதிர்பார்க்கலாம். ஐந்தாண்டு சுகபோக வாழ்க்கையை அனுபவித்துவிட்டார். அந்த ஓசி சுகத்துக்காக இப்படியெல்லாம் பேசி பயமுறுத்துகின்றார் அப்பாவி ஜனங்களை. உஷார் மக்களே.


Palanisamy Sekar
ஜன 03, 2026 02:17

இந்த யூடுயூப் பார்க்கின்ற பழக்கத்தை கைவிட வேண்டும் போங்க..அதுவும் ஒரு போதைதான். இந்த வைகோவின் ஸ்டாலின் பற்றிய பேச்சுக்களை கேட்கும்போது மனிதருக்கு கடந்த கால பேச்செல்லாம் மறந்துபோயி வாரிசு மேலே வந்த கொள்ளைப்பாசத்தில் மீண்டும் நடைப்பயணமாம்.. நகைச்சுவைகள் கும்பல்கள் இந்த வாரிசு அரசியலில் போதைக்கு அடிமையானவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் போதை போல. வைகோவுக்கு வாரி அரசியலும், சேர்ந்துவைத்துள்ள ஏகப்பட்ட சொத்துக்களும் கட்சியின் பெயரில் தனது கையைவிட்டு போகாமல் பார்த்துக்கொண்டு மல்லை சத்யா போன்ற தியாகிகளையெல்லாம் துரத்திவிட்டு வாரிசு அரசியல் போதையில் அம்னீசியா தாக்கத்தில் நடக்கப்போகிறார் அதற்கு சாராய ஆட்சியாளர்கள் வாழ்த்துரை வழங்குகின்றார்களாமே. சிரிக்க சிரிக்க எழுதுகின்றேன் இவர்களை நினைத்து நினைத்து ..ஆஸ்கார் அவார்டுகளை ஒட்டுமொத்தமாக இவர்களுக்கே கொடுக்கவேண்டும்


தாமரை மலர்கிறது
ஜன 03, 2026 02:15

முதல்வருக்கு எந்த பொறுப்பும் இல்லை என்றால், போலிஸ் துறை எதற்கு?


Palanisamy Sekar
ஜன 03, 2026 02:12

கஞ்சாவை அரசு ஆஸ்பத்திரியிலே வளர்வதை காணொளியில் பார்த்துட்டோம்.. இதுதான் இன்றைய தமிழகம். வகை வகையான சாராயங்களும் அதனை தயாரிப்ப்பதும் இந்த கழகம்தானே அதிகம் பேர் உள்ளனர். ஏன் பொறுப்புள்ள அப்பா அதனை மூட வேண்டியதுதானே? ஏன் பணம் பாதாளம் வரை பாய்ந்துகொண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக சம்பாதிக்க முடியாத நிலையில் கிடைத்த இந்த ஆட்சியை வைத்து சாராயத்திலும் போதையிலும் தான் அதிகம் சம்பாதிக்கின்றார்கள் கழக உ பிக்கள். அதனை கொண்டுதான் ஆங்காங்கே உள்ள தொகுதிகளில் பணத்தை கொடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் கஞ்சா கடத்தப்படுகின்றது, மேலும் மலைப்பகுதிகளில் வளர்க்கப்படுகின்றது. இதனை தடுக்க வேண்டியது யார் பொறுப்பு? மத்திய அரசாங்கமோ? இவர்கள் சம்பாதிப்பார்களாம் போதை மருந்துகளை விற்று. ஆனால் தடுக்க சொல்வது மத்தியில் இருப்பவர்களையும். நல்ல நியாயம் போங்க சர்வாதிகாரி அவர்களே. என்ன செய்வது நம்ம ஊரு போலீசுக்கு சமூக ஊடக நபர்களை தேடி தேடி கைது செய்வத்தார்க்கே நேரமில்லை என்கிறபோது ஸ்டாலின் கேட்பதும் நியாயம் தான் என்று 200 ரூபாய்க்கு மாரடிக்கும் உ பிக்கள் சொல்வார்கள்


Palanisamy Sekar
ஜன 03, 2026 02:06

சாராயக்கடையை நடத்தியும் கூட கள்ளச்சாராயம் எப்படி தயாரிக்க முடிந்தது? அதனை குடித்த அப்பாவி கூலி தொழிலாளர்களில் 69 பேரின் மரணத்துக்கு மத்திய அரசுதான் காரணமா? அதற்கு காரணமானவர்கள் ஆளும் திமுக கரைவேஷ்டிகள் தான் என்பதும் தெரிந்தும் கூட வெறும் சிறை தண்டனையோடு நிறுத்திய பெருமை இந்த திராவிட மாடல் அரசுக்குத்தானே சேரும். சர்வாதிகாரியாக இருப்பேன் என்றவர் அங்கே சென்று துக்கம் விசாரிக்க கூட செல்லவில்லையே ஏன்? இதுதான் ஒரு அப்பாவின் பொறுப்புணர்வு ?


Palanisamy Sekar
ஜன 03, 2026 02:02

சென்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினின் தங்கச்சி என்ன சொன்னார்கள்? இந்தியாவிலேயே இளம் வயது விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்று சொல்லி நீலிக்கண்ணீர் வடித்த அவரும் கூட என்ன சொன்னார்? கழகம் ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே டாஸ்மாக் மூடுவதுதான் என்கிறார். மக்களும் அப்படியே புல்லரித்துப்போய் வாக்குகளை எல்லாம் கழகத்துக்கே வாரி வழங்கினார்கள். ஆனால் விதி பாருங்கள் எப்படி விளையாடிவிட்டது என்று. டாஸ்மாக்கில் கொழிக்கும் கோடானு கோடி பணத்தில் போதையால் மயங்கிப்போய் அந்த கனி அக்காவே சொந்தமாக சாராய ஆலையையே மக்களுக்காக திறந்து சமூக சேவை செய்கின்றார் என்றால் அண்ணனும் தங்கச்சியும் தமிழக மக்களை எந்த அளவுக்கு எடைபோட்டு வாயால் வடை சுட்டுக்கொண்டே இருக்கின்றார் பாருங்கள். இப்போ சொல்லுங்கள் யார் மீது தவறு என்று? வருடந்தோறும் 45 ஆயிரம் கோடி வருமானம் கொழிக்கின்றது என்றால் அதுகூட ஆட்சியாளர்களுக்கு போதையை கொடுக்கும்தானே? அந்த போதையை யார் தடுபப்து? வைகோ அவர்களா? அல்லது கம்யூனிஸ்டுகளும் திருமாவுமா?


Palanisamy Sekar
ஜன 03, 2026 01:56

சாதிகபாட்சா என்கிற போதை கடத்தல் நபரை கட்சியில் சேர்த்துக்கொண்டு அவருக்கு இளைஞர் அணியில் பதவியையும் கொடுத்து அழகுபார்த்த ஸ்டாலின் அவரிடமிருந்து பிறந்தநாள் அன்று காசோலையை வாங்கி அதில் உள்ள தொகையை பார்த்ததை உலகே பார்த்ததே மறந்து போயிற்றோ? மத்திய போதை தடுப்பு பிரிவு கைது செய்தபோது அவரை ஜாமீனில் எடுத்தது கழக வக்கீல் அணிதானே? அப்பா என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஸ்டாலினுக்கு அந்த போதை ஆசாமியை ஏன் திருத்த முற்படவே இல்லை. கேட்டால் பதில் இருக்காது மாறாக போலீசில் புகார் கொடுக்காமேல் கைது செய்ய துடிப்பார். டாஸ்மாக்கில் இப்போதெல்லாம் போதை இல்லை என்று சிலர் சொல்ல கேள்விப்பட்டுள்ளேன். அதை எதிர்க்கட்சிகள் வேண்டுமானால் கள்ள சாராயம் என்று சொல்வார்கள் ஆனால் அதில் சத்து டானிக் தருகின்றோம் என்று சொல்வாரா?


Palanisamy Sekar
ஜன 03, 2026 01:50

ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் போதை போல. அப்பான்னு தன்னை எல்லோரும் அழைப்பதை கேட்கும்போது உள்ளபடியே மனசு சந்தோசப்படுகின்றது என்று அவரே அவரை அழைத்துக்கொள்வது கூட ஒருவகை விளம்பர போதைதான் போலும். ஆனால் அந்த அப்பாவுக்கு பிள்ளைகளை திருத்த மட்டும் மனசு வரவில்லையோ? சென்ற தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்? கழகம் ஆட்சியில் வந்ததும் முதல் கையெழுத்தே டாஸ்மாக் மூடுவதுதான் என்கிறாரே.. அதன்பிறகு அதில் வருகின்ற கோடானு கோடி வருமானத்தில் மயங்கிப்போய் அந்த போதையில் தடுமாற்றம் கண்டு கையெழுத்தை போட இதுநாள்வரை மறந்துகொண்டே இருக்கின்றார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை